Saturday, October 31, 2015

சித்த மருந்துகளில் உலோகங்கள் சேர்ப்பதால் கிட்னி பாதிக்கும் என்று சொல்வது உண்மையா? - மருத்துவர் கு.சிவராமன்

புதிதாக யாரிடமாவது சித்த மருத்துவம் பற்றியோ, குறிப்பிட்ட ஒரு பிரச்சினைக்குச் சித்தத்தில் நல்ல மருந்து இருக்கிறது என்றோ சொன்னால், உடனடியாக அவர்களுடைய எதிர்வினை என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? படித்தவர் முதல் பாமரர்வரை உடனடியாக வேதியியல் பேராசிரியர்போல மாறி ‘அதில் மெட்டல் கலக்கிறார்களே. அதெல்லாம் சரிதானா என யோசிப்பார்கள். மக்களிடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் இந்த மூடநம்பிக்கை தற்போது வேறொரு தளத்துக்குச் சென்றுவிட்டது.

மருத்துவர் யார்?
‘சித்த மருந்துகளில் மெர்குரி கலந்திருக்கிறது' என்றொரு சர்ச்சைக்குரிய செய்தி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் சமீபகாலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது. நாளிதழ் ஒன்றிலும் அந்தச் செய்தி வெளியாகியுள்ளது. இதற்குப் பின்னூட்டமாக ‘சித்த மருந்துகள் எதுவும் தரநிர்ணயம் செய்யப்படாதவை' என்பது போன்ற அவதூறுகளும் வேகமாகப் பரவி வருகின்றன.
மருத்துவ முறை வழிகாட்டுதலின்படி ஒரு நோயாளியின் சிகிச்சை அறிக்கையின் அடிப்படையில், மருந்துகளால் ஏற்படும் எந்த ஒரு பின்விளைவும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை (Pharmacovigilance) எடுக்கப்பட வேண்டும். இது சித்த மருத்துவத்துக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்ச்சைக்குரிய சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டத்தைப் பெற்ற சித்த மருத்துவராகவோ, பாரம்பரியச் சித்த மருத்துவராகவோ தெரியவில்லை. அந்த மருத்துவரின் தகுதி குறித்து முறைப்படி விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, மருந்துகளைப் பரிந்துரைக்கத் தகுதி இல்லாத போலி மருத்துவர் ஒருவர் செய்த தவறுக்கு, ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையையே நம்பிக்கையற்ற ஒன்றாக ஊடகங்களில் சித்தரிக்கும் போக்கு வருத்தம் தரும் அதேநேரம், கண்டிக்கத்தக்கதும்கூட..

வேர், மூலிகை
அந்தச் சர்ச்சையில் குறிப்பிட்டுள்ள மிகவும் தவறான பொய்ச் செய்தி, ‘எல்லாச் சித்த மருந்துகளும் செய்து முடித்த பின்னர் மெர்குரியை (பாதரசத்தை) கலந்து தருகிறார்கள்' என்பதுதான். அப்படி ஒரு வழக்கம் எந்தச் சித்த மருத்துவச் செய்முறையிலும் கிடையாது. பொதுவாகவே சித்த மருந்துகளில் கனிமங்களின் பயன்பாடு மிகவும் சொற்பம். அப்படியே இருந்தாலும் முக்கிய, நாட்பட்ட, பிற மூலிகைகளால் குணப்படுத்த இயலாத நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படும் உயர் சித்த மருந்துகளில் மட்டும்தான் உள்ளது.
"வேர்பாரு தழைபாரு, மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே"- என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை இலக்கணம். அதன்படி வேர், மூலிகைகள் ஆகியவற்றைக்கொண்டு ஒரு நோயைத் தீர்க்க இயலாதபட்சத்தில் கடைசிப் பெருமருந்தாக மட்டுமே உப்புகளை, கனிமங்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளைச் சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட சம்பவத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், மருந்துகளைச் செய்துமுடித்துவிட்டு ஒருபோதும் கனிமங்கள் கலக்கப்படுவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. மாறாக, ஒரு சில உயர் மருந்துகளில் மருத்துவ மூலப்பொருளாக மட்டுமே சில கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கனிம உருமாற்றம்
சித்த மருத்துவம் மட்டுமில்லாமல் ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, ஏன் பெரும்பாலோர் நம்பும் நவீன மருத்துவத்திலும்கூட நேரடி கனிம - ரசாயன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே சில மருந்துகளின் செய்முறைகள் தொடங்கப்படுகின்றன. அந்தந்த மருத்துவத் தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி (National Pharmacopoeia / Formulary Guidance) கடைசியில் அம்மருந்துகள் முறைப்படியான மருந்து வடிவத்தை வந்தடைகின்றன. கடைசியாகப் பயனுக்குரிய மருந்தாக அது மாறும்போது, கனிம மூலக்கூறு வடிவில் இல்லாமல் உப்புகளாக, உடலுக்குத் தீங்கு செய்யாத வடிவத்துக்கு மாறியும் இருக்கும்.
பல்வேறு மூலிகைச் சாறுகளில் பல மணி நேரம் ஊற வைத்தும், பல நாட்கள் அரைத்தும், சாண வறட்டியில் புடமிட்டும்தான் இம்மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பத்தில் பல்லாயிரம் டிகிரி மிகை வெப்பத்திலும், பெரும் அழுத்தத்திலுமே நானோதுகள்களைப் பெற முடியும் என்றுள்ள நிலையில், 100 வறட்டிகளை வைத்துப் புடமிட்டு ஒரு உயர் கனிமத்தை நானோதுகள்களாகப் பெற்ற சித்த மருத்துவ நுட்பத்தை நவீன விஞ்ஞானம் இன்றைக்கும் மெய்சிலிர்த்துத்தான் பார்க்கிறது. இப்படிப்பட்ட நவீன நானோதுகள்களின் மருத்துவப் பயன்கள் ஏராளம்.

உறுதிப்படுத்தும் ஆராய்ச்சி
கனிமங்களை மூலப்பொருளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மருந்துகள், நானோ துகள்களாக நுண்மையடைந்து மருந்தாக மாறுவதைப் பல மருத்துவ நூல்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் (Standardization of Metal-Based Herbal Medicines, American Journal of Infectious Diseases 5 (3): 200-206, 2009 ISSN 1553-6203 © 2009 Science Publications Corresponding Author: Arun Sudha, Indian Institute of Technology Madras, Chennai- 600 036), பெரும்பாலான மூலிகைகளில் உள்ள கனிமங்கள் உடலைப் பாதிக்காத ஆக்சைடு மற்றும் சல்பைடு வடிவத்தில் மாறுவதாகவும், நேரடியாகக் கனிமங்களை வைத்தே செய்யப்படும் மருந்துகளும்கூட நானோதுகள்களைப் போன்ற நுண்ணிய அளவில் இருப்பதையும் உறுதிசெய்துள்ளது.

அது மட்டுமல்லாமல் மெர்குரி (பாதரசம்), கந்தகத்தை வைத்துச் செய்யப்படும் மிக முக்கியமான சித்த மருந்தான ரசகந்தி மெழுகு குறித்து இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. குஜராத் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் உயரிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆய்வு நிறுவனமும், நவீன ஆய்வு வழிகாட்டுதலின்படி ஒரு நீண்ட ஆய்வை நடத்தி, ரசகந்தியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சென்னையில் இயங்கிவரும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான மறைந்த பேராசிரியர் சரஸ்வதி நடத்திய ஓர் ஆய்வில், பாதரசத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்து மிகப் பாதுகாப்பானது என நிறுவப்பட்டுள்ளது (அந்த முடிவுகள் இன்னும் நூலாக வெளியிடப்படாமல், அரசு ஆவணமாகவே உள்ளன).

வியந்த உலகம்
மறைந்த நவீன மருத்துவப் பேராசிரியர் செ.நெ. தெய்வநாயகம், இதே ரசகந்தி மெழுகைக் கொண்டுதான் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸ் கிருமிகள் கட்டுப்படுத்தப்படுவதையும், நோய் எதிர்ப்பாற்றல் பெருகுவதையும் பற்றி நீண்ட ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வு JAPI எனும் மருத்துவ இதழில் வெளியாகி, உலக மருத்துவத்தின் கண்கள் சித்த மருத்துவத்தின் பக்கம் திருப்பப்பட்டன.
இதைத் தாண்டி கனிம மூலப்பொருளைக் கொண்டு செய்யப்படும் பல மருந்துகள்தாம் புற்றுநோய் முதலான சவாலான நோய்களுக்கான மிக முக்கிய சித்த மருந்துகள். Acute promyelocytic leukemia எனும் புற்றுநோய்க்கு இன்றளவும் பெரும் நச்சாகக் கருதப்படும் பாடாணங்களை (Arsenic trioxide) கொண்டு செய்யப்படும் சீன மருந்துகளின் பயன், உலகளவில் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத் தரம்வாய்ந்த British Journal of Haematology எனும் மருத்துவ இதழில், இதன் பயன் குறித்துக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்கள் (Mathews V, Chandy M, Srivastava A. Arsenic trioxide in the management of acute promyelocytic leukaemia. Natl Med J India. 2001;14(4):215-22) கட்டுரையில் கிடைக்கின்றன.

தேவையற்ற குழப்பம்
இன்று சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் அரசு பதிவுபெற்ற சித்த மருந்துகளில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் (AYUSH- Good Manufacturing Practice guidelines) சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரநிர்ணயத்தின் அடிப்படையிலேயே கனிமங்களின் அளவு, வடிவம், செய்கை, நச்சற்ற பாதுகாப்பு நிலை போன்றவை இருந்தாக வேண்டும். ஒவ்வொரு மருந்து தயாரிப்பு நிறுவனமும் அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை (Quality assurance) மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும். இதில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய Pharmacovigilance முறை மத்திய, மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் எதைப் பற்றியும் அறியாமல், சர்ச்சைக்குரிய சம்பவத்தை விவரிக்கும் செய்தி போலியாய் எச்சரிப்பது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறையைக் களங்கப்படுத்தும் தொனியிலும், சித்த மருத்துவப் பயனாளர்களைக் குழப்பத்தில் தள்ளும் வகையிலும் உள்ளது.

எத்தகைய மாற்றம் தேவை?
அறம் சார்ந்து சித்த மருத்துவத்தை மேற்கொண்டுவரும் சித்த மருத்துவர்களால் மக்களுக்கு, மருத்துவப் பயனாளிகளுக்கு எவ்விதத் தீங்கும் நிகழக் கூடாது என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. அதற்குச் சித்த மருத்துவம் தொடர்பாக உலகத் தரத்துடன் Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்தப்படவேண்டும் என்பதுதான் சித்த மருத்துவத்தை மேம்படுத்த நினைக்கும் பெரும்பாலோரின் நிலைப்பாடும் முயற்சிகளும்.

ஒரு மருந்து பழமையானது என்பதாலோ, நம்முடைய மரபு என்பதாலோ கொண்டாடாமல், Reverse pharmacology முறையில் நடத்தப்படும் ஆய்வுகளில் தவறென்று தெரியவரும் எந்த மருந்தையும் விலக்கி வைக்கவும் நவீன காலச் சித்த மருத்துவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
ஆனால், அதேநேரம் நம் நாட்டு மருத்துவ முறைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் அவசரமாக இன்றைக்கு வலிந்து வலியுறுத்தப்படும் தரநிர்ணயத்தின் பின்னணியில் பெரும் அரசியல் உள்ளதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தரநிர்ணயங்கள் மக்கள் நலனை மையப்படுத்தியவை அல்ல. பெரும் வணிகச் சந்தையை மையப்படுத்தியவை என்ற உண்மையையும் சேர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே மரபு மருத்துவ முறைகள் முக்கியத்துவம் பெற்றுவரும் பின்னணியிலேயே இது வலியுறுத்தப்படுகிறது.

நமது மரபு மருத்துவ முறைகள் சார்ந்து Reverse pharmacology முறையில் ஆய்வு நடத்த அரசிடம் வலியுறுத்துவது அவசியம். அப்படியல்லாமல், ஒரு சில போலி சித்த மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த சித்த மருத்துவத் துறை மீது பழிசுமத்துவதும் அந்தத் துறையையே பலியிடச் சொல்வதும் எந்த வகையில் நியாயம்? காலம்காலமாகப் புடம் போடப்பட்டுவரும் சித்த மருத்துவத் தத்துவங்களையும், நெடுங்காலமாகப் பயனில் உள்ள ஆவணங்களையும், அவசரஅவசரமாகப் புறந்தள்ளி, நவீன மருத்துவம் காட்டும் மாற்றத்துக்குரிய ஆய்வுகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது கோடிக்கணக்கான சாமானியர்களுக்கு பயன்பட்டுவரும் சித்த மருத்துவத்தை வீணாகத் தூற்றுவதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் 
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

Sunday, October 25, 2015

ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?

பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம் டன் பருப்பை இறக்குமதி செய்யப் போவதாக அறிவித்தது. உலக சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கும் பருப்பை தனியார் இறக்குமதியாளர்கள் வாங்கி அரசிடம் 130 ரூபாய்க்கு விற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு இயந்திரம் திடீரென் விழித்துக் கொண்டது போல ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகள் நடத்திய சோதனையில் 75 ஆயிரம் டன் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் பரப்பரப்பாக வெளிவருகின்றன. அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

இந்தியா முழுவதும், 13 மாநிலங்களில், 6077 இடங்களில் அரசுகள் சோதனை செய்தன. அதில் மஹாராஷ்ட்ராவில் மட்டும் 46 ஆயிரம் டன்னும், கர்நாடகத்தில் 8755 டன்னும், பீகாரில் 4933 டன்னும், சத்தீஸ்கரில் 4500, தெலங்கானாவில் 2546, மத்தியப் பிரதேசத்தில் 2295, ராஜஸ்தானில் 2222 டன் என்று ஆயிரக்கணக்கில் பருப்பு வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அரசு வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதுக்கல் கைப்பற்றல் செய்திகளின் பின்னால் வேறு எதுவும் இருக்கிறதா என்று 'தனி ஒருவன்' படத்தில் ஜெயம் ரவி சொல்வது போல நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. சேம்பிளுக்கு சில கேள்விகள்.

ஒரே வாரத்தில் பரபரப்பாக செயல்பட்ட அரசு இயந்திரம் 75 ஆயிரம் டன் பருப்பு வகைகளை பிடித்துள்ளது. அப்போ இவ்வளவு நாள் அரசு செயல்படாமலேயே இருந்ததா ? அல்லது பதுக்கல்களை கண்டுகொள்ளாமல் இருந்ததா ?

பதுக்கல் சோதனைகளில் ஏன் பருப்பு தவிர, அரிசி, கோதுமை போன்ற எந்தப் பொருட்களும் பிடிபடவில்லை ? பருப்பு பதுக்கல்காரர்களை மட்டும் குறிவைத்து சோதனை நடத்தினார்களா ? பதுக்குபவர்களில் பருப்பு மட்டும் கடத்துபவர், வேறு எதையும் கடத்தவே மாட்டாரா ?

6 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் எத்தனை பேர் பிடிபட்டனர். ஏன் ஒருவரது புகைப்படம் கூட செய்தித் தாளிலோ அல்லது சேனல்களிலோ காட்டப்படவில்லை? ஒருவேளை இந்தப் பதுக்கல் பிடிப்புக் கணக்கு மக்களுக்கு காட்டப்படும் பொய்க்கணக்கா ? ஒரு சாதாரண பைக் திருடனை, செயின் திருடனை பத்திரிக்கையில் போட்டோ போட்டு, சேனல்களில் சுற்றிச் சுற்றிக் காட்டும் மீடியாக்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தையே அசைக்கும் இந்தக் கேடிகளில் ஒருத்தருடைய போட்டோ கூடவா கிடைக்கவில்லை ?

பதுக்கியவர்கள் எல்லோரும் தனிப்பட்ட ஆட்களா ? நிறுவனங்களே இல்லையா ? சில பல டன்களை தனியாக ஒரு ஆள் கடத்தி விட முடியுமா ? தனியார் நிறுவனங்கள் தான் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் உணவுப் பதுக்கலில் ஈடுபட்டால் அது குற்றமாக கருதப்படாதா ? அல்லது ஏன் பதுக்கலில் ஈடுபட்டது என்று ஒரு நிறுவனத்தின் பெயரையும் பேப்பரில் போடவில்லை அரசு ?

இது பற்றி ஏன் ஒரு மாநில அரசு கூட வாய் திறக்கவில்லை ? 45 ஆயிரம் டன் பதுக்கலை கண்டு பிடித்த மஹாராஷ்டிரா முதல்வர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. மோடி வாய் திறக்கவில்லை. ஆனால் அரசு பிடித்தது என்று செய்தி மட்டும் வருகிறது. அப்போ உண்மையிலேயே இதெல்லாம் பதுக்கல் கைப்பற்றல் கணக்கா ? இல்லை, நாங்களும் செயல்படுகிறோம் பாருங்கள் என்று மக்களுக்குக் காட்ட அரசு சும்மா வெளிவிடும் செய்தியா ?

யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்.

Monday, October 12, 2015

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஒரு வழியாக கைவிட்டது அரசு!

காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை எடுத்துத்தான் நமக்கு கேஸ் சிலிண்டர்களில் அடைத்து சமையல் எரிவாயுவாக விற்கிறார்கள்.
சரி. நல்லது தானே. அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  இருக்கிறது. அந்த வாயுவை எப்படி எடுக்கிறார்கள். அந்த வாயுவை அப்படி எடுப்பதால் பாதிக்கப்படுவது என்னென்ன போன்ற விஷயங்கள் இதை ஒரு ஆபத்தான விஷயமாக்கி இருக்கின்றன.
மீத்தேன் வாயுவை மேலே கொண்டு வர பெரிய ஆழ்துளைக் கிணறுகள் போடுவார்கள். பின்பு அதில் மிகுந்த அழுத்தத்துடன் டன் கணக்கில் தண்ணீர், மண் கலந்த கலவையைக் கொண்டு அடிப்பார்கள். அதில் பாறைகளிடையே துளைகள் ஏற்பட்டு வாயுக்கள் வெளியே வரும். இந்தக் கலவையை தொடர்ந்து சுவாசித்தால் கேன்ஸர் கன்பர்ம். சுற்றுப் புறச் சூழலுக்கும் பெரும் கேடு. இந்த வாயு வெளியேற்றத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இன்னும் மோசமாக நிலத்தடியில் உள்ள பாறைகளைத் துளையிட்டு பொருட்களை வெளியேற்றி வெற்றிடமாக்குவதால் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகள் ஏற்கனவெ 1957லிருந்து உலகெங்கும் பிரயோகித்து பல நாடுகளில் பாதிப்புகள் ஏற்ப்பட்டிருக்கின்றன. இப்போதுதான் இதற்கென உலக அளவில் ஒரு கண்காணிப்புக் குழுவை போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஹரியானாவைச் சேர்ந்த கிரீன் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற பன்னாட்டுதனியார நிறுவனத்திற்கு லைசென்சு வழங்கியிருந்தது. ஆனால் காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் எதிர்காலம் பாழாகப் போவதை உணர்ந்து தொடர்ந்து போராட, அவர்களுக்கு சமூகவியல் ஆர்வலர்களும், இடதுசாரிகளும் விழிப்புணர்வு ஊட்ட கடைசியில் வேறு வழியின்றி அரசு இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் முடிவுகள் இந்தத் திட்டத்தின் தீய விளைவுகள் கிடைக்கும் எரிவாயு நன்மையை விடப் பல நூறு மடங்கு தீயது என்று அறிக்கை கொடுத்ததைத் தொடர்ந்து அரசு மீத்தேன் எடுக்க இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அந்த தொழில்நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையின் படி அரசு முடிவெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, October 8, 2015

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு 'தண்ணி' காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய  ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள் சிகரெட்டுக்கு எதிராக முடுக்கி விடும் கடுமையான பிரச்சாரங்கள் ஆகும்.

குடிப்பழக்கம் சிகரெட்டை விட பன்மடங்கு தீமையானது. சிகரெட் குடிப்பதால் மட்டுமல்லை, குடித்தாலும் கூட கேன்சர் வரும். ஆனாலும் குடிப்பழக்கம் எல்லா நாடுகளிலும் சகஜமாக கருதவைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசே இதை நடத்துகிறது. தமிழக அரசு சிகரெட் கம்பெனி நடத்தி இத்தனை ஆயிரம் கோடிகள் வருடத்துக்கு சம்பாதிக்க முடியுமா ?   குடிப்பவர்களால் கிடைக்கும் வருமானம் சிகரெட் குடிப்பவர்களை விட பலமடங்கு அதிகம் என்கிற வியாபராக் கணக்கே குடியை விடுத்து சிகெரட்டை மட்டும் அரசுகள் குறிவைப்பதன் காரணம்.  குடிக்கு அடிமையானவர்கள் மூளையும் வேலை செய்வதில்லை. அவர்கள் பாதி அடிமைகள் என்பதால் இந்தப் பழக்கத்திலிருந்து மீளவே முடியாது. 

அதன் வெளிப்பாடாக  உத்தரப் பிரதேசத்தில், சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாநில முதன்மை செயலர் (சுகாதாரம்) அர்விந்த் குமார் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

"உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் சில்லறையில் சிகரெட் விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.

சில்லறையில் சிகரெட் விற்க தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டுவர அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ராம் நாயக்கும் அனுமதி வழங்கி விட்டார்.

புதிய சட்டத்தின்படி சில்லறையில் சிகரெட் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறையாக ரூ.1000 அபராதம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் குற்றம் செய்தால் ரூ.3000 அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். சில்லறையில் சிகரெட் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம், 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்." இவ்வாறு அர்விந்த் குமார் கூறியுள்ளார்.

இது சில்லறை வர்த்தகம் எனப்படும் பெட்டிக் கடைக்காரர்களின் வயிற்றில் அடித்து அந்தத் தொழிலை இல்லாமல் செய்வதற்கே. அமெரிக்கா போன்ற நாடுகளில் தெருமுனைப் பெட்டிக் கடைகள் எல்லாம் சுத்தமாக ஒழிக்கப்பட்டுவிட்டன. காரணம் சிகரெட்டை கூட வால்மார்ட்டில் தான் வாங்கவேண்டும் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் நினைப்பதால்.

இதே போன்றதொரு கடுமையான தடையை மதுபாட்டில் விற்பவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும் ஏன் ஐயா கொண்டு வரவில்லை ? வருமானம் போயிடுமே ஐயா. அதுதான் அவங்க கவலை. மக்கள் மேல் அக்கறையும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. புரிஞ்சுக்கோங்க.

Friday, October 2, 2015

ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் !

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்தீர்மானத்தில்,
  • இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • அத்துடன், காமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  தலைப்பில் போர்க்குற்றம் என்கிற வார்த்தையே இல்லை. இந்த தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு  அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கிரீஸ், லுத்வியா, மான்டினிக்ரோ, போலந்து. ருமேனியா, மாசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. நாடு கடந்த ஈழ அரசும், இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ளன.
இத்தீர்மானத்தைப் பற்றி ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர், சீனா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா, கானா, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள்  உரையாற்றினார். இதை ஓட்டெடுக்கக்கூடத் தேவையில்லாமல் நிறைவேற்றியபின் இந்தியாவின் பிரதிநிதி பேசினார்.
பன்முகத் தன்மையுள்ள நாடாக இலங்கை இருக்க இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி 1980களில் பாடிய பல்லவியையே திரும்பப் பாடினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சிம்பிளாக கதையை முடித்து விட்டார்கள். அப்படியென்றால் கொல்லப்பட்ட லட்சம் தமிழர்களும் பயங்கரவாதிகளா?
இலங்கையின் மீதான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையே முன்மொழிகிறது. நீதி எந்த அளவிற்கு வெளிவரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது. 
இலங்கையை கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பிக்க வைக்க புத்திசாலித்தனமான வார்த்தைகளைப் போட்டு இயற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியமான தகிடுதத்தங்கள்.
காமன்வெல்த் - காமன் வெல்த் நாடுகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனா போன்ற ஈழப் போரில் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்ற அரசுகள் கொண்ட அமைப்பு. இந்த காமன்வெல்த்திலிருந்து நீதிபதிகளை அனுப்பி அவர்களை 'சர்வதேச நீதிபதிகள்'என்று கண்துடைப்பு விசாரணை செய்யவே காமன்வெல்த்  அமைப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசு - அமெரிக்க அரசு முந்தைய ராஜபக்சே அரசை போர் புரிந்த அரசாகவும் தற்போதைய சிறிசேனா அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அரசாகவும் தந்திரமாகக் குறித்து தீர்மானத்தில் பேசுகிறது. ராஜபக்சே புலிகளுடன் போர் என்று எல்லாத் தமிழர்களையும் கொன்ற போது அவரிடம் ராணுவ அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இலங்கை அரசின் அதிபர் சிறிசேனா. பின் எப்படி சிறிசேனா அரசு நியாயமாக விசாரணை நடத்தும் என்று நம்புவது ?
இலங்கையுடன் இணைந்து - அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வந்த இந்த ஆலோசனையை இந்தத் தீர்மானம் முன்மொழிந்திருக்கிறது. அதாவது திருடனைக் கூப்பிட்டு 'அவனே அவனை விசாரித்து அவனை தண்டித்துக் கொள்ளவேண்டும்' என்று தீர்ப்பு வழங்குவது போன்றது இது. திருடன் தன்னையே தான் ஒழுங்காக விசாரிக்கிறானா என்று மொழி தெரியாத ஊரிலிருந்து நான்கு பெருசுகள் வந்து இதைக் கண்காணிக்கும்.
இவ்வளவு மோசமான நிலைமை தமிழர்களுக்கு உலகில் ஏற்ப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையை அவர்களை ஆளும் இந்தியாவே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சிங்கள ராணுவத்துடன் இந்தியா இணைந்து போர்ப் பயிற்சி செய்தது. போன மாதம் ஒரு போர்க்கப்பலை இலங்கை கடற்படைக்கு தானமாக வழங்கியது இந்தியா தான். இப்படி தமிழருக்கு பச்சைத் துரோகம் செய்யும் இந்தியாவும் மோடியும் ஒரு நாளில் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.

Saturday, September 26, 2015

போக்ஸ்வேகனை அடிக்கும் அமெரிக்கா. மேகி நூடுல்ஸை கெஞ்சும் இந்தியா.

போக்ஸ்வேகன் (Wolkswagon) என்றழைக்கப்படும் வோல்க்ஸ்வேகன் என்கிற ஜெர்மனி நாட்டின் கார் தயாரிப்பு நிறுனம் சமீபத்தில் தனது கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு கருவிகளை கார் டெஸ்ட் செய்யப்படும்போது மட்டும் ஆன் செய்து மற்ற சமயங்களில் ஆப் செய்தே வைத்திருந்திருக்கிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு நவீன சாப்ட்வேர் கொண்ட கருவியை அது கார்களில் உள்ளே ரகசியமாக பொருத்தியிருந்திருக்கிறது. இவ்வாறு மாசுக் கட்டுபாட்டு நிர்ணயங்களை அது 2009லிருந்து ஏமாற்றி வந்திருக்கிறது.

அமெரிக்காவில் விற்பனையான போக்ஸ்வேகன் கார்களை மாசுக்கட்டுப்பாடு டெஸ்ட் செய்யும் போது அமெரிக்க மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு இதைக் கண்டுபிடித்தது. அமெரிக்காவில் ஓடிக்கொண்டிருக்கும் 80 ஆயிரம் கார்களில் இந்த மாசுக் கட்டுப்பாடு ஏமாற்றும் கருவி பொருத்தப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டது போக்ஸ்வேகன். இதையொட்டி போக்ஸ்வேகன் மீது  ரூ. 1.17 லட்சம் கோடி அபராதம் விதித்திருக்கிறது அமெரிக்க சுற்றுச் சூழல் அமைப்பு.

செய்தி வெளியான முதல் நாள் ‘ஃபோக்ஸ் வேகன்’பங்குகளின் மதிப்பு 20% வீழ்ந்தது; அடுத்த நாள் மேலும் 17% வீழ்ந்தது. முதலில் கள்ள மவுனம் சாதித்த ‘ஃபோக்ஸ்வேகன்’ அடுத்து, அமெரிக்காவில் நிறுவனத்தின் செயல்பாடு முடக்கப்படலாம் எனும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கிறது. தலைமைச் செயல் அதிகாரி மார்ட்டின் வின்டர்கோன் பதவி விலகியிருக்கிறார்.

போக்ஸ்வேகன் நிறுவனத்தை 1937ல் அடால்ப் ஹிட்லர் தான் உருவாக்கினார். தனது ஆரிய மக்களுக்கான சமுதாயத்தை உருவாக்க விரும்பிய ஹிட்லர் சீமான்கள் மட்டுமே கார்கள் வைத்திருந்த காலத்தில் அமெரிக்கா போலவே வீட்டுக்கு ஒரு கார் என்று ஜெர்மானிய மக்களும் கார் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் இந்தக் கார்களை உருவாக்கினார். இரு பெரியவர்கள், மூன்று குழந்தைகளுடன் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியதாகவும், குறைந்த விலைக்குள்(999 ரெய்க்ஸ்)ளும் ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறையை வளர்ப்பதோடு, உள்நாட்டில் நாஜி கட்சியின் செல்வாக்கை மேலே கொண்டு செல்லவும் திட்டமிட்டே அவர் இந்தக் காரை அறிமுகப்படுத்தினார்.

யுத்தத்துக்குப் பின் மீண்டும் தலையெடுத்த ‘ஃபோக்ஸ்வேகன்’ 1950-களில் அமெரிக்கச் சந்தையில் கால் பதித்தது. அடுத்த 10 ஆண்டுகளில், தனக்கென அங்கு ஒரு சந்தையை உருவாக்கிக்கொண்டது. கடந்த முக்கால் நூற்றாண்டில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட கார்களை விற்று, உலகின் ஏனைய நிறுவனங்களை எல்லாம் பின்தள்ளி, ‘டொயாட்டா’வுக்கு அடுத்து பெரிய கார் நிறுவனம் எனும் இடத்துக்கு வந்தது.

இந்நிலையில்தான் எந்த அமெரிக்கச் சூழலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, எந்த அமெரிக்காவைத் தனது வலுவான சந்தை களில் ஒன்றாக உருமாற்றிக்கொண்டதோ, அதே அமெரிக்காவின் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’யால் (இபிஏ) மிகுந்த பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறது ‘ஃபோக்ஸ்வேகன்’. இதனால் ஜெர்மனியின் பொருளாதாரமே பின்னடைவுக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நடவடிக்கைக்குப் பின்னணியில், அமெரிக்க அரசுக்கு என்னென்ன உள் ஆதாய நோக்கங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை; இருக்கலாம். ஆனாலும்கூட, மிகத் துணிச்சலான, மக்கள் - சூழல் நலன்சார் நடவடிக்கை இது. அதே சமயம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுப்புறச் சூழல் அரசால் கூட கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதும் நாம் கவனிக்கவேண்டியது.

1970-ல் அதிபர் நிக்ஸன் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை’. ஆண்டுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு, 16,000 + நிரந்தர ஊழியர்கள் + அதற்கு இணையான ஒப்பந்த ஊழியர்கள், பரந்து விரிந்த ஆய்வகங்கள், கடல் ஆய்வுகளுக்குச் சொந்தக் கப்பல் என ஒரு பெரிய துறையாகச் செயல்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை சுற்றுச் சூழலை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவில் காற்று, நீர், நில மாசில் தொடங்கி கதிரியக்க அபாயம் வரை கண்காணிக்கும் / ஒழுங்குபடுத்தும் இந்த அமைப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றம் இன்னும் போதுமான அதிகாரங்களை வழங்கவில்லை என்ற குறை அமெரிக்கர்களிடம் உண்டு. ஆனால், அதன் கையில் இப்போது இருக்கும் அதிகாரமே எத்தகையது என்பதற்கு உதாரணம் ‘ஃபோக்ஸ்வேகன்’ விவகாரம்.

வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்படும், அந்நிய முதலீடுகள் குறைந்துவிடும் என்றெல்லாம் பயந்து ‘யூனியன் கார்பைடு’ நிகழ்த்திய போபால் படுகொலைகள், மாகி நூடுல்ஸில் இருந்த ஆபத்தான வேதிப்பொருட்கள், கோக் பெப்ஸியில் இருந்த அளவு மீறிய வேதிப்பொருட்கள்,  ஸ்டெர்லைட் ஆலை மாசுகள், ‘நோக்கியா’, ‘வோடஃபோன்’,  நிகழ்த்திய பொருளாதார மோசடிகள் வரை எல்லாவற்றிலும் முதலாளிகள் முதலீடு செய்யாமல் ஓடிவிடுவார்களே என்று சொல்லி அமைதியாயிருக்கும் இந்தியா எவ்வாறு மக்கள் நலனில் அக்கறை காட்டமுடியும் ? மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் என்ன ஆனது ? அந்த நிறுவனத்துக்கு எதுவுமே நடக்கவில்லை. இதோ அடுத்து மீண்டும் சந்தையில் நுழையப்போகிறது மேகி.

2014-ல் பொதுத் தேர்தல். குஜராத் முதல்வராக இருந்தபோது தொழில் வளர்ச்சியின் பெயரால் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியவர் மோடி. பிரதமரான பின் அவருடைய நோக்கப்படி, சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் முக்கியமான பாதுகாப்புச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய டி.எஸ்.ஆர்.சுப்ர மணியன் குழுவை நியமித்தார். இரு மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது அக்குழு. அந்த அறிக்கை என்ன சொல்கிறது; அரசின் போக்கு எப்படியிருக்கிறது என்பதற்கு ரந்தீப் சர்ஜிவாலா விமர்சனத்தின் ஒரு வரி போது மானது: “இந்தியா 60 ஆண்டுகளாக உருவாக்கிய ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டமைப்பையும் அடித்து நொறுக்கி பெரு நிறுவனங்களின் கையில் எல்லாவற்றையும் ஒப்பளிக்க 60 நாட்களில் யோசனை தெரிவித்திருக்கிறது இந்த அறிக்கை.”. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளால் “சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை உருவாக்கத்தில் அவசரப்படப் போவதில்லை” என்று தற்காலிகமாக இந்த விவகாரத்தைத் தள்ளிப்போட்டிருக்கிறது மோடி அரசு.

ஒவ்வொரு நாளும் தொழில் வளர்ச்சியின் பெயரால் சராசரியாக 333 ஏக்கர் வனப் பரப்பை இழந்துகொண்டிருக்கும், ஆண்டு உற்பத்தி மதிப்பில் 5% இழப்பைச் சூழல் கேடுகளால் பறிகொடுக்கும் நாடு இந்தியா! நாட்டின் பிரதமர் மோடி இப்போது, தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் நியூயார்க், கலிஃபோர்னியா என்று சுற்றும் மோடி, வாஷிங்டனில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அலுவலகத்துக்கும் அவசியம் போக வேண்டும். ஜனநாயகம், வளர்ச்சி எனும் வார்த்தைகளுக்குள் உண்மையில் எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை அவருடைய அரசு இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்! மூன்றாம் உலக நாடுகள் ஆடுமாடுகளுக்குச் சமானம் என்று மோடி அரசும், மன்மோகன் அரசும் நினைத்ததால் தான் உலகில் தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி உரங்களும், தடை செய்யப்பட்ட மாத்திரைகளும், தடை செய்யப்பட்ட பானங்களும் இ்ந்தியாவில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

Tuesday, September 22, 2015

இந்தியாவுக்கு அமெரிக்கா 16ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்கள் விற்கிறதாம்!!

அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற இருக்கிறது. மோடியின் அரசு தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை ராணுவத்துடன் போர்ப்பயிற்சி செய்ய இருக்கிறது. ஐ.நாவில் அமெரிக்கா இலங்கை்கு ஆதரவாக போடப்படும் தீர்மானத்தை மோடி ஆதரிக்கவிருக்கிறார். இப்போது அமெரிக்காவிற்கு போகவிருக்கிறார் மோடி. அதையொட்டி அந்நாட்டின் போயிங் நிறுவனத்திடமிருந்து பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஓ.கே.செய்திருக்கிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான (சிசிஎஸ்) அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இம்முடிவின்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து  22 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013-ம் ஆண்டில் மன்மோகன் ஆட்சியிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. மாட்டுச் சந்தை போல விலை நிர்ணயம் தொடர்பாக துண்டு இழுபறி 2 வருடங்கள் நடைபெற்றதால் நடைபெறவில்லை.இப்போது இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.16,500 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது போயிங் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோக இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள், ராடார்கள் மற்றும் மின்னணு போர்த்தளவாடங்களை வாங்குவது தொடர்பாகவும் ஒரு ஒப்பந்தம் அமெரிக்க அரசுடன் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
இந்தியாவின் ராணுவ தளவாட சந்தையைக் கைப்பற்றுவதற்காக, மத்திய அரசை அமெரிக்கா பல்வேறு வகைகளில் அழுத்தி வந்தது.


கடந்த 10 ஆண்டுகளில், பி-81 ரக கடற்பகுதி கண்காணிப்பு விமானங்கள், சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் சி-17 குளோப்மாஸ்டர்-3 ரக விமானங்கள் வாங்குவது உட்பட ரூ.66 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இதை யாரைக் கேட்டு யாரிடம் டெண்டர் விட்டுச் செய்தார்கள் ? என்று மக்களாகிய நாம் கேட்க முடியாது. 600 ரூபாய் கேஸ் மானியத்தை விட்டுத் தா என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர மனிதனிடம் கேட்க முடிந்த அரசு, 16 ஆயிரம் கோடிக்கு ஹெலிகாப்டர் எல்லாம் வாங்கித் தானாகவேண்டுமா ? என்றும் கேட்க முடியாது. உடனே பாகிஸ்தான் தீவிரவாதம் என்று கைகாட்டுவார்கள். பாகிஸ்தானுக்கும் இதே அமெரிக்கா ஆயுதம் வழங்குகிறதே என்று யோசிக்கும் அளவுக்கு இங்கிருக்கும் தேசபக்திக் கொழுந்துகளுக்கு அறிவு இருப்பதில்லை.

இதை எதுக்கு இப்போ வாங்குறாங்கன்னு தெரியலை.  இரண்டு வருஷமா அமெரிக்கா இதை விக்க பேரம் பேசிட்டு இருந்தப்பவும் நமக்கு பாகிஸ்தான்ல இருந்து இலங்கை வரைக்கும் எல்லார் கூடவும் எல்லைத் தகராறு, தாக்குதல்கள் தான். இரண்டு வருஷமா இந்த ஹெலிகாப்டர் ஆயுதம் இல்லாம நாம் ஒன்னும் அழிஞ்சு போயிடலை. இனியும் இதை வாங்கி என்ன பண்றது ? ஒருவேளை தற்கொலை செஞ்சுக்கிற விவாசாயிகளை ஒருவேளை வயக்காட்டிலிருந்து தூக்கிட்டு வர்றதுக்காக வாங்குறாங்களோ என்னவோ

Thursday, September 17, 2015

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம் தேதி புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் உசைன் ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சம் உள்நாட்டு விசாரணையை மறுதலித்து, மாறாக பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இலங்கைக்கு வைக்கப்படும் நெருக்கடியாகும். ஆனால் இதில் எவ்வளவு தூரம் விஷயங்கள் வெளிவரும் என்பது கேள்விக்குறியே.

இதுதவிர அறிக்கையிலுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
இறுதிகட்ட போரின்போதும், போருக்கு முன்பாகவும், அப்பாவி மக்கள், இலங்கை ராணுவத்தாலும், விடுதலை புலிகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களையும் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தங்களுக்கு எதிராக செயல்பட்டோரை விடுதலை புலிகள் கொன்றுள்ளனர். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்குவர். இரு தரப்பிலுமே மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும், ஒருவர் கூட போர்க்குற்றத்திற்காக இலங்கையில் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை ராணுவ வீரர்கள், தங்களால் கைது செய்யப்படும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இறுதி போர் முடிந்த பிறகு, இலங்கை ராணுவத்தினர் அதிக பாலியல் குற்றங்களில் ஈடுட்டுள்ளனர். இந்த பாலியல் பலாத்காரங்களை, ஒரு தண்டனை முறையாக செய்திருக்கின்றனர். விடுதலை புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என்று தெரிந்தால் அவர்களை இழிவுபடுத்தும் செயலாகவும் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அச்சம், வெட்கம் போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டோர் தங்களது பாதிப்பு குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஆனால் பெருமளவில் இக்குற்றங்கள் நடந்துள்ளன. இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடேசன் போன்றோரை சிங்கள ராணுவம் படுகொலை செய்தது தெளிவாகியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி, இலங்கை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். சில பலாத்காரங்களும், அதையொட்டிய டார்ச்சர்களும், மனித குலத்திற்கே எதிரான அளவுக்கு மோசமாக இருந்துள்ளன.

'வெள்ளை வேன்' கலாசாரம் என்று அந்த நாட்டில் அழைக்கப்படும், ஆள் கடத்தலும், அதைத்தொடர்ந்த சித்திரவதைகளும் நின்றபாடில்லை. உலக அளவில் அதிக பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நாடு இலங்கை. ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த இலங்கை அனுமதிப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையொட்டி தமிழக சட்டசபையில் ஈழப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஏகமனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவில் தீர்மானம் இயற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமெரிக்காவின் இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடு விஷயங்களைப் பட்டியலிடுவது போலத் தோன்றினாலும் இதன் உண்மையான போக்கை அனுமானிக்க வசதியாக உள்ளது.

இந்த அறிக்கையில் அமெரிக்கா தற்போதை சிரிசேனாவின் அரசை பாராட்டியிருக்கிறது. அதே சமயம் முந்தைய அரசு போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது எனக்குறிப்பிடுகிறது. இது ஈழப்படுகொலைகள் அத்தனைக்கும் ராஜபக்சேவை மட்டும் கட்டம் கட்டி காட்டிவிட்டு பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழர் X சிங்களர் இனப்பிரச்சனையை வெறும் போர்க்குற்றமாகச் சுருக்கி முடிக்கிறது. விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகக் கருதப்படாமல் போர்க்குற்றம் புரிந்த ஒரு தீவிரவாதக் குழுவாகவே காட்டப்படுகிறார்கள். ஜெயவர்த்தனேயிலிருந்து தற்போதைய ரணில் வரை அனைவரும் தமிழனத்திற்கு எதிராக அநீதியாகச் செயல்பட்டவர்களே !

இந்த விசாரணையில் தமிழர்களை அழித்ததில் இந்தியாவின், அமெரிக்காவின் மற்றும் சீனாவின் பங்கும் மறைக்கப்படும். இதில் நிலைநாட்டப்படுவது அமெரிக்காவின் நீதியாக மட்டுமே இருக்கும். தமிழர்கள் கிடைத்த நீதியை வைத்து சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். தமிழினம் இலங்கையில் அமைப்பு ரீதியாக அழிக்கப்படுவதை இந்த அறிக்கையும் அதன் விளைவுகளும் கண்டுகொள்ளவே போவதில்லை.

Tuesday, September 15, 2015

ஈழப் படுகொலைகள், போர்க்குற்றம் – ஐ.நா வின் கள்ள அழுகை !

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 30-வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. கவுன்சிலின் தலைவர் ஜெத்ராட் உல் உசேன் அதில் ஈழப் படுகொலைகள் பற்றி பேசியதாவது: “இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இறுதிகட்டப் போரின்போது மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளன. பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.

இலங்கையின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா மனித உரிமை விவகாரங்களில் காட்டும் அக்கறை வரவேற்கத் தக்கது. அதேநேரம் அந்த நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை புதன் கிழமை வெளியிடப்படும். அப்போது சில கடுமையான முடிவுகளும் அறிவிக்கப்படும்.” என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. சபையின் இந்த அறிக்கை இலங்கை அரசிடம் கடந்த வெள்ளிக்கிழமையை அளிக்கப்பட்டிருக்கிறது. 6 நாட்களில் இலங்கை பதில் அளிக்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் இலங்கை தரப்பில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீரா பங்கேற்றுள்ளார்.

மங்கள சமரவீரா ஐ.நா அறிக்கை பற்றி கூறியதாவது: “தென் ஆப்பிரிக்காவைப் பின்பற்றி உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும், இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க அரசின் ஆலோ சனையைக் கோரியுள்ளோம். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியல் சாசனம் வரையறுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இலங்கை அரசு சார்பில் சுதந்திரமான விசாரணை அமைப்பு அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விஷயத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே இதன் போலித்தன்மை தெரியும். முதலாவதாக ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தை. இரு நாடுகளுக்கிடையே தான் போர் நடைபெற இயலும். இலங்கையில் நடந்ததோ உள்நாட்டில், கிளர்ச்சியாளர்களான விடுதலைப் புலிகளுடனான சண்டை மட்டுமே. இந்த உள்நாட்டுச் சண்டையே இரு நாடுகளுக்கிடைப்பட்ட போர் போல நடத்தப்பட்டிருப்பதிலிருந்து தமிழர்கள் வேறு நாட்டவராக, எதிரிகளாகவே நடத்தப்பட்டனர் என்பது தெளிவு. அதனாலேயே இன்னும் தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிற்கிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி அவர்களுக்கான பகுதிகள் சிங்களர் வசமாக்கப்படுகின்றன.

ஐ.நா. கவுன்சில் தலைவர் ஜெத்ராட் போர்க்குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன என்று பொதுவாகத் தெரிவித்துள்ளார். அதே சமயம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனாவை பாராட்டியுள்ளார். இதற்கு விசாரணை கமிஷனை இலங்கை அரசே அமைக்கப் போகிறது. அதாவது தான் செய்த குற்றங்கள் பற்றி தானே விசாரிக்கப் போகிறது. இதன் முடிவு என்னவாக இருக்கும் ?

முடிவு தமிழருக்கு சாதகமானதாக இருக்காது. சிங்களச் சார்பு ராஜபக்சே பலிகடாவாக்கப்பட்டு அவர் மேல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும். அதே சமயம் தமிழர் அழிப்புக்கு இலங்கையும், இந்தியாவும் சேர்ந்து செயல்பட்டு விசாரணையை ஒப்புக்கு நடத்தி முடிக்கும். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடரும். இந்திய நிறுவனங்களுக்கு இலங்கையில் கான்ட்ராக்டுகள் பல இதற்கு லஞ்சமாகக் கிடைக்கும். இந்திய அரசு தமிழருக்குச் செய்யும் துரோகம் தொடரும். அது மோடியோ அல்லது மன்மோகனோ அல்லது வேறு யாரோவாக இருந்தாலும் சரி.

Thursday, September 3, 2015

தேசத்தின் சக்கரங்கள் - க. சுவாமிநாதன்.


‘‘வேலைநிறுத்தங்களின் மூலம் இந்திய நாட்டின் பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தி விடாதீர்கள்! ’’ – இது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வார்த்தைகள். ஜூலை 20, 21 (2015) தேதிகளில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் (மி.லி.சி) ஆற்றிய உரை இது. செப்டம்பர் 2 அன்று இந்தியாவிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் நடத்தப் போகிற நாடு தழுவிய வேலைநிறுத்தம் பற்றியே அவர் இப்படிக் கூறினார். இதுபோன்ற “பன்ச்” டயலாக்குகளை அமைச்சர்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் பேசுவார்ககள். தேச நலன், பொருளாதார வளர்ச்சி, தொழிலின் எதிர்காலம்,மக்களுக்குப் பாதிப்பு … என நிறைய ஸ்டாக் வைத்திருக்கிறார்கள்.  

“ஆமாப்பா! எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக் … போராட்டம்னா நாடு எப்படிப்பா உருப்படும்?” என பஸ் ஸ்டாப்புகளில், பார்க்குகளில், ரயில் பயணங்களில் பலரையும் பேசவைப்பதே இப்பிரச்சாரத்தின் நோக்கம். உண்மையில் இவ் வேலைநிறுத்தம் யாருக்காக? இது முன்வைக்கிற கோரிக்கைககள் தேச நலனுக்கு உதவுமா? இக் கேகள்விகளை விவாதிப்போம் வாருங்ககள்.

யாரையா அந்தப் பொதுஜனம் ? பொதுவாக வேலைநிறுத்தம் என்றாலே, பொதுமக்களுக்கு என்ன பயன் ? என்று கேட்கிறார்ககள். அரசாங்கமும் இக்கேள்வியை தொழிற்சங்கங்களுக்கு எதிராக முன்வைக்கிறது. தொழிற்சங்கங்ககள் முன்வைத்திருக்கிற கோரிக்கைகளை வாசித்துப் பாருங்ககள். முதல் கோரிக்கையே, விலைவாசியைக் கட்டுப்படுத்து; அனைவருக்குமான பொது விநியோகத்தை அமலாக்கு என்பதுதான். இரண்டாவது கோரிக்கை வேலைவாய்ப்புகளை உருவாக்கு என்பது. இக்கோரிக்கைககள் பொதுமக்களுக்கு சம்பந்தமில்லாதது என்றால் யாரையா நீங்க சொல்கிற பொதுஜனம் என்றுதான் கேட்கவேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் கணக்கை எடுத்துப் பாருங்ககள். 31 கோடி பேர் முழு நேர உழைப்பாளிககள். 9 கோடி பேர் அரைகுறை உழைப்பாளிகள். (அதாவது வருடத்திற்கு 183 நாட்களுக்கு மேல் வேலை கிடைக்காதவர்ககள்). இவ்வேலைநிறுத்தம் முன்வைக்கிற இன்னொரு முக்கியமான கோரிக்கை இந்த 40 கோடி பேருக்கும் சமூகப் பாதுகாப்பு வேண்டுமென்பதுதான். இவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ 15000 நிர்ணயிக்கப்படவேண்டும் என்பதுதான். 40 கோடி பேர் என்றால் அவர்களை நம்பியிருக்கிற குடும்பத்தினர் எத்தனை பேர். இவ்வளவு பேரும் நீங்ககள் சொல்கிற பொது ஜனத்திற்குகள் வரமாட்டார்ககள் என்றால் யாரையா பொதுஜனம்! அவர்கள் என்ன வேறு கிரக வாசிகளா? ஏதாவது பாதாள லோகத்தில் பதுங்கியிருப்பவர்களா !? எனவே பொது ஜனம் என்று சொல்வது ஏதோ அவர்கள் விரலை வைத்து அவர்கள் கண்களையே குத்துகிற உத்தியோ என்றே தோன்றுகிறது.

அதற்கு ஒரு உதாரணம் மத்திய பி.ஜே.பி அரசின் “விட்டுக் கொடுங்கள்’’ (give up subsidy) பிரச்சாரம். குடிசைகளிலும், கிராமங்களிலும் மரச் சுகள்ளிகளை வைத்து அடுப்பெரிக்கிற தாய்மார்ககள் புகை மண்ட, கண்ககள் கரிக்க படுகிற துயரத்தை மனமுருக பிரதமர் பேசுகிறார். நீங்கள் ஏன் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என நடுத்தர வர்க்கத்தைப் பார்த்துக் கேட்கிறார். அம்பானி கூட மனம் கசிந்து கேஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது செய்தி. மாதச் சம்பளத்தில் மூச்சுத் திணற குடும்பம் நடத்துகிற ஒருவர் வருடத்திற்கு 1200 ரூபாயை விட்டுக் கொடுப்பதும், மும்பை கடற்கரையில் 27 மாடி மாளிகையைக் கட்டியிருக்கிற முகேஷ் அம்பானி 1200 ரூபாய் கேஸ் மானியத்தை விட்டுக் கொடுப்பதும் ஒன்றா? பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தவுடன் போட்ட முதல் பட்ஜெட்டிலேயே கார்ப்பரேட் வரிகளை 33 சதவீதத்தில் இருந்து 25 சதவீதத்திற்கு படிப்படியாக குறைப்பது என்று அருண் ஜெட்லி அறிவித்தாரே! அதில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அம்பானிக்கு வருடத்திற்கு கிடைக்குமே. அதை ‘‘கிவ் இட் அப்’’ என்று அம்பானி விட்டுக் கொடுப்பாரா? ஒரே ஆண்டில் பிரதமரின் ஆத்ம நண்பர் அதானியின் சொத்து மதிப்பு ஒன்றரை மடங்கு அதிகமாகி நாட்டின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக மாறியிருக்கிறாரே! அவ்வளவு லாபத்தில் அரை வருச, கால் வருச வருமானத்தையாவது ‘‘கிவ் இட் அப்’’ என அதானி கொடுப்பாரா!

இப்படியெல்லாம் விட்டுக் கொடுத்தால் சுள்ளி அடுப்பை மாற்றுவது என்ன, அறுசுவை உணவே கொடுக்கலாமே! காற்றே இல்லாமல் வீட்டுக்கு வெளியே வெட்டவெளியில் தூங்குபவர்களுக்கு ஃபேன் கொடுக்கலாமே! அழுகிப்போன காய்கறியையும், கெட்டுப்போன பாலையும் சாப்பிடாமல் இருக்க ஃபிரிட்ஜ் தரலாமே! இதற்கெல்லாம் ‘‘கிவ் இட் அப்’’ என மனமுருக பிரதமர் அம்பானியிடமும், அதானியிடமும் கேட்கலாமே! ரூம் போட்டு யோசிக்காமலேயே பளிச்சுன்னு ஒரு உண்மையை சொல்லலாம். ரூ.15000 குறைந்த பட்ச வருமானத்தை தராமல் இருப்பதும், கேஸ் மானியத்தை “கிவ் இட் அப்” என நடுத்தர வர்க்கத்திடம் கேட்பதும் எதை நிரப்புவதற்கு? யாருடைய பைகளுக்காக? சொல்லுங்கள் பார்ப்போம்! இதையெல்லாம் செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் பேச இருக்கிறது.

பெட்ரோல் விலை சர்வதேச சந்தையில் ஏறினால் இங்கே எப்படி ஏறாமல் இருக்கும் என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சி கேட்டது வினயம். இன்றோ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கே எக்ஸ்சைஸ் வரிகளைப் போட்டு விலையை குறையாமல் பார்த்துக் கொகள்வது விசமம். யாரிடமிருந்து பறிக்கப்படுகிறது, யார் பைககள் நிரம்புகின்றன என்பதை விவாதிக்கிற கோரிக்கைககள் வேலை நிறுத்தத்தில் முன்வைக்கப்பட்டுகள்ளன.

அண்ணாத்த ஆடுறான் ஒத்திக்கோ… ‘‘வேலை நிறுத்தங்கள் தொழில் வளர்ச்சியை பாதித்து விடக் கூடாது’’ என்பது அருண் ஜேட்லியின் கவலை. இவ் வேலைநிறுத்தமும் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கிறது. எது வளர்ச்சி? யாருடைய வளர்ச்சி ? நமது பிரதமர் ஜப்பானுக்கு போனபோது ‘‘ட்ரம்’’ வாசித்தார். அவரின் இசை ஈடுபாடு பற்றி எழுதி மகிழ்ந்தன ஊடகங்கள். உள்நாட்டிலோ மாஜிக் மன்னன் சர்க்காருக்கு நம் பிரதமர் சவால் விடுகிறார். ஆமாம். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கடைசி ஆண்டில் 4.6 சதவீத ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சியை தனது மந்திரக் கோல் அசைவால் 6.7 சதவீதமாக மாற்றிவிட்டார். தொழில், விவசாயம், சேவை என்கிற ஜி.டி.பி_யின் மூன்று துறைகளும் கடந்த ஆண்டில் வளரவில்லை. ஆனால், மோடி அளவு கோல்களை தந்திரமாக மாற்றி வளர்ச்சியை அதிகமாக காண்பித்துவிட்டார். இப்போது அடுத்த ஆண்டிற்கு 7.4 சதவீதம் வளர்ச்சி என அறிவித்துள்ளார். கமல் காலை மடக்கி ‘‘உன்னை நெனைச்சு பாட்டுப் படிச்சேன்’’ என்று சோகமாக பாடினால் அப்பு. அதே கமல் கால்கட்டை அவிழ்த்து ஆடினால் அண்ணாத்தே ஆடுறான் ஒத்திக்கோ.. ஒத்திக்கோ… ஜி.டி.பியும் மோடியின் டைரக்சனில் காலை மடக்கி ஆடு என்றாலும் ஆடுகிறது. விரித்து ஆடு என்றாலும் ஆடுகிறது. அதுமாதிரிதான் 4.6 என்பதும், 6.7 என்பதும்… இன்னொரு விசித்திரம். வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் ‘‘வளர்ச்சி.. பாதிப்பு’’ என்பார்கள். வேலைநிறுத்தம் அன்று ‘‘பிசுபிசுத்தது’’ ‘‘மாமூல் வாழ்க்கை பாதிக்கவில்லை’’ என்பார்ககள். முடிந்தவுடன் ‘‘ஒருநாள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இழப்பு’’ என்று தொழிலதிபர்கள் அமைப்புககள் அறிக்கை விடும். காட்சிக்கு காட்சி மாறுகிற டயலாக்குககள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உள்ளது. வளர்ச்சி என்ற வார்த்தையில் அதிகம் மயங்குபவர்ககள் படித்த, உயர் நடுத்தர, நுனி நாக்கு ஆங்கிலக் காரர்கள்தான். வளர்ச்சி என்றால் என்ன? நிறைய பேருக்கு வாழ்வு கிடைக்கவேண்டும். பெரும்பான்மை மக்களின் வருமானம் அதிகரிக்க வேண்டும். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் யார் வருமானம் அதிகரிக்க இந்த மோடி, காங்கிரஸ் அரசுகள் வேலை செய்திருக்கின்றன?

ஐ.டி.வேலைப் பறிப்புகள் ஜனவரி 17, 2015_ல் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் ‘‘டெக் வளாகங்களில் 25000 இளஞ்சிவப்பு சீட்டுகள்… இன்னமும் எண்ணுவது நிற்கவில்லை’’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை. சாப்ட் வேர் நிறுவனங்களில் பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் வேலை பறிபோவது பற்றி அதில் எழுதப்பட்டிருந்தது. ஐ.பி.எம், டெல், சிஸ்கோ, எச்.பி, டி.சி.எஸ் நிறுவனங்களில் இருந்து பணிப்பாதுகாப்பு இல்லாமல் துப்பிச் சிதறும் கரும்புச்சக்கை போல ஊழியர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள். 2014 ல் யாகூ நிறுவனம் தனது பெங்களுரு அலுவலகத்தில் பெரும்பான்மை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. வாழ்க்கை பற்றிய கனவுகளோடு வரும் இளைஞர்களை 30 வயதுக்குகள் சீட்டுக் கிழிப்பது எவ்வளவு குரூரம்! பணிச்சுமையின் அழுத்தம் மனப் பிறழ்வுகளை உருவாக்குகிறது என்பதற்கு எவ்வளவு உதாரணங்ககள்! மனக்குமுறல்ககள் முக பாவனையில், முணுமுணுப்புகளில் வெளிப்பட்டால் கூட அடுத்த நிமிடம் கம்ப்யூட்டர் ஆக்சஸ் துண்டிக்கப்பட்டு, இமெயிலில் பணிநீக்க ஆணையை அனுப்பப்படுகிற அராஜகங்ககள் எத்தனை. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு யார் காரணம்? சத்யம் நெருக்கடிக்கு காரணம் யார்? விஜய் மல்லையாக்களும், ராமலிங்க ராஜுக்களும்தானே! இங்கேயெல்லாம் தொழிற்சங்கங்கள் இல்லை. ஜிந்தாபாத் கோசங்கள் இல்லை. வேலை நிறுத்தங்கள் இல்லை. ஆனால் நிறுவனங்ககள் வீழ்ந்தன. அப்படி எனில் யார் வளர்ச்சியின் எதிரிகள்? கடிவாளம் இல்லாத குதிரை கண்மூடித்தனமாக ஓடுகிறது. முட்டித் தகள்ளுகிறது. காலில் மிதிக்கிறது.
வேலை நிறுத்தம்தான் வளர்ச்சியை பாதிக்கிறது என்று சொல்பவர்கள் கொஞ்சம் அரசின் புள்ளி விவரங்களைப் பாருங்கள். 1981-_90 காலத்தில் மனித உழைப்பு நாட்கள் இழப்பில் வேலைநிறுத்தமே 53 சதவீதக் காரணமாக இருந்தது. 1990_-2000_ல் மனித நாட்கள் இழப்பிற்கு நிர்வாகங்களின் லாக் அவுட் தான் 60 சதவீத காரணமாக மாறிவிட்டது. 2002-_2005 காலத்தில் கம்பெனிகள் செய்த ‘லாக் அவுட்’ 74 சதவீத மனித உழைப்பு நாட்கள் இழப்பிற்கு காரணமாக உயர்ந்துள்ளது.

செயற்கை கண் இரக்கம் ஒரு தொழிலதிபர் இடதுபக்கம் செயற்கை கண்ணை பொருத்தினார். அவருக்கு சந்தேகம். பார்ப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியுமா என்று. ஒரு தொழிலாளியை அழைத்து நான் ஒரு கண்ணில் செயற்கை கண்ணை பொருத்தியிருக்கிறேன், எது என்று தெரிகிறதா? என்று கேட்டார். அவன் சற்றும் தயங்காமல் இடது கண்தான் என்றான். எப்படி சரியாகக் கண்டுபிடித்தாய்? கேட்டார். முதலாளி! அக்கண்ணில்தான் கொஞ்சம் இரக்கம் தெரிகிறது என்றானாம். தனியார் மூலதனத்திடம் லாப நோக்கம்தான் இருக்குமே தவிர இரக்கம் இருக்காது என்று விளக்குகிற கதை. தற்போது ரூ.15000ஐ குறைந்தபட்ச ஊதியமாக தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அதைக் கொடுக்க வேண்டுமானால் எங்கேயிருந்து எடுப்பது? தொழிலகங்களின் லாபத்தில் இருந்துதான். அமெரிக்காவில் ஊதிய வேறுபாடு விகிதம்- அதாவது, கீழ்நிலைச் சராசரி ஊழியர் ஊதியத்திற்கும், உச்சபட்ச நிலை எக்சிகியூடிவ் ஊதியத்திற்கும் இடையேயான வித்தியாசம் 373 மடங்குககள். இந்தியாவில் சில நிறுவனங்களில் 2920 மடங்குககள் கூட உள்ளது. (உ.ம்: -டெக் மகேந்திரா). மேட்டில் இருந்து எடுத்துதான் பள்ளத்தில் போட முடியும். இவர்கள் தோண்டுவதிலேயே குறியாக இருக்கும்போது எப்படி நிரப்புவார்கள். மத்திய அரசு அண்மையில் குறைந்தபட்சக் கூலியாக ரூ 160 அறிவித்துள்ளது. 30 நாட்களும் வேலை பார்த்தாலும் ரூ.4800 தான் மாதத்திற்கு கிடைக்கும்.

உலகமய போதை.. கிராமங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டதால் மொத்தமுள்ள 6576 ஒன்றியங்களில் 2500ல் மட்டுமே அமலாகிறது. அண்மையில் வெளியான அரசின் சமுக, பொருளாதார மற்றும் சாதி ஆய்வு தருகிற தகவல் என்ன! இந்தியக் கிராமங்களில் 90 சதவீதமான குடும்பத் தலைவர்களின் ஊதியம் ரூ.10000 க்கு கீழே உள்ளது. 74 சதவீத குடும்பத் தலைவர்களின் ஊதியம் ரூ.5000 க்கும் கீழே. கிராமங்களின் தற்கொலைககள் 26 சதவீதம் அதிகரித்துள்ளன. அரசாங்கம் என்ன சொல்கிறது? அது தற்கொலைகளை ஆய்வு (?) செய்துள்ளது. விவசாய நெருக்கடியால் எத்தனை பேர்? குடும்பப் பிரச்சினைகளால் எவ்வளவு பேர்? குடிப் பழக்கத்தால் எவ்வளவு பேர்? இப்படிப் பட்டியல் போட்டு விவசாய நெருக்கடியால் தற்கொலைகள் செய்வது குறைந்துவிட்டது என்று கண்டுபிடித்துள்ளது. விவசாய நெருக்கடி வேறு.. குடும்ப பிரச்சினை வேறு… என்று பிரிக்கிற இவர்களின் ஞானத்தை என்ன சொல்வது! குடிப் பழக்கத்திற்கும், வாழ்க்கை சோகத்திற்கும் சம்பந்தமில்லை என்பது என்ன தெளிவோ! உலகமய போதை போலிருக்கிறது. எல்லாம் ரெண்டு ரெண்டாய்த் தெரிகிறது.

தேசம், மக்கள், வளர்ச்சி ..கடுகு, மிளகு, வத்தல். பி.ஜே.பி யின் தேர்தல் அறிக்கையில் “விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உற்பத்திச் செலவினத்தை விட 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்போம்” என வாக்குறுதி தரப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் 50 சதவீதம் என்பதற்குப் பதிலாக குவிண்டால் அரிசிக்கு ரூ 50 ருபாய் கூடுதலாக தந்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கு வந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், “உற்பத்திச் செலவினம் + 50 சதவீதம் என்பதெல்லாம் சந்தையை தகர்த்து விடும்” என்று கதவை மூடிவிட்டார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி ஆகிற குவிண்டால் கோதுமைக்கு 225 டாலர் அதாவது ரூ 1625 தருகிற அரசாங்கம் இங்கே உள்ள விவசாயிக்கு 200 ருபாய் குறைவாகத் தருகிறது. அது சந்தையின் ஜீவன். விவசாயிகளின் ஜீவன்களைப் பற்றி என்ன கவலை! தேசம், மக்கள், வளர்ச்சி என்பதெல்லாமே இவர்களுக்கு சந்தையில் உள்ள கடுகு, மிளகு, வத்தல் மாதிரிதான். இப்படிக் கிராமங்களில் இருந்து வாழ்வு தேடி நகரத்திற்கு அத்தக் கூலிகளாக வருபவர்களை ரூ 100க்கும், 200க்கும் சக்கையாய் பிழிய முடிகிறது. வறுமை, வேலை இல்லாமை எல்லாம் இருந்தால்தான் இப்படி ஆட்ககள் கிடைப்பார்ககள். லாபப் பெருக்கத்திற்கான இந்த ஏற்பாட்டையே செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் கேள்வி கேட்கிறது.

பொன்மகள் வந்தாள் – வெளிநாட்டிலிருந்தா வந்தாள் ?! ‘மேக் இன் இந்தியா’ என்பது பி.ஜே.பி அரசின் கவர்ச்சிகரமான முழக்கம். இந்தியாவுக்கு வாருங்கள்… என்று அழைப்பு விடுத்தவுடன் “பொன்மகள் வந்தாள்” என முதலீடுககள் வானத்தில் இருந்து கொட்டுமென்று கனவுகளை உலவவிட்டார்கள். மேக் இன் இந்தியா நடந்தேற என்னென்ன தேவை? ஆதாரத் தொழில் வளர்ச்சி தேவை. அதற்கான நிதியாதாரங்கள் தேவை. இந்திய ரயில்வேக்கு அடுத்த ஆண்டுகளில் 1,50,000 கோடிகள் தேவை என்றால் யார் கதவைத் தட்டுவது? பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் வாசலில்தான் நின்றார்கள். வட்டி எவ்வளவு என்று கூட இறுதி செய்யாமல் இவ்வளவு பெரிய தொகைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடமுடியுமா! போட்டார்ககள். அந்நிய முதலீட்டை நம்பி ஆதாரத் தொழில் வளர்ச்சியை எட்ட முடியாது; உள்நாட்டுச் சேமிப்பே உறுதியான வழி என்பது மீண்டும் நிரூபணமானது. அடுத்த தேவை சந்தை விரிவாக்கம். ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ‘‘மேக் ஃபார் இந்தியா’’ என்றார். என்ன அர்த்தம்? மோடி சொல்வது ‘‘இந்தியாவில் உருவாக்கு’’, ரகுராம் ராஜன் சொல்வது ‘‘இந்தியாவுக்காக உருவாக்கு’’. உள்ளூர் மாடு வெளியூரில் விலை போகாது என்கிற பழமொழி உலகமயத்திற்கும் பொருந்தும். உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தாமல் உலக சந்தையைப் பிடிக்க முடியாது.

இப்போது இந்தியாவின் ஜி.டி.பி 2 ட்ரில்லியன் டாலர்கள். சீனாவின் ஜி.டி.பியோ 11 ட்ரில்லியன் டாலர்ககள். இந்தியாவின் ஜி.டி.பி யில் தொழில் துறையின் பங்கு 16 சதவீதம்தான். சேவைத்துறையே 57 சதவீதம். ஆனால் சீனாவிலோ தொழில்துறை 34 சதவீதம். தொழில்துறை சார்ந்த வருமானம் வளர்ச்சி அடைந்தால் அது உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உருவாக்கும். சேவைத்துறை சார்ந்த வருமானம் அதிகரித்தால் வெளிநாட்டு பொருட்களின் நுகர்வையே பெருக்கும். சென்னை ஒ.எம்.ஆர் ரோடு, இ .சி .ஆர் ரோடுகளைச் சுற்றிப் பார்த்தால் இதை பளிச்சென்று பார்க்க முடியும். எனவே வளர்ச்சியின் சதவீதத்தை விட வளர்ச்சியின் தன்மை முக்கியம். இதுவே சீனாவின் பலம். இந்தியாவுக்கு பாடம். ஒருமுறை அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் “நாங்ககள் சீனாவைப் பார்த்து பொறாமைப் படவில்லை. அதனை பின்பற்றவே விழைகிறோம் என்றார். ஆனால் அதைச் செய்யவில்லை.

செத்தும் கொடுத்த மாடு!! ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி என்பதே மத்திய அரசின் இலக்கு. ஆனால் உலகளாவிய மந்தம் இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகளையும் பாதித்துள்ளது. ஒரு விசித்திரமான உண்மை. பசுவின் புனிதம் பேசி மாட்டுக் கறியை தடை செய்கிற சட்டத்தை தாங்கள் ஆளுகிற மாநிலங்களில் கொண்டு வருகிறது பி.ஜே.பி. ஆனால் மாட்டுக் கறி ஏற்றுமதி 2014-15 ல் ரூ.28,000 கோடிகள். முந்தைய 2013-14 ஆண்டைக் காட்டிலும் ரூ 3000 கோடி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேக் இன் இந்தியா “சிங்கம்” இலட்சினையை “மாடு” என மாற்றிவிடலாம் போலிருக்கிறது.
இன்னொரு வேதனையான உண்மை. இவர்கள் முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதைப் பற்றிப் பேசுகையில், இந்திய முதலீடுகள் இங்கேயிருந்து வெளியேறுவதும் நடைபெறுகிறது. ஒரு உதாரணம் பாருங்கள். ‘‘மேக் இன் இந்தியா’’ அறிவிப்பை அகம் மகிழ்ந்து வரவேற்றவர்களில் ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராம்குமாரும் ஒருவர். கோவிந்தராஜன் டெக்ஸ்டைல்ஸ் என்கிற கோயம்புத்தூரை தலைமையகமாகக் கொண்ட நிறுவனத்தின் சி.இ .ஓ இவர். ரூ.230 கோடி முதலீட்டை முதலில் குஜராத்திலோ, ஆந்திராவிலோ போடுவதாக இருந்தவர் அதை அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்திற்கு கொண்டு போய் விட்டார். காரணம் என்ன? இங்கு யூனிட் மின்சாரம் ரூ 6.90. வட கரோலினாவில் ரூ.3 மட்டுமே. இங்கேயிருந்து இவர்களின் ஏற்றுமதி கப்பலில் சீனாவுக்குப் போக தூத்துக்குடி துறைமுகம்- சிங்கப்பூர் வழியாக 31 நாட்கள் எடுக்கிறது. வட கரோலினாவில் இருந்து 20 நாட்களே ஆகிறது. சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு நிறையக் கப்பல்களில் ஏற்றுமதி நடப்பதால் அங்கிருந்து திரும்பும் போது கப்பல்கள் பாதியாகவோ, காலியாகவோ இருக்கின்றன. இதனால் அதில் பேரம் பேசி போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்க முடிகிறது. இதனால் கோவிந்தராஜன் 230 கோடி முதலீட்டை அமெரிக்காவில் போய் போட்டுவிட்டார். ஒரே உதாரணத்தில் எவ்வளவு படிப்பினைககள் பாருங்ககள். மின்சாரப் பற்றாக்குறைக்கு அரசின் முதலீடுககள் அத்துறையில் குறைந்தது முக்கியக் காரணம். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் கப்பல் போக்குவரத்திற்கான காலம் குறைந்திருக்கும். ஆனால் அது குறித்தெல்லாம் முயற்சியேதும் இல்லை.

இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க இருக்கிற ஒரே அம்சம் மலிவான உழைப்பே. அது கூட மேற்கூறிய பலவீனங்களால் ஒர்க் அவுட் ஆவதில்லை. என்ன செய்வது? உழைப்பை இன்னும் மலிவாக்கு! அதற்கு எதிரான குரல்களை மௌனமாக்கு! அதற்கான உரிமைகளை முடமாக்கு! என்பதே மேக் இன் இந்தியா.

இருப்பதையும் பறிப்பதா? தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த முனைந்துள்ளார்கள். ‘‘சிறு தொழில்ககள் மற்றும் இதர நிறுவனங்ககள்’’ (பணி வரையறை மற்றும் விதிமுறைககள்) 2014 சட்ட வரைவு 40 தொழிலாளர்களுக்கு கீழ் பணியாற்றுகிற எந்தவொரு நிறுவனமும், மின்சாரப் பயன்பாடு இருப்பினும், இல்லாவிடினும் – தொழிலகச் சட்டம் மற்றும் 14 தொழிலாளர் சட்டங்களில் இருந்து விதிவிலக்கு பெற்றுவிடும் என்ற அம்சத்தைக் கொண்டுள்ளது. இச்சட்டங்களில் குறைந்த பட்ச ஊதியச் சட்டம், போனஸ் சட்டம், காண்ட்ராக்ட் ஊழியர் வரைமுறை மற்றும் ஒழிப்புச் சட்டம், ஊழியர் வைப்பு நிதிச் சட்டம், தொழிலாளர் அரசு காப்புறுதி சட்டம் ஆகியனவெல்லாம் உண்டு. 80 சதவீதமான தொழிலாளர்ககள் இப்பாதுகாப்புகளில் இருந்து கழற்றி விடப்படுவார்ககள். இருப்பதைப் பறித்தால் கோபம் வராதா! போராடுவார்கள் அல்லவா! அதற்காகத்தான் இன்னொரு அஸ்திரத்தை ஏவுகிறார்கள். அதுதான் தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழில் பணியமர்த்தல் (நிலையாணை) சட்டம் 1946, தொழில் தகராறு சட்டம் 1947 மூன்றையும் ஒன்றாகப் பிசைந்து உருவாக்கப்பட்டுள்ள தொழிலுறவு மசோதா.

தொழிலாளர்களில் 10 சதவீதம் அல்லது 100 பேர், எது குறைவோ, அவ்வளவு பேர் ஒன்று சேர்ந்தால் மட்டுமே புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பிக்க முடியும். அணிதிரட்டப்பட்ட தொழில்களில் வெளியாட்ககள் சங்கப் பொறுப்புகளில் இருக்க முடியாது. (தற்போது மூன்றில் ஒரு பங்கு இருக்கலாம்). அணிசாராத் தொழிலாளர் அமைப்புகளில் இரண்டு பேருக்கு மிகாமல் வெளியாட்கள் தலைவர்களாக இருக்கலாம். (தற்போது 50 சதவீதம் வரை இருக்கலாம்). பதிவு பெற்ற சங்கங்களில் பொறுப்பிலுள்ள ஒருவர் 10 சங்கங்களுக்கும் மேலாக பொறுப்பில் இருந்தால் தகுதி நீக்கம் அடைவார். 300 பேருக்கு குறைவாகத் தொழிலாளர்ககள் உள்ள நிறுவனங்களில் அரசின் அனுமதியின்றி அவர்களைப் பணிநீக்கம் செய்யலாம். (90 சதவீதமான தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு காலி). சட்ட பூர்வமற்ற வேலைநிறுத்தம் எனில் பங்கேற்பவர்களுக்கு ரூ 20000 லிருந்து ரூ.50000 வரை தண்டத்தொகை அல்லது ஒருமாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ‘‘தூண்டுவோருக்கு / உதவுபவர்களுக்கு’’ ரூ.25000 லிருந்து ரூ.50000 வரை தண்டத்தொகை அல்லது ஒரு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். தொழிலாளர்களின் கோபங்களையும், குமுறல்களையும் அடக்குவதற்கு ஆயுதங்களையும் தயார் செய்கிறார்கள்.

குருவிகளுக்கு சாணம் கூட இல்லை ‘‘நிறுவனங்ககள் வளர்ந்தால் தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கும்; வளமான தேசம் உருவாகும்; அது உழைப்பாளிகளின் தேவைகளை கவனித்துக் கொள்ளும்” இது இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியது. நிறுவனங்கள் வளர்ந்திருந்தாலும் ஊதிய உயர்வுப் பிரச்சினைகளில் அரசாங்கம் குறுக்கே நிற்பதை இன்சூரன்ஸ் துறையில் பார்க்கிறோம். நெருக்கடி காலங்களில் தொழிலதிபர்களின் செல்வம் பன்மடங்கு பெருகுவதையும், தொழிலாளர்களின் பங்கோ பறிக்கப்படுவதையும் எத்தனையோ தொழில்களில் பார்க்கிறோம். ‘‘குதிரைகளுக்கு ஓட்ஸ் கொடுத்தால் அது கொழுத்து சாணம் போடும்; அதைக் குருவிகள் கொத்தித் தின்னலாம் என்பதே உலகமயத்தின் சாகசவாதம். அதையே அருண் ஜெட்லி ‘நிறுவனம் வளர்ந்தால் தேசம் வளரும், தொழிலாளர் வருமானம் உயரும்’ என்கிறார். குதிரை கொழுத்தது உண்மை. ஆனால் குருவிக்கு சாணம் கூடக் கிடைக்கவில்லை.

பிரதமர் காப்பீடு திட்டம், பிரதமர் வங்கிக் கணக்கு என்றெல்லாம் அறிவிக்கிறார்ககள். விபத்துக் காப்பீட்டிற்கு வருடத்திற்கு ரூ.12, இயற்கை மரணங்களுக்கு ரூ.330 என்று வசூலிக்கிறார்ககள். இதில் அரசாங்கம் ஒரு பைசா கூட போடவில்லை. இன்சூரன்ஸ் நிறுவனங்களே பணத்தைத் தரப்போகின்றன. ஆனால் பிரதமர் என்கிற லேபில்லை இத்திட்டங்களில் ஒட்டிவிட்டார்கள். வங்கிக் கணக்கு என அறிவிக்கப்பட்டதில் 95 சதவீதமான கணக்குகளை அரசு வங்கிகளே திறந்தன. இவர்ககள் தாலாட்டிச் சீராடுகிற தனியார் வங்கிககள் குடிசைகளுக்கு, கிராமங்களுக்கு போகத் தயாராக இல்லை. தனிப்பெரும்பான்மையோடு பி.ஜே.பி அரசு அமைந்திருப்பதால் இந்த ஐந்தாண்டை தங்களுக்கு கிடைத்த ‘‘பொற்காலமாக’’ பன்னாட்டு மூலதனம் மற்றும் இந்தியத் தொழிலதிபர்கள் பார்க்கிறார்கள். 2015 பட்ஜெட்டில் தரப்பட்ட வரிச்சலுகைககள் ரூ 5,89,000 கோடிகள். வரி பாக்கிகள் ரூ 8,27,000 கோடிகள். வங்கி வராக்கடன்கள் மார்ச் 2016ல் 5,70,000 கோடிகளைத் தொடும் என்கிறார்கள். எத்தனை லட்சம் லட்சம் கோடிகள். இவற்றில் பெரும் பெரும் பகுதி கார்ப்பரேட்டுகளால் விழுங்கப்பட்டதே. ஒரு உதாரணம். 17 தனிநபர்கள் வைத்துகள்ள வரிபாக்கி மட்டுமே 2,14,000 கோடிகள் என நாடாளுமன்றத்தில் மத்திய நிதி இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்தார். (பி.டி.ஐ – ஆகஸ்ட் 1, 2015).

இவ்வளவு லட்சம் லட்சம் கோடிகளை சுவைத்து, சவைத்து, செரிக்கிற கார்ப்பரேட்டுகளை பார்த்து ‘‘கிவ் இட் அப்’’ என்று சொல்ல முடியாத பிரதமர்தான் சமுக நலத் திட்டங்களில், பென்சனில், மானியங்களில் கைவைக்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு நிலத்தை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருவதே நிலம் கையகப்படுத்துகிற சட்டவரைவு. விவசாயிகளின் ஒப்புதலுக்கு கூட இடமில்லை. நிலத்தை நம்பி இருக்கிற, நிலமே இல்லாதவர்கள் 52 சதவீதமானவர்கள். அவர்களுக்கு திருவோடுதான். இப்பாதையில் சமுகநீதிக்கு இடம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான துணைத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் கைவைக்கிறார்கள். பல்லாயிரம் கோடிகள் பறிக்கப்படுகின்றன.

கிரீஸ் நெருக்கடி. ‘‘சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே’’. இன்று நாம் அனுபவிக்கிற பேச்சுரிமை, எழுத்துரிமை. வாழ்வதற்கான உரிமைகள் அனைத்துமே நீண்ட நெடிய போராட்டங்கள் வாயிலாக ஈட்டப்பட்டவை. இவற்றையெல்லாம் பறிக்கிற “இருண்ட காலத்தை, 1975 ல் சந்தித்திருக்கிறோம். ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, “அவசர நிலை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன’’ என்று அண்மையில் கூறினார். இது உண்மையான அக்கறையா! உட்கட்சிப் பூசலா! உலவ விட்டு ஆழம் பார்க்கிற உத்தியா! என ஆராய்ச்சி செய்யலாம். எனினும் ஜனநாயக மறுப்பிற்கான சூழலை வெளிப்படுத்துகிற வார்த்தைகள். பன்னாட்டு நிதி மூலதனம் தேசங்களின் இறையாண்மையை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை, உட்கட்சி விவாதங்களைக் கூட மௌனிக்கச் செய்கிறது.

கிரிசில் 61 சதவீதமான மக்ககள் ‘சிக்கன நடவடிக்கைகளுக்கு’ எதிராக கருத்தெடுப்பில் வாக்களித்தார்கள். ஆனால் வாக்கெடுப்பு முடிந்த ஓரிரு நாட்களுக்குள்ளாக கடுமையான சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஐ.எம். எப் – ஐரோப்பிய இணைய வங்கி – ஐரோப்பிய இணையம் என்கிற திரிசூலத்திற்கு கிரீஸ் இரையாக வேண்டியிருந்தது-. சர்வதேச மூலதனத்தின் சுருக்குக்கயிறு தேச இறையாண்மையின் கழுத்தில் விழுந்துள்ளது. ஐரோப்பிய இணையத்தைவிட்டு வெளியேறலாம்; கிரிசின் நாணயத்தை உயிர்ப்பிக்கலாம் என்பது போன்ற வலிகள் நிறைந்த ஆனால் தேச நலன் சார்ந்த மாற்றுப்பாதைக்கு அங்குள்ள ஆட்சியாளர்கள் முனையவில்லை. இந்தியாவில் இருப்பவர்களும் ‘திரிசூல’ பக்தர்ககள் அல்லவா! இதனால்தான் இவர்களே ஆறு ஆண்டுகளாக எதிர்த்த இன்சூரன்ஸ் அந்நிய முதலீட்டு மசோதாவை ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் கொண்டு வந்தார்கள். அதை ஆதரிக்கத் தயங்கிய காங்கிரசும் நாடாளுமன்றத்தில் கடைசியில் கைதூக்கியது. ஆளுங்கட்சி_எதிர்க்கட்சி விளையாட்டெல்லாம் வீதிகளில் நடத்தப்படும் கீரி, பாம்பு சண்டை மாதிரிதான். சர்வதேச நிதி மூலதனம் – இந்தியப் பெரும் தொழிலகங்கள் மகுடி ஊதுகின்றன. நிலம் கையகப்படுத்துகிற அவசரச்சட்டம் நான்காவது முறையாக பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. சுரங்க தனியார் மயம், அந்நிய முதலீடுகளுக்கு “ஃபாஸ்ட் ட்ராக் என்பதெல்லாம் அடுத்தடுத்து விரைவுபடுத்தப்படுகின்றன.

“உள்ளடக்கிய உலகமயம்” என்ற பெயரில் பொருளாதாரப் பாதைக்கு மனிதமுகம் இருப்பதாகச் சித்தரிக்க முந்தைய ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள் “உள்ளடக்கிய இந்துயிசம்” என்ற பெயரில் மதவெறியைத் தூண்டவும், ஒடுக்கப்பட்ட மக்களை காலாட்படைகளாக சிறுபான்மையினர்க்கு எதிராக முன்னிறுத்தவும் முயற்சிக்கிறார்கள். நவீன தாராளமயப் பாதையோடு மதவெறியும் கை கோர்த்துக் கொள்கிறது. மக்களின் பிரச்சனையின் பால் எழுகிற ஒற்றுமையை சீர்குலைக்கிறது. உட்கட்சி விவாதங்களுக்குரிய ஜனநாயகம் கூட மறுதலிக்கப்படுகிறது. அந்நிய முதலீடுககள் குறித்து பி.ஜே.பி.யின் முன்னாகள் இராஜ குருக்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யாவின் குரல்ககள், அவ்வப்போது சுதேசி ஆட்டம் போடுகிற ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கள் போன்றவை குப்பைக் கூடையில் வீசியெறியப்படுகின்றன. இம் மாற்றுக் கருத்துக்களெல்லாம் கூட அதிருப்தியை அவர்களே அறுவடை செய்கிற உத்தியாகக்கூட இருக்கலாம். ஆளுங்கட்சியின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் கூட அரசின் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளுக்கு வருகிறது. ஒருமுறை மூத்த பி.எம்.எஸ். தலைவர் கூடச் சொன்னார். “தொழிலகங்களின் வாசல்களில் கூட மனித உழைப்பை இவர்கள் மறுத்து விடுவார்ககள். காவலாளர்களுக்குப் பதிலாக நாய்களைப் போட்டுவிடுவார்கள்’’ என்று ஆட்குறைப்பை, உரிமை பறிப்புகளைச் சாடினார். ஒருவேளை இதற்கு கூட இன்றைய அரசு அந்நிய நாய்களை வரவழைத்தாலும் ஆச்சரியமில்லை. இத்தகைய ஜனநாயகமற்ற சூழலை நோக்கி தேசம் நகர்வதை யார் தடுப்பது? “மக்களைத் தாக்குவதற்கு மக்களிடமிருந்தே இசைவைப் பெறுவது’’ உலகமயப் பாதையின் தந்திரம். கார்ப்பரேட் கைகளிலுள்ள ஊடகங்ககள் தங்களது “எஜமானர்களின் குரலை’’ எதிரொலிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் எதிராகப் பெருமுயற்சி தேவைப்படுகிறது.

பாவேந்தர் பாரதிதாசன் வார்த்தைகளில் “அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை உன்னைச் சங்கமமாக்கு மானுட சமுத்திரம் நானென்று கூவு’
-க.சுவாமிநாதன் (தமிழ்நாடு ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர்.)

Thursday, August 20, 2015

சேஷசமுத்திரம் ஜாதிக் கலவரம் நடந்தது என்ன? : எவிடன்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை!




சேஷசமுத்திரம் கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் மக்களிடையே கோவில் தேர் இழுப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது வன்முறையாக மாறி அங்குள்ள வன்னிய சாதியினர் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தியதில் போய் முடிந்துள்ளது.  தலித்துகளின் குடிசைகள், கோவில் தேர் எரிக்கப்பட்டு, தலித் பெண்கள் ஆடைகள் உருவப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. போலீசாரின் அலட்சியமும் ஜாதிய சக்திகளின் சதியும் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என உண்மையறியும் குழு ஒன்றின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மதுரையில் உள்ள எவிடன்ஸ் என்கிற தன்னார்வ அமைப்பின் உண்மை அறியும் குழு சேஷசமுத்திரத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடந்த நிகழ்வுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. எவிடன்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை விவரம் பின்வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் கடந்த 15.08.2015 அன்று சுமார் 500க்கும் மேற்பட்ட ஜாதி இந்துக்கள் பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை, கருங்கல், பீர்பாட்டில்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. தலித் பெண்களின் சேலையை உருவி ஆபாசமாக பேசி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்பி நரேந்திர நாயர் உள்ளிட்ட 11 போலீசார் காயமடைந்துள்ளனர். தலித் சமூக மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் தேர் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் குற்றஎண்.329/2015 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 506(2), 307, 436 இ.த.ச. மற்றும் பட்டியல் ஜாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம் 2014 பிரிவு 3(2)(a) உள்ளிட்ட 3 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு 7 பெண்கள் உட்பட 82 ஜாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு 17.08.2015 அன்று நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

சேஷசமுத்திரம் கிராமத்தில் ஜாதி இந்துக்களான வன்னியர் சமூகத்து மக்கள் சுமார் 2000 குடும்பங்களாகவும், தலித் தரப்பில் பறையர் சமூகத்து மக்கள் சுமார் 80 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர்.

தலித் தரப்பில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இக்கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா தோறும் இதுவரை டயர் வண்டியில் மாரியம்மன் உருவ சிலையை வைத்து தலித்துகள் தங்கள் குடியிருப்பில் பவனி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் சேஷசமுத்திரம் பஞ்சாயத்து தலைவராக ஜாதி இந்துவான சுப்பிரமணியன் என்பவர் தலித் மக்களிடம் ஊராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்கு அளித்தால் உங்களுக்கு தேர் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையில் தலித் மக்கள் சுப்பிரமணியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இதனடிப்படையில் ரூ.1,50,000 தலித் தரப்பில் வரி வசூலிக்கப்பட்டும், ரூ.3 இலட்ச ரூபாய் சுப்பிரமணியன் நன்கொடையாக கொடுத்தும் தேர் செய்யப்பட்டுள்ளது. ஆக தேரின் மதிப்பு 4,50,000 ரூபாய்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுப்பாதையில் தேர் பவனிக்கு தலித் மக்கள் ஆயத்தமாக இருக்கிறபோது ஜாதி இந்து தரப்பில் பொதுப்பாதையில் தலித்துகள் தேர் பவனி வர அனுமதிக்க முடியாது என்று தடுத்துள்ளனர். ஜாதி இந்துக்கள் தரப்பில் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர் அண்ணாமலை ஆகிய இருவரின் தலைமையில் தான் இந்த தடுப்பு நடவடிக்கை நடந்துள்ளது. அதுமுதல் சேஷசமுத்திரம் தலித் மக்களின் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போட்டு வந்துள்ளது.

இந்த வருடம் தலித் சமூகத்து மக்கள் எப்படியாவது தேர்பவனியை நடத்திவிட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தனர். இதனைத் தெரிந்து கொண்ட சேஷசமுத்தரம் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 14.08.2015 அன்று சங்கராபுரம் காவல்நிலையம் சென்று தேர் பவனி நடந்தால் உயிர்சேதம் ஏற்படும் என்று புகார் கொடுத்துள்ளார். இது புகார் என்பதை விட அப்பட்டமான மிரட்டலாகவே தெரிகிறது. இதனடிப்படையில் அன்று மாலை சுமார் 3.00 மணியளவில் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலித் தரப்பில் அருணாச்சலம், ஐயப்பன், ராமர் உள்ளிட்ட 5 நபர்களும் ஜாதி இந்து தரப்பில் 200 நபர்களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது நாங்கள் எந்த தகராறிலும் ஈடுபடமாட்டோம் என்று ஜாதி இந்து தரப்பில் உறுதிமொழி அளித்துள்ளனர்.

இந்நிலையில் 15.08.2015 அன்று மாலை சுமார் 7.00 மணியளவில் சுமார் 100 பேர் கொண்ட ஜாதி இந்து இளைஞர்கள் கற்களையும் உருட்டுக்கட்டையும் எடுத்து வந்து தலித் தரப்பில் அம்மன் கோவில் பகுதியில் கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை உடைத்துள்ளனர். டிரான்ஸ்பார்ம் மீது பெரிய கற்களை கொண்டு செயலிழக்க வைக்கின்றனர். இவையெல்லாம் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த 40 போலீசார் முன்னிலையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் லெட்சுமி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மாலதி ஆகியோர் தேர் பவனி நடத்த அனுமதி கொடுத்திருந்ததனால் தலித்துகள் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்பியிருந்தனர். ஆனால் போலீசார் அமைதியாக இருப்பதைப்பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த தலித்துகள் போலீசாரிடம் சென்று, அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறியதற்கு, தாக்குதலா நடத்துகிறார்கள் டியூப்லைட்டைத்தானே உடைக்கிறார்கள். ஒன்றும் நடக்காது தைரியமாக இருங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே 30 நிமிடம் கடந்து மேலும் ஜாதி இந்து தரப்பில் சுமார் 400 பேர் அப்பகுதிக்கு வருகை தந்து 500 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை, கருங்கல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து தலித் தரப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதிக்கு வந்திருந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி நரேந்திர நாயர் அவர்களை அக்கும்பல் சூழ்ந்து கொண்டு சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கும்பல் தலித்துகளை பார்த்து ஜாதி ரீதியாக இழிவாகப்பேசி, உங்களுக்கெல்லாம் தேர் கேட்குதோ, நீங்க எப்படிடா தேர் விடலாம் என்று கூறிக்கொண்டே பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தலித் குடியிருப்பில் வீசத் தொடங்கியுள்ளனர்.

• மகேந்திரன் என்கிற 22 வயது தலித் இளைஞர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த லாவண்யா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த கும்பல் மகேந்திரன் வீட்டிற்கு வந்து, இந்த கீழ்ஜாதியில் பிறந்த நாய் தான் நம்ம பெண்ணை திருமணம் செய்திருக்கிறது என்று கூறிக்கொண்டே முதல் பெட்ரோல் குண்டை மகேந்திரன் வீட்டில் வீசி எரித்துள்ளனர்.

• ஜாதி இந்துக்களின் கொடூர தாக்குதலால் பயந்து போன தலித்துகள் 4 - 5 வீடுகளுக்குள் உள்ளே சென்று பூட்டுப் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்துள்ளனர்.

• சில பெண்கள் அங்கிருந்து தப்பித்து வருகிற போது அவர்களின் சேலையை உருவி பாவாடை மற்றும் ஜாக்கெட்டுடன் நிற்க வைத்து ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார்.

• இந்த தாக்குதலில் ஜாதி இந்து தரப்பில் 100 பெண்கள் உட்பட 400 பேர் ஈடுபட்டுள்ளனர். 12 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் பெரும்பாலானோர் கடுமையான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜாதி இந்து பெண்கள் மடியில் புடவையில் கற்களை சுமந்து வந்து தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையில் குழந்தைகள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஜாதியம் தலைமுறையை எப்படியெல்லாம் நச்சாக்கிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையாக இருக்கிறது. குழந்தைகளும் பெண்களும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டாலும் அவர்கள் கருவிகளாக இயக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

• தலித்துகளுக்கு சொந்தமான அம்மன் கோவில் தேர் முற்றிலும் எரித்து சாம்பலாக்கப்பட்டது. கொளஞ்சியப்பன், சுரேந்திரன், சரவணன், கருப்பன், கோவிந்தன், ஆனந்தன், தனபால் ஆகிய தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் தலித்துகளுக்கு சொந்தமான 7 இருசக்கர வாகனங்கள், 2 ஜெனரேட்டர்கள் எரிக்கப்பட்டுள்ளன.

• நெடுமானூர், சங்கராபுரம், கரடிசித்தூர், தாவடிப்பட்டு, கொசப்பாடி போன்ற பல்வேறு கிராமங்களில் தலித்துகள் உயிருக்கு பயந்து தஞ்சமடைந்துள்ளனர். தற்போது இந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

• போலீசார் 82 ஜாதி இந்துக்களை கைது செய்த நடவடிக்கையை வரவேற்றாலும் இது தலித்துகள் மீது நடந்த தாக்குதலுக்கான கைதாக தெரியவில்லை. போலீசார் மீது நடந்த தாக்குதலுக்காக இக்கைது படலம் நடந்துள்ளது.

• பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் தேர் பவனி நடந்தால் உயிர் சேதம் ஏற்படும் என்று காவல்நிலையத்தில் மிரட்டல் புகார் கொடுத்திருந்தும் போலீசார் அலட்சியமாக பாதுகாப்பினை பலப்படுத்தாமல் இருந்தது கடும் கண்டனத்திற்குரியது. இந்த புகாரை கொடுத்தவுடன் சுப்பிரமணியனை கைது செய்து அந்த பகுதியில் பெருமளவில் போலீசார் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

• ஜாதி இந்துக்கள் 15.08.2015 அன்று இரவு 7.00 மணியளவில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். ஆனால் ஆயுதப்படை போலீசார் மறுநாள் 16.08.2015 அன்று காலை 5.00 மணியளவில் தான் அப்பகுதிக்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் 10 மணி நேரம் இரவு முழுவதும் தலித்துகள் உயிருக்கு பயந்து கொண்டு அழுதுகொண்டே கிராமத்தில் பாதுகாப்பற்று இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தப்பித்துபோன பலரையும் தாக்கியுள்ளனர். ஒருவேளை சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் அப்பகுதிக்கு போலீசார் வந்திருந்தால் இதுபோன்ற கொடுமையை நடக்காமல் தடுத்திருக்க முடியும்.

• தலித் பெண்கள் கழிப்பறைக்கு சென்றால் அவர்கள் மீது கற்களை வீசுவது, மின்சாரத்தை துண்டிப்பது, ஜாதி ரீதியாக பேசுவது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற வன்கொடுமைகள் அப்பகுதியில் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்வாக இருந்து வந்திருக்கிறது.

• தலித் தரப்பில் எமது குழுவினரிடத்தில், சம்பவம் நடப்பதற்கு முன்பு சேஷசமுத்திரம் பகுதியில் முக்கிய ஜாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர் வந்து சென்றிருக்கிறார். அவரின் தூண்டுதலில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று தலித் தரப்பில் கூறுகின்றனர்.

• எமது குழுவினரை அப்பகுதிக்கு உள்ளே செல்ல மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் கோட்டாட்சியரும் அனுமதி மறுத்தனர். தற்போது இப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்றும் நீங்கள் செல்ல முடியாது என்றும் எஸ்பி தெரிவித்தார். நாங்கள் வன்முறையை தூண்டுவதற்காக இப்பகுதிக்கு வரவில்லை தகவல் சேகரிக்க வந்திருக்கிறோம். 144 தடை உத்தரவு நோக்கம் என்பது முன்எச்சரிக்கை நடவடிக்கையே தவிர தகவல் பெறுவதை தடுப்பது அல்ல என்பதை விளக்கியும் எஸ்பி அமைதியாக இருந்தார். மாவட்ட ஆட்சியர் லெட்சுமி அவர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் கோவில் திருவிழா நடப்பதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை எடுக்காமல் தற்போது 144 தடை உத்தரவு போட்டு உண்மையை மூடி மறைப்பது ஏற்புடையதல்ல. உங்களது கடமையிலிருந்து நீங்கள் தவறியிருக்கிறீர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

• காயமடைந்த போலீசாருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட தலித்துகளை இதுவரை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நேரடியாக சென்று சந்திக்கவில்லை. அந்த மக்களுக்கு எவ்விதமான நிவாரணமும் அளிக்கவில்லை. குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

• தலித்துகளுக்கு சாமி இருக்கலாம், தேர் இருக்கலாம். அது அவர்களிடத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும். பொது இடத்திற்கு வருவது தீட்டு என்கிற தீண்டாமையின் உச்சகட்ட கொடுமை நிகழ்வாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு முன்வைக்க விரும்புகிறது.

பரிந்துரைகள்:

• இத்தகைய கொடிய வன்கொடுமையில் ஈடுபட்ட திரு.சுப்பிரமணியன், திரு.அண்ணாலை உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

• தலித் பெண்களின் சேலையை உருவி அவமானப்படுத்திய வன்கொடுமை கும்பல் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

• எரிக்கப்பட்ட 7 வீடுகளும் உடனடியாக கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல் பொருட்சேதங்களுக்கான நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுபோக ஒவ்வொரு தலித் குடும்பத்தினருக்கும் ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

• இந்த கொடிய வன்முறையில் ஈடுபட்ட ஜாதி இந்துக்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ. 3 இலட்சம் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

நன்றி: A.கதிர், செயல் இயக்குனர்
எவிடன்ஸ் அமைப்பு, மதுரை.