Wednesday, January 30, 2013

நெஞ்சில் நிற்பவன்..


தோற்றம்: 19.11.1982                  முத்துக்குமார்                                     மறைவு: 29.01.2009

தோற்றுப் போன..
தோற்றுக் கொண்டிருக்கும்...
அழிந்து கொண்டிருக்கும்...
ஈழத்தின்
இறுதி மூச்சுக்களில் ஒன்றாய்..

இறுகிய கரிக் கைகளில் தமிழீழத்தின் வாக்குமூலத்துடன்..
இன்முகமாய் இறந்து போனாய்..

நீயும் தமிழீழமும் இனி..
உயிர்ப்பிக்கப் படப்போவதேயில்லை.

சிங்களன்
ஊர் மாற்றி.. ஊர்ப் பெயர் மாற்றி...
கோவில் இடித்து... கொத்தளங்களை எரித்ததில்..
எரிந்து போன யாழ் நூலகம் போல் இன்று
நூற்றுக்கணக்கில் அழிப்பின் சின்னங்கள்...

ஆனால் பாவம் அவை யாவும் இனி
நினைக்கப் படாமலே அழிந்து போகும்
இது...
புது ஈழத் தமிழ் வரலாறு.

உனது இறப்பும் கூட வெற்றியில்லை.. அதுவே
தமிழின் இறுதி மரண அறிக்கை.
-- அம்பேதன்