Wednesday, July 14, 2010

உத்தப்புரம் தரும் பாடம்.

உத்தப்புரத்தில் இடிக்கப்பட்ட சுவரின் பாதை வழியே நடமாட்டத்தை தடை செய்வதை கண்டித்தும், அரச மரத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரியும், வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட 16 தலித்துகளை விடுவிக்க கோரியும் மதுரையில் சுமார் 500-1000 பேர் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் சிபிஎம் தோழர்கள். டி.கே.ரங்கராஜன் எம்.பி, நன்மாறன் எம்.எல்.ஏ போன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தான் போலிஸ் தடியடி நடத்தி, தலைவர்களை தரதரவென்று இழுத்துச் சென்று தான் யார் என்று நிறுவியது.

இடதுசாரி நண்பர்கள் இந்நிகழ்வில் நிறைய விஷயங்களை கவனிக்கவேண்டும். முதலாவது, இடதுசாரிகள் தாக்கப்பட்டதற்கு எந்தக் கட்சியும் பெரிதாக கண்டனம் செய்யவில்லை. இரண்டாவது, எம்.எல்.ஏ. எம்.பி என்றும் பாராது இருவரும் அடித்து நொறுக்கப்பட்டிருப்பது. மூன்றாவது, அடித்ததை 'தள்ளு முள்ளு' என்று எளிய வார்த்தைகளில் மீடியாக்கள் முடித்துக் கொண்டது. வைகோ, த.பாண்டியன் போன்றோர் இன்று கண்டன அறிக்கைகள் விட்டுள்ளனர்.


உத்தப்புரம் விஷயத்தில் ஜனநாயக முறையில் சிபிஎம் தோழர்கள் வழக்கம்போல் இரண்டுமணி நேரம் ஆர்ப்பாட்டம் என்று, பிள்ளைப்பூச்சியாக உட்கார்ந்துவிட்டுப் போயிருந்தால் இந்தத் தாக்குதல் நடந்திருக்காது. ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின் நீங்கள் முடிவெடுத்து முடியுங்கள் 'அதுவரை' நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருப்போம் என்று போராட்டத்தை தொடர்ந்ததை கண்டிக்கவே இந்தத் தாக்குதல். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீஸ் மாலை 6 மணிக்கே விட்டுவிட்டதை வைத்துப் பார்த்தால் தோழர்களின் 'தொடர்ந்த போராட்டம்' என்ற எண்ணத்திற்கு லேசாக கலைஞர் வைத்த குட்டுதான் இந்தத் தடியடி என்று தோன்றுகிறது.


தாக்கப்படுவதற்கு சற்று முன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியை டி.வி.யில் காட்டினார்கள். அதில் அவர் "உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கவேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டதன் பின்னும் காவல்துறை உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தி பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.." என்று சொன்னார். அவர் பேசியதன் தொனி 'கலைஞர் சரியாகத்தான் நடந்துள்ளார் ஆனால் அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை தான் இவ்வாறு நடந்துகொள்கிறது' என்பது போன்று இருந்தது. கலைஞரை குற்றமே சொல்லாமல் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்லவேண்டிய அவசியம் என்ன ? கலைஞர் சொல்லாமலா அவர்களைப் போட்டு அடித்தார்கள் ? ஏன் கலைஞரை நயந்து பேசவேண்டும்? பின்னால் தேர்தல் கூட்டு சேரமாட்டார்கள் என்று பயமா ? டி.கே.ரங்கராஜன் அப்படிப் பேசியது தவறு.


இத்தாக்குதலிலிருந்து இடதுசாரித் தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், கலகம் இன்றி நன்மை பிறக்காது. அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், போராட்டம் என்று 'யாருக்கும் வலிக்காமல்' போராடினாலோ, 'வலியுறுத்தினாலோ' ஆளும் வர்க்கங்கள் 'கண்டுக்காமல்' சரி சரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மரியாதையா கலைஞ்சு போங்க என்று இருப்பார்கள். மீறி நீங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தீர்களாயின் அதன் விளைவு இதுதான். மீறும் போது தான் கலகம் உருவாகும். எனவே நீங்கள் அரசை எவ்வளவு மீறுகிறீர்களோ அவ்வளவு நல்லது.


மாறாக நீங்கள் அரசிடமும், கலைஞரிடமும் பம்முகிறீர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடாமல் பம்மும் திருமா, கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களின் மத்தியில் சி.பிஎம் தலித் மக்களை தம்மிடம் ஈர்ப்பதற்காக இந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அதில் உண்மை இருப்பதால் நாம் அதை ஆதரிக்கவேண்டும். ஆனால் இதைப் போல மற்ற விஷயங்களிலும் இலங்கைப் பிரச்சனை உட்பட தீவிரமாகப் போராடாத வரை, அத்து மீறாதவரை, அது பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ இருக்கட்டும், சாதாரண கீழ்த்தட்டு, கீழ்நடுத்தர மக்களை சிபிஎம் மின் பால் ஈர்ப்பது கடினம்.


இதே போல் அங்கே ‘ஈழப் பிரச்சனை ஐநாவுக்கு அனுமதியில்லை’ என்ற விஷயம் பெரிதாகிய போது நம் தோழர்கள் கருத்து சொல்லவேயில்லை. செந்தமிழ் மாநாட்டின் “அரசியலைப்’ புரிந்துகொள்ளவே தெரியாதவர்கள் போல அங்கு நடந்த கருத்தரங்கில் காரத் பங்கேற்று கலைஞரை வாழ்த்துகிறார். இவையனைத்தும் சிபிஎம் மின் கூட்டணி அரசியல் எண்ணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவையன்றி வேறு என்ன ? இது போலத்தான் பெட்ரோலிய விலை உயர்வுக்கு எதிரான போராட்டமும். ‘அமைதியாக’ பந்த் நடத்திவிட்டால் அது ஆளுங்கட்சிக்கு வெற்றி. ஏனென்றால் அமைதியான பந்த்தில் அரசு இயந்திரம் பாதிக்கப்படுவதில்லை. அதன் ‘இமேஜ்’ம் பாதிக்கப்படுவதில்லை. பந்த் நடத்தியதால் அரசு பணிந்திருந்தால் பந்த் வெற்றியடைந்தது என்று பொருள். ஆனால் அரசு பணியவில்லை. இந்நிலையில் இப்போது சிபிஎம்மின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?


இதற்கு சிபிஎம்மிடம் சரியான பதில் இல்லை. பந்த் போன்றதொரு மக்கள் இணைந்த போராட்டத்திற்கே அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த தீவிரமான போராட்டம் என்ன ? போராட்ட வடிவம் என்ன ? அப்படியொரு வடிவம் சிபிஎம் வசம் இல்லாத போது மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற விஷயங்களை நடத்தினால் அரசு வழக்கம் போல் இதையும் கண்டுகொள்ளாது விட்டுவிடும். மக்களும் சிறு சிறு சலுகைகளில் மனத்திருப்தி அடைபவர்களாகிவிட்டதால் இந்தவிதப் போராட்டங்களின் மேல் சலிப்பு அடைவர். இந்தக் குறைகளை சிபிஎம் எப்போது களைந்து போராட்டங்களை பல கட்டங்களாக உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் கொண்டு செல்ல முற்படுமோ, நடத்தும் போராட்டத்தின் வடிவத்தின் மூலம் அரசை கோபப்படுத்த, நெருக்கடிக்கு உள்ளாக்க முடியுமோ, அன்று மக்களும் சிபிஎம்ன் பின் திரள்வார்கள். அன்று தீவிர, அதிதீவிர இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கூட ஆதரவளிக்கக் கூடும். இடதுசாரிகள் தீவிர கம்யூனிஸ்டுகள் போல் குண்டுகள் வைக்க வேண்டாம். ஆனால் அது போன்ற அதிர்ச்சியை, செயலிழந்த நிலையை அரசு அடையுமாறு செய்ய வேண்டும். ஒரு சிறு அதிர்ச்சி கூட ஏற்படுத்த இயலாத ‘போராட்டம்’ ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.

இக்கட்டுரை எழுதிய அடுத்த நாள் காலை செய்தி ஊடகங்களில் மற்றொரு செய்தி. அது சிதம்பரம் கோவிலில் 'நந்தன் பாதை' யை திறக்க வலியுறுத்தி சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முண்ணணியின் சார்பாக அதன் தலைவர் பி.சம்பத்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நந்தன் பாதையை இடித்தே தீருவோம் என்ற முழக்கத்துடன் சென்ற தோழர்களை காவல் துறை கோயில் வாயிலில் தடுத்து நிறுத்தியது. மீற முயன்ற தோழர்கள் 'தள்ளு முள்ளு'க்கு ஆளாயினர். அதாவது அடித்து விரட்டப்பட்டனர். பின்னர் நடந்தது தான் கவனிக்கப்பட வேண்டியது. காவல்துறை சிபிஎம் தலைவர்களுடன் 'பேச்சுவார்த்தை' நடத்தியபின் தோழர்கள் வழக்கம் போல தெற்குவாயில் தெருவில் 'சாலை மறியல்' செய்து கைதாகி வழக்கம் போல் மாலையில் வீடு திரும்பினர். சாயங்காலமே கலைஞர் அறிக்கை விடுகிறார். "கோயிலை தீட்சிதர்களிடமிருந்து அரசு மீட்ட போது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அரசை கோயிலை தொடர்ந்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள அனுமதித்ததுடன், கோவிலில் வேறு எதுவும் புதிய கட்டுமானங்களோ அல்லது பழைய கட்டுமானங்களை இடித்தலோ செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது" என்று.


இதில் உண்மையில் நடந்தது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒன்று சிபிஎம் தோழர்கள் தடையை மீறி நந்தன் சுவரை உடைத்து, அதற்கு போலிஸ் அவர்களை உதைத்து கைது செய்து, அதற்கு தீட்சிதர்கள் ஒருபக்கமும் மறுபக்கம் தோழர்களுக்காக தமிழ்நாடேயும் கொந்தளித்து எழுந்திருந்தால் அது ஒரு சரியான போராட்டம். இல்லை 'கோர்ட் தீர்ப்பை நாங்கள் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம் எனவே கலைஞர் சுட்டிக்காட்டிய கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம்' என்று சிபிஎம் போராட்டத்தை வாபஸ் வாங்கியிருந்தால் அது வேறு வகை. ஆனால் இரண்டும் இன்றி சுவரை உடைத்துவிட்டுதான் மறுவேலை என்று போனவர்கள் காவல்துறையின் ஆலோசனையின் பேரில் சுவரை விட்டுவிட்டு தெருவில் வந்து நின்று வழக்கம் போல் ஆர்ப்பாட்டம் செய்து, வழக்கம் போல் கைதாகி, டிவிக்கு போஸ் கொடுத்தபடி காவல்துறை வேனில் ஏறி, பின் வழக்கம் போல் மாலையில் விடுதலையானார்கள் என்றால் இதன் பொருள் என்ன ? முந்திய நாள் மதுரையில் 'அத்துமீறினால்' என்ன நடக்கும் என்று பாடம் கத்துக்கொண்டதன் விளைவா ? நாம் திருந்த முடியுமா ?

Wednesday, July 7, 2010

July 5, 2010 Bandh - A suggestion.

Though I have lots of disagreements and charges with Marxist-Lefts I still believe at least they are people (said to be) based on a scientific ideology. They are still 80% better than DMK and ADMK.I noted an important point to be considered that happened in this Bandh announced  primarily by Left and supported by BJP and other regional opposition parties.

The ruling class media has projected this Bandh as anti-people and showed that people were suffering and showing their displeasure over parties announcing the bandh. When I talked to commoners who do not have any strong political orientation in Chennai City I found that they also have similar views about the opposition parties conducting a Bandh. They could not realize that the Bandh is for their welfare and their trust on Left and opposition parties diminish. I heard even people saying "what these bunch of MP/MLAs are doing ? They just live luxuriously. Travel in ac cars. Fly using Govt money. Enjoy their life. Why don't they come to the road and stage a hunger strike ?".

It is important for the Lefts to recognize this irritation among people. What is the reason for this irritation ? I see one reason. The people could not realize that the Left leaders, MLAs and MPs are for people welfare. Why ?

Because these MPs/MLAs have no first hand in this Bandh. MPs/MLAs are representatives of the people. By the people and for the people. So when such an issue like Petroleum price hike comes they should fight/agitate first., Suppose if the Parliament session is under way, then the Left raises this issue on the parliament through their MPs and MLAs in State Assemblies. If not it starts from the People for Bandh. In the Parliamentary System setup the democratic fight starts from the Parliament, MPs-MLAs, Councilors, Panjayath heads and finally The People. Here in this strike that order is missing.

Now, In an agitation such as the Petroleum Price-hike Bandh, since the parliament session is not under way the Left announced Bandh directly involving the people. The thing I noted is the hierarchy of representation should be followed in a Bandh or in any other such agitation. It should start from MPs, MLAs declaring their protest and do Dharna's in front of Parliament or Prime Minister's Office/Home or President's Office/Home. If it is in the state then MLAs should be doing this in front of Assembly or Chief Minister's office / home or Governor's Office / Home.

Now, Let us consider a scenario if similar thing happened in the case of July 5 Bandh. Instead of CPM declaring a Bandh directly, CPM declares that all their MPs and MLAs would sit on an indefinite hunger strike in front of parliament or Prime minister's office. The media has no other go than to cover it and let the people know that (only) the Left Cadres they have elected are protesting against this price hike. Other parties must have taken a decision immediately before going to the people. After hunger strikes and other kinds of demonstrations by the MPs / MLAs, if still the Govt looks adamant on the issue we are fighting then the next step would be joining the next level of elected-members of the system (e.g. Councilors) and again stage demonstrations and strikes should be carried out. And in this process political parties will have to take a side as well as the issue gets highlighted on the media and in the people's mind. People would also get a feeling that the people they have elected fought for them truly and start to incline towards the agitation. Finally, on a day, the Bandh has to be announced which will definitely get lots of people than ever in support of it.

The other reason people might hate this type of Bandhs is that it stops there itself without further actions. The Lefts believe that with the mass threatening the center will obey and withdraw their hike. But now it seems they do not. Probably we can wait one more week to see whether the Govt reacts positively on this Petroleum Price hike issue. Then what is next ? There is no answer or declaration from the Left party to the people. So people would tend to think that there is no use on these agitations. Similar thing happened in 2009 February-May period. Lots of Bandhs, agitations, demonstrations and hunger strikes were conducted against the SriLankan war genocides but none of them got any results. Because nobody has a position to declare "what's next  step?". And democratic means of agitation become a mockery.

Do we remember the 1.4 Trillion(1 lakh crore) US Dollars(1$=45 Rs) Indian's black money is kept in Swiss Bank accounts? Convert US $ into Rupees would give (45 Lakh Crore Rupees..Wow). This news got heat in 2008 and Left and oppositions raised this issue. Some Pranab Mukerjee gave a statement we will act to bring the money back to India. Thats it. No follow ups. Even opposition parties do have 'amnesia' including CPM ? And in this July Bandh every media bothered about one day's loss to India due to the strike. The estimate for one day loss varied from 3000 Crores to 13000 Crores. None of the 'Economic Gillis' remembered 1.4 Trillion US dollars.

This democracy setup is a bogus setup. CPM's way of democratic demonstrations are going ceremonial. People beginning to think Bandh and all are a waste and nothing will come out of it. Even in such a situation this way of doing a democratic struggle might help people-elected-members-Party relationship to grow stronger. What do you think ?

புதைமணலில் விழுந்துவிட்டால் என்ன செய்வது ?

பார்த்தது: டிஸ்கவரி சேனல் (தமிழில்)
மெல்லத் திறந்தது கதவு படத்தில் 'தேடும் கண் பார்வை' பாடல் முடிவடையும் நேரத்தில் மோகன் அமலாவின் முகத்தைப் பார்ப்பதற்குள் அமலா புதை மணல் சேற்றில் மூழ்கிவிடுவாள் (போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போலவே அவள் முகம் சகதிக்குள் சென்று மறையும்). சிறுவயதில் இந்தக் காட்சியைக் கண்டு பதைபதைத்திருக்கிறேன். சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் 'Survivor Man' என்றொரு தொடரில் (வேண்டுமென்றே) கொடுமையான சூழல்களில் சிக்கிக் கொண்டு தப்பிப் பிழைக்கும் மனிதர் சகாரா பாலைவனத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.


நடு வழியில் ஒரு புதை குழியில் சிக்கிக் கொண்டார். அமலா போல் கத்தி கதறி மோகனைக் கூப்பிடாமல் சிரித்தவாறே கேமராவைப் பார்த்து நமக்குச் சொல்கிறார். புதைகுழியில் இறங்கியவுடன் நாம் செய்வது உடனே பதறி சுற்றி ஏதாவது இருக்கிறதா என்று தேடுவோம். அது தேவையில்லை. புதைமணலானது நீரை விட, சாதாரண மணலை விட அடர்த்தி மிகுந்தது. எனவே நாம் அதில் மூழ்க முடியாது. தவறுதலாக நாம் அதில் கால் வைக்கும் போது நமது எடையினால் நமது கால் உள்ளே குறிப்பிட்ட அளவு போய்விடுகிறது. மணல் காலை நன்கு பிடித்துக் கொள்கிறது. காலை மேலும் கீழும் நாம் இன்னும் ஆட்ட இன்னும் கீழே கீழே இழுக்கப்படுவோம்.


புதை குழியில் விழுந்துவிட்டால், பக்கத்தில் ஏதும் பிடிமானம் கிடைக்கவில்லையென்றால், முன்புறம் லேசாகக் குனியவேண்டும். அப்படியே ஒரு காலை சகதியினுள்ளிருந்து மேலே சகதிக்கு வெளியே கொண்டு வந்து நீட்ட வேண்டும். இப்போது நமது உடல் கிடைமட்டமாக வரும். நமது உடலை சகதியின் மேல் படுக்க வைத்து மற்றொரு காலையும் முழுதுமாக பாதம் வரை சகதிக்கு வெளியே கொண்டு வரவேண்டும். அவ்வளவு தான். இப்போது நீச்சலடிக்கும் பொசிஷன். பிறகென்ன. நீந்துவது போல சகதியில் நீந்தி அப்படியே உறுதியான கறைப் பகுதியை பிடிக்க வேண்டியது தான். நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகமா ? எனக்கும் தெரியாது. புதைமணலில் விழுந்து தான் பார்க்கவேண்டும்.