Wednesday, December 31, 2014

தெற்காசிய அரசியலில் இந்தியாவின் பின்னடைவு - பேரா. மணிவண்ணன்

மே 2009 ஆம் அண்டு அரசியல் இராணுவ சூழலில் இருந்து ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து புவிசார் ரீதியான அரசியலாக முன்வைக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.  பிறகு கடந்த 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக மே ஆயுதமேந்திய போர் மெளனிக்கப்பட்ட பிறகான சூழலில், அரசியல் இராசதந்திர மற்றும் புவிசார் அரசியல் பார்வையில் இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றும் பலர் அறிவுறுத்துகிறார்கள்..

தெற்காசியப் பிராந்திய அரசியலிலும், ஆசியா மற்றும் மேற்குலக நாடுகளிலும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களையும்  இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.. அரசியல் ரீதியிலான முன்னெடுப்புகள் பன்னாட்டு தளத்தில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றம் உள்ளிட்ட இடங்களில் மனித உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சூழலில் பன்னாட்டு விசாரனைக்கான முக்கியமான ஒரு காலகட்டத்தில் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றோம். அதேவேளை தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படும் புவிசார் மாற்றங்களையும் பார்வைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்தியா 2005 – 2006 ஆண்டு காலகட்டத்தில் இருந்து இலங்கை அரசுடன் நெருக்கமான ஒரு உறவை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரசு இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு தேடியதில் இந்தியாவின் பங்காற்றல் மிகப் பெரியளவில் இருக்கின்றது. இதில் இந்தியாவின் பங்காற்றல் என்பதை விட இந்தியாவின் வீழ்ச்சியும் இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் இந்தியா வலியுறுத்தி வந்தது அரசியல் தீர்வுக்காகத்தான். ஆனால் 2009 ல் நடைபெற்றது அரசியல் தீர்வு அல்ல இராணுவ ரீதியான தீர்வு தான். அது இந்தியா வலியுறுத்தி வந்ததன் நேர்மாறான விளைவு. அதற்கு இந்தியாவே துணை போயுள்ளது. அதனால் தான் இப்பொழுது அடுத்த கட்டமான அரசியல் தீர்வை நோக்கி நாம் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக வரலாற்றில் நீதிக்கான எந்த ஒரு போராட்டத்தில் இராணுவ தீர்வில் முடிவு ஏற்பட்டதே கிடையாது. நீதிக்கான போராட்டத்தில் அரசியல் தீர்வுகள் தான் இறுதித் தீர்வாக இருக்க முடியும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கை அரசை மையப்பபடுத்தி இரண்டு விதமான மாற்றங்கள் நடந்துள்ளன. இலங்கை அரசு தமிழர் பிரச்சனைக்கு இராணுவ தீர்வு கொண்டுவந்த பின்னணியில் இலங்கையில் தமிழர் பிரச்சனையை தம்மால் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்றால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் கூட தம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று சிங்களர்கள் நம்புகின்றனர். இந்த உளவியல் நம்பிக்கையில்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் சீனாவுடன் இராணுவ, புவிசார் அரசியல் உறவை மேம்படுத்தி வருகின்றனர். அந்த உறவின் தாக்கத்தில் தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இலங்கையில் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக வந்து சென்று கொண்டிருக்கின்றன.

இது இந்திய அரசாங்கத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கூட இது குறித்து எதிர் வெளிப்பாடுகளை இந்தியா முழுமையாக தெரிவிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் இந்திய அரசாங்கம் இதுவரை தமது அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட பின்னடைவுகளை முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக 1954 ஆம் ஆண்டு சீனாவுடன் பஞ்சசீலக் கொள்கை கையொப்பமிட்ட இரண்டு மாதங்களில் திபத் என்றொரு நாடு இராணுவ ரீதியாக முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அதன் அரசியல் விளைவை இந்திய அரசு உணரவில்லை. பின்னர் 1959 ஆம் ஆண்டு திபத் தலைவர் தலாய்லாமா தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவிற்கு புகலிடம் தேடி வந்த பொழுது திபத் என்ற அண்டை நாட்டை நாம் முழுமையாக இழந்து விட்டோம்.  திபத் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் போனதற்கான பொறுப்பை இந்தியா இதுவரை ஏற்கவில்லை. இந்த விடயம் இராசதந்திர அரசியலில் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்து செல்லும் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் நாளை திருகோணமலைக்கு வந்து செல்லும் என்றால் இந்தியா புதிதாக ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடும். இந்தியாவிடமிருந்து அத்தகைய எதிர்ப்புகள் எழும் பட்சத்தில் சீனாவும் இலங்கையும் தங்களுக்குள் இருக்கும் நல்லுறவு மூலமாகத்தான் சீனாவின் இராணுவ கட்டமைப்புகளையும், நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை தாம் அனுமதிப்பதை பார்க்க வேண்டும் என்று பதில் கூறுவர் என்பதும் தெளிவு.

ஆனால் இலங்கையின் இந்தப் போக்குக்கு இரண்டு முதன்மைக் காரணங்கள் உண்டு. ஒன்று இந்தியாவின் புவிசார் அரசியல் சார்ந்த பார்வை எப்பொழுதுமே முனைப்புடன் இருந்தது கிடையாது 1959 ஆம் ஆண்டு திபத் விடயத்தில் இந்தியாவின் இராசதந்திர அரசியலுக்கு ஏறபட்ட பின்னடைவை இது வரை இந்தியா முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தவில்லை.  இரண்டாவது தமிழ் மக்கள் இலங்கையில் இவ்வளவு பெரிய இனப்படுகொலையை எதிர்கொண்ட பொழுது அதனை இந்தியா தடுக்கவில்லை என்பதை விட அந்த இனப்படுகொலை இந்தியாவின் மேற்பார்வையில் தான் நடந்தது என்பதை முழுமையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு இலங்கை அரசாங்கம் இந்தியாவையே விலக்கி வைத்து ஒரு அரசியலை முன்னெடுக்கும் பொழுது இந்தியா இதனை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது ஒரு கேள்விக்குறியான நிலைமையாக மாறியுள்ளது.

இந்த சூழலில் அமெரிக்கா அரசு தரப்பில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு 1970 காலகட்டத்தில் திருகோணமலையில் ஒரு வானொலி அமைக்க இலங்கையிடம் கேட்ட பொழுது அந்த வானொலி நிலையத்தை கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டிருந்த இலங்கை அரசு இந்தியா அதனை எதிர்க்கும் என்ற காரணத்தினால் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று அமெரிக்காவும் திருகோணமலையில் ஒரு வானொலி நிலையம் அமைக்கும் கோரிக்கை வைக்கும் இடத்தில் இல்லை அவ்வாறு ஒரு கோரிக்கையை அமெரிக்கா வைத்தால் அதை எதிர்க்கும் இடத்தில் இந்தியாவும் இல்லை. இதைத்தான் இந்தியப் பெருங்கடலில் நடைபெற்றுள்ள புவிசார் அரசியலில் ஏற்ப்பட்டுள்ள மாற்றமாக நாம் பார்கக் வேண்டும்.

இந்த மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள், பனிப்போர் காலத்தில் இந்தியப் பெருங்கடலில் இருந்த அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாடு தற்பொழுது முழுமையாக மாறிவிட்டது. மேற்காசியா நாடுகளில் அமெரிகக அரசு இராணுவ அரசியல் செயல்பாடுளில் ஈடுபட்டிருப்பதில் அங்கு தீர்வில்லாத ஒரு இராணுவத் தாக்குதல் சூழலை அமெரிக்க எதிர் கொண்டிருப்பதால் இந்திய அரசு இந்தியப் பெருங்கடல் பகுதியில் புவிசார் அரசியலை முன்னெடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் இந்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக காங்கிரசு தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் நலன் எனபதை விட, காங்கிரசின் நலனில் இருந்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நலனில் இருந்து, அமெரிக்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ள பின்னடவை ஆய்வு செய்யும் பொழுது, இந்தியாவின் வடகிழக்கில் சீனா ஒரு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் பொழுதும் அதனால் நமக்கு எதுவும் பின்னடைவு இல்லை என்று இந்தியா கூறி வருகின்றது. அதேபோல் இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் தாயகப் பகுதிகளை இலங்கை அரசு ஆக்கிரமிப்பை மேற்கொண்டு ‘முத்துமாலை’ திட்டம் என்ற முற்றுகைக்குள் சீனா, இந்தியாவை கொண்டு பொழுதும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்தப் போக்கு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்கின்றனர்.

சீனாவிற்கு, தொலைதூர இராணுவ கட்டமைப்புக்கான தேவைஇந்தியப் பெருங்கடலில் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இது ஒரு தவறான பார்வை. சீனா ஆப்ரிக்காவில் உள்ள இயற்கை வளங்களிலும் எண்ணெய் வளங்களிலும் பெரியளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. அந்த முதலீடுகளை பாதுகாக்கவும் அக்கடல் பாதையை பாதுகாக்கவும் சீனாவுக்கு  தளம் தேவைப்படுகின்றது. பசிபிக் கடற்பரப்பில் இருந்து தற்பொழுது இந்தியப் பெருங்கடலில் ஒரு இராணுவத் தளத்தை அமைக்கும் வேலைகளை மேற்கொண்டு வருகின்றது சீனா.  அந்தத் தளத்தை இலங்கையின் ஆதரவுடன் சீனா உருவாக்கியிருக்கின்றது.
இந்த மாற்றங்களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை புவிசார் அரசியல் பின்னனியில் இருந்து ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு களத்தில்  எத்தகைய முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதவேண்டிய ஒரு கட்டாயத்தில் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவ்வாறான போராட்டத்தை பன்னாட்டுத் தளத்தில் எடுத்துச் சொல்லும் பொழுது, நடைபெற்று வரும் பன்னாட்டு விசாரனையின் வளர்ச்சிப் போக்கில் ஒரு அரசியல் தீர்வை தேடவேண்டிய தேவை உள்ளது. அத்தகைய சூழலில் ஈழத் தமிழருக்கான எந்தத் தீர்வையும் யாரும், இந்தியா உட்பட, பரிசாக அளிக்கப்போவதில்லை.

இந்தியப் பெருங்க்டலில் நடக்கும் அரசியல் மாற்றங்களையும், இங்கு சீனாவின் ஆதிக்கத்தையும் ஒரு முதன்மையான அச்சுறுத்தலாக முன்வைக்கும் பொழுது, இங்கு நடைபெறும் மாற்றங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தொடர்பில்லாதது என்று பார்பப்தைவிட, இலங்கையில் தமிழரின் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழந்த காலகட்டத்தில் தான் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பும் உறுதி செய்ப்பட்டிருக்கின்றது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.. திருகோணமலையை இலங்கை அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருபப்தை விட ,தமிழர்கள் தங்கள் ஆட்சி அமைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழது இந்தியாவிற்கு கூடுதல் பாதுகாப்பு இருந்தது. எனவே புவிசார் அரசியல் ரீதியாக நடந்து வரும் மாற்றங்களை கவனமாக கண்க்கிட்டு. பன்னாட்டு தளத்தில் , புவிசார் அரசியல் பார்வையில் இருந்து இந்தியா ஈழப் பிரச்சனையை அனுகவேண்டும். 

நன்றி - பேரா. மணிவண்ணன்

Tuesday, December 23, 2014

சீவசுத்தமும் போஸ்ட் மார்டனிஸமும். :குளச்சல் மு. யூசுப்


பின்நவீனத்துவத் தை உயர்த்திப் பிடித்த, பொதுவுடைமை அமைப்பு சார்ந்த ஒரு இலக்கிய பிரிவின் கருத்தரங்கில் 12 ஆண்டுகளுக்கு முன் (குளச்சல் மு. யூசுப்)வாசித்த ஒரு கட்டுரை.
-------------------------------

பின்நவீனத்துவம் , பின்னைக் காலனியம், கீழைத்தேசியவாதம ் போன்ற பல் வேறு மாற்று சிந்தனை மரபுகள் இன்று, பின்தங்கிய நாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்பு சிந்தனைகளாக - அதாவது நமக்காக - மேலைநாட்டு அரசியல் ஆலோசகர்களின் பல் கலைக்கழக வராந்தாக்களில் உருவாகி இன்று, கீழைத்தேசப் பல்கலைக் கழகங்களின் தேனீர் விடுதிகளில் அபூர்வமாக விவாதிக்கப்பட்ட ு வருகின்றன.

மாற்று சிந்தனைகள், வெகுஜன நன்மைகளைக் கவனத்தில் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள்சார்புடைய தாக, நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதாக, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளுடன் இணைத்துப் பார்த்து, விலக்கியும் சேர்த்தும் விவாதிக்கப்படு வதுதான் சரியான விவாத முறையிலாக இருக்க முடியும். ஆனால், இந்தியச் சூழலில் குறிப்பாக, தமிழ்ச்சூழலில் இவை முன்வைக்கப்படுக ிற முறையியல் அபத்தங்களின் மொத்தத் தொகுப்பாக இருக்கின்றன.

அதிலொன்று குடி கலாசாரம் பற்றிய பின்நவீனத்துவப் பார்வை. குடியைப்பற்றி பின் நவீனத்துவம் தனக்கான ஒரு பார்வையைக்கொண் டிருக்கிறது. மேற்கத்திய மரபு; தட்ப வெட்ப நிலைகள்; அவர்களது பொருளாதார சூழல்களில் இந்தப் பார்வையில் ஒருவேளை தவறெதுவும் இல்லாமலிருக்கலா ம். ஆனால், தமிழ்நாட்டில், ஒரு தொழிலாளி அவனது மிகக் குறைந்த வருமானத்தில் பேட்டரிபோன்ற பல்வேறு விஷப்பொருட்கள் கலந்த மதுவை மண்டையைப் பிளக்கும் இந்த வெப்பமண்டல வெயிலில் குடிப்பான் என்றால், அவனது குடும்பம் நிச்சயமாக பின் நவீனத்துவம் வலியுறுத்தும் ‘சிதைவு’க்குள்ள ாகிவிடும்.

பின்நவீனத்துவ அறிவுஜீவிகள்? தொடர்ந்து முன்வைக்கும் ஒரு கருத்து: உலகில் இன்று அனைத்து வகையான கோட்பாடுகளும் காலாவதியாகிவிட்டன. அவர்களது மொழியில் சொல்வதானால் ‘நீர்த்துப்போய விட்டன.’ ஆகவே, உலகோரே இனி மனிதனின் மோட்ச பிராப்திக்கென எஞ்சியிருப்பது பின்நவீனத்துவம் ஒன்றேதான்.

பின்நவீனத்துவம் , பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன் சார்ந்து எந்த விதமான ஆலோசனைகளை முன்வைக்கிறது என்று ஒரு எளிமையான, அதேசமயம் மிக முக்கியமான கேள்வியொன்றை நீங்கள் கேட்டால், “ஆலோசனை சொல்வது மாற்று மரபுகளின் வேலை கிடையாது. மட்டுமல்ல, நீங்கள் குறிப்பிடும் எளிமை, முக்கியம் என்பதெல்லாம் வெகுசனச் சொல்லாடல்கள். எது எளிமை, எது முக்கியமென்பதை உங்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியாத பட்சத்தில் ஒற்றை எளிமை; ஒற்றை முக்கிய மெனும் சிதைவுகளை மறுக்கும் சொல்லாடல்களை பின் நவீனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. "எனும் பதிலில் உங்களுடைய கேள்வி, நீங்கள் கேட்க நினைத்த பல கேள்விகளுடன் முடங்கிப்போய் விடலாம்.

உண்மையிலேயே தெரிந்துகொள்ளு ம் ஆர்வம் மிகுந்து இவர்களிடம் பேசுவது கதைக்கு உதவாது என்று முடிவு செய்து தமிழில் இது தொடர்பாக வெளிவந்திருக்கும் தரவுகளைத் திரட்டிப் பார்த்தோம் என்றால் அதில் மாயாவாதத்திற்கு , புராணீக மரபு களுக்கு, குத்தகை முதலாளிகளுக்கு, சர்வதேசத் தரகர்களுக்கு, அரசு மற்றும் அதிகார இயந்திரங்களுக்கு ஆயில் போடுகிற வேலையை இந்த நவீனத்துவ தர்க்க சாஸ்திரிகள் செய்து கொண்டிருப்பதைக் காணலாம்.

அவ்வளவு சுலபமாகக் காணலாம் என்று சொல்லி விடவும் இயலாது. முதலில் பின்நவீன வாசிப்புக்குட்ப டுத்த வேண்டும். பிறகு, நிர் - நிர்மாணம் (ஞிமீ நீஷீஸீstக்ஷீuநீ tவீஷீஸீ) செய்து பார்க்க வேண்டும். இதுவொரு நீண்ட பிராசஸ்.

‘ஈராக்கில் அமெரிக்கா அத்துமீறியது என்பது ஊடகங்கள் கட்டமைத்த புனைவு. இதில் எதுவுமே உண்மையில்லை.’ - இது ஒரு மாற்று சிந்தனை - இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நீதிபோதனை: ‘பாவம் அமெரிக்கா’ என்பதுதான்.

காரண காரியங்களை, யதார்த்த சிந்தனைகளை மாயாவாதம் மறுக்கிறது. பின் நவீனத்துவம் மறுக்கவொன்றுமில்லை. ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வளவுதான். மக்கள் ஒன்றிணைவாக இருப்பதை அரசுகளும் மதவாதமும் நிறுவன விருப்பங்களும் ஒரு போதுமே அனுமதித்ததில்லை . கூடவே, இப்போது தமிழக பின்நவீனத்துவமும் கை கோர்த்துள்ளது. ஒற்றுமை, ஒன்றிணைவுகள் எல்லாம் ஜனநாயமற்றவை; ஒவ்வொரு மனிதனும் முதலில் அவனுக்குள்ளாவது ஒற்றுமையை நிலைநாட்டிக் காட்டட்டும் என்று பின் நவீனத்துவம் மார்தட்டுகிறது. ‘அவனே அனைத்தும்; அகம்பிரம்மாஸ்மி ’ என்று சீவசுத்தி வாதம் அடக்கவொடுக்கமாகச் சொல்லிக்கொள்கிறது. மக்கள் தெளிவுடனிருப்பதை எந்தவொரு நிறுவனமும் அனுமதித்ததாக வரலாறே கிடையாது. ஆனால், சீவசுத்தமும் பின் நவீனத்துவமும் மனிதனின் இருப்பையே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றன.

தமிழ்ச் சூழலில், தொழில் அடிப்படையிலும், பொருளாதாரம் சார்ந்தும் பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களுக்கு வர்ணம்பூசி, பொருளாதாரப் பிரிவை வர்ணாஸ்ரமப் பிரிவு களாக்கும் முயற்சியை பின்நவீனத்துவம் மேற்கொள்ளுகிறது. முஸ்லிம்களினிடையிலும் மனு, புனர் - நிர்மாணம் ஆகிறான். பொருளாதார முரண் தகர்ந்து போனாலும் வர்ணம் தகர்ந்து விடாமலிருப்பதில பின்நவீனம் கரிசனம் கொண்டிருக்கிறது.

பஞ்சமர்கள் என்று ஐந்தாவது வர்ணம்பூசப்பட்ட தலித்துகளுக்குளளும் பின் நவீனத்துவம் புகுந்து அவர்களை மேலும் கூறுகூறுகளாகக் காட்டும் வேலையைத் தொடர்ந்து மேற் கொள்ளுகிறது. பின்நவீனத்துவம் புகுந்து கூறுகளாக்க முயற்சி செய்யாத ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கவே முடியாதென்பதுதான் இப்போதைய நிலை.

பின்நவீனத்துவம் வெறுமொரு பண்பாடு சார்ந்த கருத்தியல் அணுகுமுறை. இது சிறு அளவில்கூட மக்களைச் சென்றடைய முடியாது என்றெல்லாம் நாம் ஆறுதல் பட்டுக் கொள்ள முடியாது. பார்த்தீனியம் செடியை வெறும் தாவரமாக மட்டுமே பார்த்த அனுபவங் களும் நமக்கு இருக்கின்றன. அறிவு ஜீவிகளின் சுயபோகம் வழியாகப் பரவுகிற இந்த பின்நவீனத்துவக் கோட்பாடு, தான் வலியுறுத்தும் கருத்துக்களை சமூகத்தின் அடி மட்டத்திலிருந்தே கொண்டு போக வேண்டுமென்று எச்சரித்திருக்கிறது. சோவியத் ரஷியாவில் இதை மேலேயிருந்து கொண்டு போக வேண்டிய தேவை மேலை நாடுகளுக்கிருந் தது. நிர் - நிர்மாணம் நடந்தது. மூன்றாம் உலகநாடுகளில் இதை கீழேயிருந்து கொண்டு வர வேண்டுமாம்.

அதாவது, அமெரிக்கா நிர்வாக இயக்குனராக இருக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களில் செயல்படும் தொழிற்சங்கங்கள் முதலில் பன்முகப்படுத்தப்பட வேண்டும். (காலனிய ஆட்சியின் பிரித்தாளும் கொள்கை, இன்றைய நவீன காலனிய ஆட்சியில் பன்முகத் தன்மையாகப் பதப்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது, ஒடுக்கப்பட்டோர்களது கூட்டுறவு உடைபட வேண்டும்.) தொழிற்சங்கவாதி களின் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும். சாதியம், புனருத் தாரணம் செய்யப்படவேண்டு ம். மூடநம்பிக்கைகளைத் தொன்மம் என்று அறிவிக்க வேண்டும். நரமாமிசம் தின்பவர்களை பண்பாட்டுப் போராளிகள் என்று பெருமைப்படுத்த வேண்டும். இப்படியாக, வர்த்தகக் காலனியத்திற்கு இந்திய சமூகம் முழுவசதியையும் செய்துகொடுக்க வேண்டும். இதுவரைக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றை பின் நவீனத்துவ கோட்பாடு சார்ந்த விஷயங்களாக நாம் புரிந்துகொள்வதில் தவறெதுவுமில்லை.

பின்நவீனத்துவத்தின் மிக முக்கியச் செயல்பாட்டுக்களமாக இருப்பது - அதா வது இவர்களால் விருப்பம்போல் குளறுபடி செய்ய இயல்கிற ஒரே துறை - இலக்கியம் தான். இதற்காக இவர்களை யாருமே கேள்வி கேட்க முடியாது. எழுதுபவனுக்கு இருக்கும் உரிமைகள் குறித்து இவர்களுக்கு அதீதமானப் புரிதல்களிருக்கின்றன. பாவம்! இது மட்டுமல்ல, ஒன்றரை மணிநேரம் கட்டுரை வாசித்தும் எதையுமே சொல்ல முடியாமல் விடும் இவர்களது திறமையும் தமிழ் பின்நவீனம் சார்ந்தது தான். இவர்கள் பெரும் தேடுதல் வேட்கையாளர்கள். இவர்களில் பெரும்பான்மையினரும் ஆன்மிகத்தில் களவொழுக்கம் பேணுபவர்களாக இருப்பதால் இதனை அகமன வேட்கை என்றும் சொல்லி விட முடியாது. விதிக்கோட்பாடுகளை இவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ‘பிளே’ என்றுதான் சொல்லவேண்டும். தெரிதாவோ யாரோ அப்படித்தான் சொல்லியிருக் கிறார்களாம்.

குறிப்பாக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை எடுத்துக் கொண்டால் அண்மைக் காலங்களில் இப்பரிசுகள் பெரும்பாலும் பின் நவீனப் படைப்புகளுக்கு அல்லது இந்தக் கூறுகளை அதிகமாகக் கொண்ட படைப்புகளுக்கே கிடைத்து வருகின் றன. இதனுள்ளிருக்கும் பிரதான அரசியல் அம்சம், நோபல் விருதுக்கென தேர்ந்தெடுக்கப்படுகிற பின்நவீன மனிதர்கள் மேற்குலகம் சாராதவர்களாகவும் தமது நாடுகளின் மேற்கத்திய எதிர் மனோபாவங்களை பின் நவீனப் பகடிக்கு உட்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கியவாதியும் மனிதர்கள்தானே? அமெரிக்காவின் பச்சை அடையாள அட்டையையும் நோபல் விருதும் என்றால் சும்மாவா?

சரி, ஒரு இலக்கியப் படைப்பில் பின் நவீனத்துவம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால் அறிவியல் முன்னேற்றம் மற்றும் புதிய பொருளாதாரப் பாய்ச்சலின் காரணமாக இளமையின் துவக்கத்திலேயே வெறுமையும் எரிச்சலும் தானுட்பட எல்லாவற்றின் மீதான வெறுப்பும் முளைவிடுகின்றன. காட்சிப் படிமங்கள் எதுவும் மூளைக்குத் தட்டுப்பட மறுக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மூளைக்குத் தொடர்பேற்படுத்தாத பின் நவீன மொழியமைப்பு இவர்களுக்கு ஆறுதல் தருகிறது. இதனை அனுபவித்த பின் நவீனத்துவ படைப்பாளிகள் அப்படியே வெளிப்படுத்தவும் செய்கின்றனர். மூளையை ஸ்பரிசிக்காத மொழியமைப்பு சாத்தியம்தானா என்றால் சாத்தியம்தான்! உதாரணமாக, கூட்டாஞ்சோறு என்பதை ‘சிதைவுகளின் ஒழுங்கமைவுச் சோறு’ என்று சொல்லிப் பாருங்கள். பெரிய அளவிலொன்றும் பொருள் வேறுபாடும் இருக்காது; ஆளைத் தொந்தரவும் செய்யாது.

பின்நவீனம்,பெண்ணியம் குறித்தும் திட்டவட்டமானப் பார்வைகளை வைத்திருக்கிறது. பாலினம் சார்ந்த பலவீனங்கள், மாதாந்திர சிரமங்கள், மறு உற்பத்திபோன்ற அனைத்துமே ஆணாதிக்க மனங்களின் வெளிப்பாடு. விலங்குகளிலும் பால் வேறுபாடு சார்ந்த உருவ வேற்றுமைகள் இருப்பது, உயிரினங்களின் ஆண்-பெண் கர்ப்பகால வேறுபாடு போன்ற அனைத்தையுமே பின்நவீனம் பாலின மனோபாவக் கோளாறாகவே பார்க்கிறது. பின் நவீனத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடான உண்மை என்பது ஒன்றல்ல என்பதை இங்கே பொருத்திப் பார்த்து சலித்துக்கொள்வது சரியாக இருக்கும்.
தலித்துகள், சிறுபான்மையினர் , ஒடுக்கப்பட்டோர மற்றும் அடித்தட்டு மக்களின் எளிய நியாயங்களுக்கும, மெக்காலேயின் உற்பத்திக் கூடங்களில் வளர்ந்தவர்கள், அரசு மற்றும் நிறுவனங்களின் புரியாத பதிலுக்குமான இடைவெளிகள் இந்த நிமிடம்வரை குறைவதாகத் தெரியவில்லை.

நன்றி - குளச்சல் மு. யூசுப்.

Monday, December 22, 2014

குடல் நோய்களுக்கு, ஈரல் பலப்பட சோம்பு. - சித்த மருத்துவம்.


அறிவிலும் ஆக்கத்திலும் மேன்மை கொண்ட நம் முன்னோர்கள் தங்களுடைய வாழ்வில் ஆரோக்கியத்திற்கே முதலிடம் கொடுத்தனர்.“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உலகிற்கு உணரச் செய்தவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும்.
நம் வீட்டு சமையல் அறைகளுக்குள்ளேயே மாபெரும் மருத்துவக் களஞ்சியத்தை வைத்துள்ளனர். ஒரு மனிதனின் உணவு மூலமே அவனுடைய நோய்க்கு மருந்தை கண்டறிந்து சொன்னவர்கள் சித்தர்கள்.வீட்டுச் சமையலில் ஏதோ வாசனைக்காக சீரகம், சோம்பு, இலவங்கம்,
வெந்தயம், கடுகு இவற்றை பயன்படுத்துகிறார்கள் என்று எண்ண வேண்டாம். ஒவ்வொரு பொருளும் தலைசிறந்த மருத்துவக்குணங்களைக் கொண்டது. கடந்த இதழில் சீரகத்தின் மருத்துவப் பயன்களை அறிந்தோம். இந்த இதழில் சோம்பின் குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். சிலர் அதை எடுத்து வாயில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். ஆம்
உண்ணும் உணவை சீரணிக்க வைக்கும் சக்தி இதற்குண்டு. எனவே எளிதில் சீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகள் போன்றவற்றில் சோம்பை அதிகம் சேர்த்து சமைப்பார்கள். இதை பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைப்பார்கள். இது பூண்டு வகையைச்
சார்ந்தது. வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இந்தியா முழுவதும் இது பயிரிடப்படுகிறது. குறிப்பாக கேரளா பகுதிகளில் அதிகம் விளைகிறது.இதன் பூ, விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

யோனிநோய் குன்மம் உரூட்சை மந்தம் பொருமல் போனமுறு காசம் பீலிகமிரைப்-பீன
உரைசேர்க்கின்ற வாதமு போஞ் சீர்பெரிய
சீரகத்தால்மூக்குநோ யில்லை மொழி
-அகத்தியர் குணபாடம்.

செரிமான சக்தியைத் தூண்ட:எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

குடல்புண் ஆற: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.
வயிற்றுவலி, வயிற்று பொருமல் அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

கருப்பை பலம்பெற:
கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். பெருஞ்சீரகத்தை இளம் வறுவலாகவறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும்விலகும்.

ஈரல் பாதிப்பு நீங்க:
உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

இருமல் இரைப்பு மாற:
நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

குளிர் சுரக் காய்ச்சல்:
அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பசியைத் தூண்ட:
பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

நன்றி: சித்த மருத்துவ முகநூல் பக்கம்
https://www.facebook.com/permalink.php?story_fbid=687207114691113&id=652770931468065

Tuesday, December 16, 2014

மாலத்தீவிலிருந்து பாடம் கற்போமா குடிநீருக்கு?


மாலத்தீவு மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட, 190 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு. மாலத்தீவின் முக்கியத் துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. 80 க்கும் மேற்பட்ட தீவுகள் ஹோட்டல்களுக்காகவும், Resort களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

மாலத்தீவின் தலைநகராக மாலே என்ற தீவு உள்ளது. ஒரு பக்கம் நோக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கம்பெனிகள் உருவாக்கம் போன்றவற்றால் 70களின் பிற்பகுதியில் மாலத்தீவின் மக்கள் தொகை அதன் தலைநகரான மாலேவில் அதிகரித்தது. மாலத்தீவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகையை கொண்டதாக மாலே நகரம் மாறியிருக்கிறது.

கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் மாலத்தீவின் நிலத்தடி நீரின் ஒரு பகுதி ஏற்கனவே உப்புத் தன்மையுடையதாக மாறியிருக்கிறது. மாலே வின் குடிநீர் தேவை மற்றும் வீட்டு பயன்பாட்டு நீர் தேவைகளுக்கு ஒரு பகுதி நன்னீராக இருக்கிற நிலத்தடி நீரும், மழை நீர் சேமிப்பு திட்டங்கள் மூலமாக சேமிக்கப்படுகிற நீரும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வளர்ச்சி என்ற பெயரில் மாலே நகரை நோக்கி நடைபெற்ற கம்பெனிகளின் வருகையும், அதிகரித்த குடியேற்றங்களும் நடைபெற்றதால் மாலே நகரின் சூழல் மாறத் தொடங்கியது. முறையில்லாத கழிவு நீர் மேலாண்மையால் நன்னீர் பகுதியாக இருந்த நிலத்தடி நீரும் மாசுபடத் தொடங்கியது.

இந்நிலையில் மழைநீர் சேமிப்பு என்பது நீருக்கான முக்கிய ஆதாரமாக மாறியது. கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் என்பது மிகுந்த செலவு மிக்கதாக இருப்பதால் சில resort களில் மட்டும் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. சுனாமிக்கு பிறகு மழைநீர் தொட்டிகள் பெருமளவு சேதமடைந்து விட்டதாகக் கூறி, எதிர்கால குடிநீர் தேவைக்கு அதனை சரிசெய்வதைக் காட்டிலும், கடல் நீரை குடிநீராக்குதல்தான் சிறந்த திட்டம் என்று குடிநீரை வியாபரமாக்கும் பெரும் நிறுவனங்கள் வரிசை கட்டி நின்றன.

அதற்கு பின்பான காலங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்பது ஒன்றே நாட்டின் முக்கிய நீர் வளமாக மாற்றப்பட்டது. நிலத்தடி நீர் முதன்மையானதாகவும், மழைநீர் சேமித்து பயன்படுத்தல் என்பது இரண்டாவதாகவும், கடல் நீர் பயன்பாடு மூன்றாம் நிலையாகவும் இருந்த நிலை மாறி கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனங்களின் கையை மட்டுமே எதிர்பார்த்த ஒற்றை வளமாக இந்த நிறுவனங்களால் மாற்றப்பட்டது.

நிலத்தடி நீர் வளத்தினை நாட்டின் சொத்தாக கருதாமல், பெரு நிறுவனங்களின் கட்டிடங்களையும், அவற்றின் முதலீடுகளையும் மட்டுமே சொத்தாக கருதி நீர் வளங்களை இழந்ததால் கடந்த வாரம் மாலத்தீவு சந்தித்த பிரச்சினை மிகக் கொடியது. கடந்த வாரத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேவில் உள்ள அரசுக்கு சொந்தமான கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆலைப் பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு முடங்கிப் போனது. இதனால் மாலே நகரில் வசிக்கும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலைக்கு சென்றனர். ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை உருவானது.

நாட்டின் மிக மோசமான பிரச்சினையாக அறிவிக்கப்பட்டு, அவசர நிலை ஏற்படுத்தப்பட்டது. மக்கள் தண்ணீருக்காக கடைகள் மற்றும் விடுதிகளை உடைத்து சூறையாடக் கூடும் என்று மாலத்தீவு அரசு அஞ்சியது. உடனடியாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறைகளை அறிவித்தது. கையில் இருந்த தண்ணீரை வைத்து ஒவ்வொரு குடும்ப அட்டையாக சோதித்து இரண்டு லிட்டர் தண்ணீர் கேன்களை வழங்கியது. மாலே நகருக்கு குடி பெயர்ந்த மாலத்தீவின் பிற பகுதி மக்கள் அது கூட கிடைக்கப் பெறாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நிலைமையை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல், அண்டை நாடுகளிடம் கையேந்தி நின்றது மாலத்தீவு. இந்தியா, சீனா போன்ற நாடுகள் 2000 டன் தண்ணீர் பாட்டில்களை மாலே நகருக்கு கப்பல் வழியாக அனுப்பினர். அந்த தண்ணீர் கேன்களை வைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு லிட்டர், மூன்று லிட்டர் தண்ணீர் கேன்களை வழங்கியது. இரண்டு லிட்டர் தண்ணீருக்காக மக்கள் அனைவரும் வரிசையில் நின்று காத்துக் கிடந்தனர். இந்த சில நாட்களில் மாலத்தீவில் குடிக்கவும், உணவுப் பயன்பாட்டிற்கும் தண்ணீர் இன்றி மாலே நகர் மக்கள் அனுபவித்தவை ஏராளம். ஆலை சரிசெய்யப்பட்டாலும் இத்தோடு இந்த பிரச்சினை முடியப் போவதில்லை. அது தற்காலிக தீர்வு மட்டுமே. பெரு நிறுவனங்களின் மயக்க வளர்ச்சியை நம்பி தங்கள் மண்ணின் நீர் வளத்தினை இழந்த ஆப்பிரிக்க நாடுகள் படும் துன்பத்தை சொல்லி மாளாது.

கடல் நீரை குடிநீராக்குதல் என்பது ஆரோக்கியமான குடிநீரல்ல, நிலத்தடி நீரிலிருந்து கிடைக்கப் பெறுகிற எந்த சத்துப் பொருளும் அந்த நீரில் இருக்காது, அந்த நீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை பெருமளவு காக்காது என்றும், கடல் நீரின் சில பகுதிகளில் போரான், அல்கால் டாக்சின் போன்றவை இருப்பதால் அது ஆரோக்கியமான உடல் நிலைக்கு ஏற்றதல்ல என்றொரு வாதத்தினை சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள். கடல் நீரை குடிக்கிற தன்மையுடையதாக மாற்ற முடியுமே தவிர, ஒருபோதும் அதை நன்னீராக மாற்ற முடியாது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

அதுவும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் இந்த கம்பெனிகள் காட்டும் ஆர்வமென்பது அது தருகிற கொள்ளை லாபத்தை நோக்கித் தான் இருக்கிறது. மாலத் தீவு மக்கள் தங்கள் மாத வருமானத்தில் பெரும்பங்கு பணத்தை நீரை பெறுவதற்காக செலவழிக்கிறார்கள்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கொள்ளை லாபம் ஈட்ட நினைக்கும் இத்தகைய நிறுவனங்களின் அடுத்த குறி என்பது சுமார் 1 கோடி மக்கள் வசிக்கிற சென்னை என்பதாகவே உள்ளது.

சென்னையின் நன்னீர் வளங்கள் மிக விரைவாக நிறுவனங்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் என்பது இந்த நாட்டின் மிக முக்கிய வளம் என்பதை இந்த அரசுகள் சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை. முதலில் சென்னையின் குறுக்கே ஓடிய மிகப் பெரிய நதியினை அழித்தோம். பிறகு நிலத்தடி நீர் வளம் என்பது படிப்படியாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. பல்லாவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள நிலத்தடி நீர் என்பது எதற்கும் பயன்படுத்த முடியாத நீராக மாற்றப்பட்டிருக்கிறது.

நிலத்தடி நீர் வளம் பெரு நிறுவனங்களின் கழிவுகள், வேதி குப்பைகள், முறைப்படுத்தப்படாத கழிவு நீர் மேலாண்மை போன்றவற்றால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் மக்களின் குடிநீர்த் தேவை என்பது பெரும்பாலும் என்பது சில தண்ணீர் கம்பெனிகளை சார்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த தண்ணீர் கம்பெனிகள் ஸ்டிரைக் என்று சொல்லி சப்ளையை நிறுத்தினாலே போதும் சென்னையை எப்படி ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த நிறுவனங்களை நம்பித் தான் நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கிறதா இந்த அரசுகள்!

நிலத்தடி நீர் ஆரோக்கியமில்லாத தண்ணீர், பாட்டிலில் இருப்பதுதான் சிறந்த தண்ணீர் என்று மிகப் பெரிய அயோக்கியத்தனமான விளம்பரப்படுத்தல் என்பது தமிழகம் முழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பொருளாக இருந்த பாட்டில் தண்ணீரை பயன்பாட்டுப் பொருளாக்க பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 7 கோடி மக்களை தண்ணீருக்கான சந்தையாக மாற்ற தண்ணீர் நிறுவனங்களிடையே கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று காட்ட, அரசே பாட்டில் தண்ணீருக்கு மக்களை பழக்கப்படுத்த குறைந்த விலை என்ற Price Tag ஐ பயன்படுத்துகிறது. இந்த காண்ட்ராக்டும் தண்ணீர் நிறுவனங்களிடம் செல்ல வெகு நாள் பிடிக்காது.

தண்ணீர் வளங்களை காப்பதும், முழுமையான தண்ணீர் பயன்பாடு மற்றும் பகிர்வு வசதிகளை ஏற்படுத்துவதுதான் அரசின் கடமை. தண்ணீரை அவன் 20 ரூபாய்க்கு விற்றால் நான் பத்து ரூபாய்க்கு விற்கிறேன் என்பதல்ல அரசின் வேலை. தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவான பொருள். மனிதர்களுக்கு என்பதைக் கூட தாண்டி அது இந்த மண்ணில் வாழ்கிற அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

குடிநீர், வீட்டுப்பயன்பாடு, விவசாயம் என அனைத்துக்குமான நிலத்தடி நீரை மொத்தமாக தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு தயாராக வைத்திருக்கிறது. மின்சார கட்டணத்தைப் போன்று நம் நிலத்து குழாய்களில் மீட்டர் பொருத்தப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு நாம் கட்டணம் கட்டப் போகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? உண்மையில் இதற்கான விவாதம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தொடங்கி விட்டது.

மேலும் சென்னையின் குடிநீர் தேவை என்பது கடல்நீர் சுத்திகரிப்பு என்ற ஒற்றை முகத்தை நோக்கி தள்ளப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமக்கே நமக்கான சொத்தான தண்ணீரை மாத வருமானத்தில் பாதியை செலவழித்து பண்டப் பொருளாக வாங்க நாம் தயாரா?
100,000 மக்களுக்கு தேவையான நீரை பக்கத்து நாடுகளிடம் கேட்டுப் பெற்றது மாலத்தீவு. சென்னையில் அந்த நிலை ஏற்பட்டால் 1 கோடி மக்களுக்கான நீரை யாரிடமிருந்து பெறப்போகிறோம்.

மாலத்தீவுகளுக்கு நீரை வழங்கிய நாடுகள் எதுவும் பரிதாபப்பட்டு அந்த நீரை வழங்கியிருக்கவில்லை. அந்த நாட்டின் இன்னொரு பகுதி வளங்களை கைக்கொள்ளும் திட்டத்துடன் தான் இந்த உதவியையே செய்ய முன்வருகின்றன. எனவே உலகின் எந்த வல்லாதிக்கத்தையும் நம்பி நம் வளங்களை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

மாலத்தீவிலிருந்தாவது பாடம் கற்போமா? தண்ணீரை தனியார்மயமாக்கும் எந்த திட்டங்களானாலும் அதை எதிர்த்து களம் காண்போம். நம் வளம் உரிமை, அதை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என உரக்கச் சொல்வோம். தண்ணீர் மசோதாவை எதிர்த்த போராட்டங்களுக்கு தயாராவோம்.

 மே 17 இயக்கம் முகநூல் பக்கத்திலிருந்து
https://www.facebook.com/mayseventeenmovement?fref=nf

Monday, December 15, 2014

கால் ஆணி - சித்த மருத்துவம்

 
ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி :-
+++++++++++++++++++++++++++++++++++++++
காலத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும்.
அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா… ஆளை உண்டு, இல்லைனு ஆக்கிடும்.
இந்த… கால் ஆணி இருக்கே, அது வந்துட்டா உயிர் போற மாதிரி வலி எடுக்கும். சிலர் என்ன வைத்தியம் செய்றதுனு தெரியாம பனைவெல்லத்தை கால்ஆணி உள்ள இடத்துல வச்சு தீக்குச்சியை பத்த வைப்பாங்க. இன்னுஞ்சிலர் பிளேட வச்சு ரத்தம்வர்ற அளவுக்கு ரவுண்ட் ரவுண்டா அறுத்து எடுப்பாங்க. எவ்வளவு கொடுமையானவைத்தியம் பாருங்க.
கைவசம் எளிமையான வைத்தியமெல்லாம் இருக்கும் போது எதுக்காகஇந்த முரட்டு வைத்தியம்?
அம்மான் பச்சரிசி செடினு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தச் செடியை உடைச்சு, அதுல வர்ற பாலை எடுத்து, கால் ஆணி இருக்கறஇடத்துல தடவி வந்தாஅந்தப் பிரச்னை ரொம்பச் சொகமா மறஞ்சி போயிரும்.
ஒரு செடியை சிறுசு சிறுசா உடைச்சு அதில வர்ற பாலை பயன்படுத் தலாம். ஒரு தடவை தடவினதும்குணம் கெடச்சிராது. தொடர்ந்து ரெண்டு வாரமாவது செஞ்சு பாருங்க. முதல்ல வலிகொறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைஞ்சிரும்.
மருதாணி இலை கொஞ்சம், மஞ்சத் துண்டு கொஞ்சம் ரெண்டையும் எடுத்து மையா அரைக்கணும். ஒரு நெல்லிக்காய் அளவுஎடுத்து, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி உள்ள இடத்துல வச்சுகட்டிடணும். தொடர்ந்து 10 நாள் செஞ்சு பாருங்க. துண்டக் காணோம்… துணியைக் காணோம்னுபாய்ஞ்சி ஓடிப்போயிரும் ஆணி.
சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போறதுக்கு முன்னாடி கால் ஆணி மேல பூசி வந்தா மூணுநாள்ல குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்துல புண்உண்டாகும். 
அப்படி வந்தா ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்சேர்த்து
குழைச்சு, புண் வந்த இடத்துல பூசுனா புண் ஆறிடும். கால் ஆணியும்காணாமப்போயிரும்.
கால் ஆணி நீங்க இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்தசுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணிநீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ளஇடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து,துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும்.
படுக்கும் முன்பு இதை செய்யவேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (24 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால்கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்...
இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்....
Link : https://www.facebook.com/…/இயற்கை-மருத்துவ…/718993441529451…
பொறுப்பும் ! பொதுநலனும் !
உங்கள் கடலூர் அரங்கநாதன்...

Tuesday, December 9, 2014

பாம்புக்கடிக்கு சித்த மருத்துவ வைத்திய முறைகள்


நம்மிடையே பல காலங்களாக இருந்து வந்த நாட்டுப்புற வைத்தியர்கள் (சித்த வைத்தியர்கள்) இப்போது குறைந்து போனதால் நாட்டு மருந்துகளை பற்றிய விசயங்களும் மறைந்து வருகின்றன. முன்பெல்லாம் பாம்பு கடியை பற்றி அவ்வளவாக பயப்பட மாட்டார்கள். கடித்த பாம்பு எதுவென்று தெரிந்து கொண்டால் எளிதாக வைத்தியம் பார்த்து பிழைத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியாக நம்புவார்கள்.

பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.

பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.

இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன.

எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.

பாம்பு கடித்ததும் ஐயோ....பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும்.

பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.

இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.

மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.

நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.

விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.

நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.

பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.

பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.

நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.

சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள். . .
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.

கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா....???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல...

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???

இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்...

முதலுதவி:-

1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.

3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை "அட்மிட்" செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.

7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

1.நல்ல பாம்பு
2.கட்டு வீரியன்
3.கண்ணாடி வீரியன்,
4.சுருட்டை பாம்பு
5.கரு நாகம்
6. ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில் பெருமளவு காணப்படுகின்றன. பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர்.

இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது. ஒருவருக்கு பாம்பு கடித்துவிஷம் ஏறிய நிலையில் இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து தான் ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப் போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :-

கடிவாய் எரியும், வாந்தி வரும், நடை தளரும், மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும், உயிர்ப்பு தடை படும், இறப்பு நேரிடும், வேப்பிலை கசக்காது,மிளகு காரம் இருக்காது, ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும், இரு பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் .

வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200 மி.லி.கொடுக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம். நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க வைக்கவும் , வாய் திறக்கும் , வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம். விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :-

இது கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும், குருதி தொடர்ந்து வரும், கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும், வாயில், மூக்கில் குருதி வரும், சிறு நீரும் குருதியாகும், ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை, வேம்பு கசக்காது. இது கடித்த அரை மணி நேரத்தில் சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி வரும் ,10 நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும், மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.

ஆங்கில மருத்துவம் நம் பூமியில் கால் பதிக்கும் முன் இது போன்ற சித்த பாரம்பரிய மூலிகை மருந்துகள் தான் பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றி வந்துள்ளது.

இரவில் நச்சுப் பூச்சி ஏதேனும் கடித்து விட்டால் என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம். இந்நிலையில் கடி பட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்
Ø இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்லபாம்பு என்றும்,
Ø புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டுவிரியன் பாம்பு என்றும்
Ø வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்,
Ø கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும்
அறிந்து உணரலாம்.

தேள்கடி மருந்துகள் :
ü எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள்கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
ü கல்லில் சில சொட்டுத் தண்ணீரைத் தெளித்து அதில் புளியங் கொட்டையைச் சூடு உண்டாகும்படி தேய்த்துத் தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும்; நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்துவிடும்.
ü சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
ü குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

ஒற்றை மருத்துவம்:-
சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.
v நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
v பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

வெறிநாய்க்கடி மருந்து :
v வெறிநாய் கடித்து விட்டால் நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

பாம்புக்கடி மருந்து :
ü பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்கவைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்கவைத்தவன் பல்கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

நஞ்சு முறிப்பு
Ø எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க, நாயுருவியின் விதையை வீசும்படி எடுத்து வெய்யலில் காயவைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

Ø உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும். வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்துவிட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு. ஆனால் சித்த மருத்துவத்தின் பயன்பாடுதான் இப்போது குறைந்து வருகிறது.
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
நன்றி - puradsifm facebook page
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/
www.facebook.com/puradsifm 
www.puradsifm.com
www.isaiyaruvi.com


Sunday, November 2, 2014

கத்தி. விமர்சனம் 2 - மக்களுக்குத் தரும் புத்தி.


கல்கத்தா ஜெயிலில் இருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் திருடர் கதிரேசன் என்கிற விஜய். அவர் அங்கிருந்து தப்பித்து சென்னை வந்து தனது நண்பர் ரூமில் செட்டிலாகிறார். அப்போது நடுஇரவில் யாரோ சிலர் ஒருவனை சுட்டுத்தள்ளிவிட்டுச் செல்ல காப்பாற்றப் போகும் விஜய் அதிரச்சியாகிறார். அங்கே உயிர்போகக் கிடப்பது ஜீவா எனப்படும் இன்னொரு விஜய்.

ஜீவாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பின்பு ஆள்மாறாட்டம் செய்துவிட்டு ஜீவா இருந்த முதியோர் இல்லத்தில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்து கதிரேசன் ஜீவாவாய் முதியோர் இல்லம் செல்ல ஒவ்வொன்றாய் பிரச்சனைகள் கிளம்புகிறது. எந்நேரமும் விஜய்யை கொல்ல ஆட்கள் சுற்றி வர மெதுமெதுவே தெரிகிறது ஜீவா பற்றி.
ஜீவா தன்னூத்து எனும் தன் கிராம மக்களுக்காக போராடி வரும் ஒரு 'தீவிரவாதி'. தனது கிராமத்திலும், சுற்றுப்புற கிராமங்களிலும் விவசாயம் செழிக்க அந்தப் பகுதியிலேயே நிலத்தினடியில் இருக்கும் வற்றாத நீரூற்று இருப்பதை அறிகிறான் ஜீவா. அதை ஏற்கனவே அறிந்திருக்கும் கார்ப்பரேட் கோலா கம்பெனி அங்கிருக்கும் நிலங்களையெல்லாம் விவசாயிகளிடமிருந்து பலமடங்கு விலை கொடுத்து வாங்கிவிடுகிறது.
ஊர்மக்களை ஒன்று திரட்டி போராடுகிறான் ஜீவா. பதிலுக்கு அவனைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான் கோலா கம்பெனியின் அதிபர். கார்ப்பரேட் கோலா கம்பெனியின் ஆட்கள் ஜீவாவைக் கொல்ல முயன்றது போல் கதிரேசனை ஜீவா என்று நினைத்துக் கொல்ல முயல ஏற்கனவே பக்கா ரௌடியான கதிரேசன் அவர்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார். நடுவில் சமந்தாவுடன் மானே, தேனே பொன்மானே போல கொஞ்சம் ஜாலியாகக் காதலித்துக் கொள்கிறார்.
கார்ப்பரேட் முதலாளிகள் அனைவரும் கோலா கம்பெனிக்காரனுக்கு உறுதுணையாயிருக்க நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவினையும் விலைக்கும் வாங்கும் முதலாளியை எதிர்க்க சென்னை மாநகரத்துக்கு குடிநீர் வரும் ஏரிகளை அடைப்பதன் மூலம் சென்னை நகரமே கிராமத்தைத் திரும்பிப் பார்க்கும்படி செய்து தனது கிராமத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் ஜீவாவும், கதிரேசனும் என்பதுதான் மீதிக்கதை.

படம் ஒரு பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை நாலே வரிகளில் விளக்கிவிடுகிறது. நாலாவது உலகப்போர் தண்ணீரால்தான் வரும் என்று யாரோ சொன்னார்கள். படத்தில் கம்யூனிசம் பற்றி கூட ஒரு எளிய விளக்கம் வருகிறது. சமீபத்தில் வேலை தருகிறேன் என்று பட்டை நாமம் சாத்திவிட்டுப் போன 'நோக்கியா'விலிருந்து மக்கள் கார்ப்பரேட்டுகளின் ஓநாய்க் குணத்தை மெல்ல மெல்ல புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

படத்தில் இதுபற்றி மட்டுமல்ல பாலாற்றில் கோக் கம்பெனி துளை போட்டு நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவது, காவிரி டெல்டாவில் மீத்தேன் வாயுவை (அதாங்க சமையல் கேஸ்) எடுக்கும் ரிலையன்ஸ் கம்பெனிபற்றி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி, இவற்றிலெல்லாம் கார்ப்பரேட்டுக்கள் மக்களுக்கு மொட்டையடிப்பது பற்றி சர்வசாதாரணமாக வசனங்கள் பளிச்சிடுகின்றன. முருகதாஸூக்கு ஒரு சபாஷ். முருகதாஸ் இனி கார்ப்பரேட்டுக்குப் படமெடுப்பாரா? இல்லையா? என்பது நமது நாளைய கேள்வி.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் கொலைவெறித்தாக்குதலிலிருந்தும் படம் தப்பிப் பிழைத்திருப்பது நம் அதிர்ஷ்டமே. ஜார்ஜ் சி.வில்லியமஸின் ஒளிப்பதிவுக்கு ஒரு சியர்ஸ். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் (கதையைச் சுட்ட)முருகதாஸின் கதைக்கு பலம் சேர்க்கிறது. ஹீரோ படம் என்பதால் விஜய் மற்றும் விஜய்யின் நண்பன் சதீஷ் போன்றோரே படம் முழுவதும் தெரிகிறார்கள். கிராமத்துத் தாத்தாக்களின் சென்ட்டிமென்ட் வசனங்கள் சில நெஞ்சைத் தொடுகின்றன.

'கத்தி' படத்தின் தயாரிப்பாளராக இனப்படுகொலைகளுக்கு துணை போன ராஜபக்சேவின் பினாமி லைகா மொபைல்ஸ் இருந்ததும் அந்தப் பிரச்சனை பெரிதாகியதும் தெரிந்ததே. விஜய் கோக் போன்ற குளிர்பான கம்பெனிகளின் விளம்பர ஹீரோ. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் திரைக்கதையை அப்படியே ஒருவரிடம் இருந்து கறந்துவிட்டு அவரை கழற்றிவிட்டார் என்று ஏகப்பட்ட குளறுபடிகள் இந்தப் பட விவகாரத்தில் உண்டு. 'கார்ப்பரேட்டுகள் தங்களுக்கான சவப்பெட்டிகளுக்கு தாங்களே ஆர்டர் கொடுக்கும்' என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது.

திரையரங்கினுள் படம் பார்க்க அமரும் ஆடியன்ஸ் இதுபோன்ற முரண் அரசியல்களை உணர்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான். படம் கார்ப்பரேட்டுகள் எவ்வாறு ஒவ்வொரு கிராமம், டவுன், நகரங்கள், ஆறு, குளம் என்று எல்லா வளங்களையும் தங்கள் லாபமாக உறிஞ்சுகிறார்கள் என்பதை மிகத் துணிவாகப் பேசுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு அரசு, காவல்துறை மற்றும் நீதித்துறை எவ்வாறு கைகட்டி சேவகம் செய்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது திரைக்கதை. இப்படி துணிவாகப் பேசியதற்காக ஏ.ஆர்.முருகதாஸுக்கும், விஜய்க்கும் நாம் சல்யூட் வைக்கலாம்.

இந்த நுகர்வுக் கலாச்சார உலகில் வெறும் ஆடலும், பாடலும் காமெடியுமே  பிரதானமாய்க் கொண்டு படம் எடுக்க முடியாமல் போகும் நிலைக்கு சினிமா உலகம் வந்திருக்கிறது. ரத்தமும் சதையுமாக சமூக அவலங்களும், வேலைவாய்ப்பின்மையும், அமைதியான வாழ்க்கை வாழமுடியாத நிலையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் மேலும் மக்களை சக்கைகளாக கரும்பு எந்திரத்தில் பிழியும் சூழலில் நிஜ உலகை விட்டு நிறையவே விலகிப் போய்விட்ட கமர்ஷியல் சினிமா மக்களின் பிரச்சனைகளை

இப்படியாகவாவது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களே என்று நாம் லேசாக திருப்திப் பட்டுக்கொள்ளலாம் தான். அந்த வகையில் கத்தி ராஜபக்சேக்களும், லைக்காக்களும் தாங்களே தங்களுக்கு வைத்துக்கொண்ட ஆப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
வசூலுக்காகவாவது பேசியே ஆகவேண்டிய சூழல் இன்று வந்திருக்கிறது. விஜய்யின் குத்துப் பாட்டுக்கும், காற்றில் பறந்து அடிக்கும் ஹீரோயிசத்துக்கும் மட்டுமே விசிலடித்து வந்த ரசிகன் இப்போது தனது ஆதர்சன ஹீரோ விஜய் ஒரு போராட்டக்காரனாக ஆவதைக் காணும்போது தானும் மக்கள் போராட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவனாக ஆகும் வாய்ப்பு ஒரு பத்து சதவீதம் இருந்தால் கூட அது ஒரு சமூக நன்மையே.

இப்படியாகவாவது மக்கள் விழிப்புணர்வு அடைகிறார்களே என்று நாம் லேசாக திருப்திப் பட்டுக்கொள்ளலாம் தான். அந்த வகையில் கத்தி ராஜபக்சேக்களும், லைக்காக்களும் தாங்களே தங்களுக்கு வைத்துக்கொண்ட ஆப்பு என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

Wednesday, April 9, 2014

கண்ணில்லாத குயில்கள் பாடும் 'குக்கூ'


தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது குக்கூ படத்தின் மூலம் அதை பொய்யாக்குவேன் என்று கிளம்பிய எழுத்தாளர் ராஜூ முருகன் ஓரளவிற்கு வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லலாம். தமிழில் படங்கள் நல்ல தரமாக இருந்தால் அதைப் பாராட்டும் நல்ல மீடியாக்கள் இருப்பதும், ரசிகர்கள் தியேட்டரில் போய் காசு கொடுத்து ஓடவைக்காவிட்டாலும் நல்ல படங்களை நல்ல படங்கள் என்பதால் அவற்றுக்குத் தரும் மதிப்பும் தமிழ் சினிமாவை நல்ல சினிமாக்கள் நிரம்பியதாக ஆக்கிவருகிறது ஒரு நல்ல அறிகுறியே.
இயக்குனர் ராஜூமுருகன் தான் விகடனில் நிரூபராக எழுதிவந்த காலத்தில் சந்தித்த பார்வையற்றவர்களான தமிழ்-சுதந்திரக்கொடியின் காதலை பற்றி கூறுவதாக கதை ஆரம்பிக்கிறது. தமிழ் (அட்டகத்தி தினேஷ் ) மின்சார ரயில்களில் பொருட்கள் விற்றும் மற்றும் பாட்டுக்கச்சேரிகளில் இளையராஜாவின் குரலில் பாடியும் வருபவர். அவர் மற்றொரு பார்வையற்றவரான சுதந்திரக்கொடியை (மாளவிகா நாயர்) சந்திக்கிறார். கொடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தானே முயற்சி எடுத்து ஆசிரியை படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். அண்ணன்-அண்ணி இருந்தும் சுயநலமிக்க அவர்களுடன் வசிக்காமல் தனியாக சிஸ்டர்ஸ் ஹாஸ்டலில் வசிக்கிறார்.
இவர்களிருவரும் சந்தித்து, அது மோதலாகி, பின் காதலாக மலர்ந்து, வளர்ந்து, உறவினர்களின் சூழ்ந்திருப்பவர்களின் சூழ்ச்சிகளால் எவ்வாறு கலைக்கப்பட்டது? பின் கடைசியில் கண்ணுள்ளவர்களின் உலகில், இரக்கமுள்ளவர்களின் கைதூக்கல்களில், கண்ணில்லாத கொடியும் தமிழும் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் கதைச் சுருக்கம். சுருக்கமாகச் சொன்னால் ஒரு எளிமையான காதல் கதை.
இது பார்வையற்ற இருவரின் காதல் கதை என்பதால் தான் இந்தக் கதை கவனிப்பு பெறுகிறது. அதற்கேற்றபடி பார்வையற்றோரின் உலகை ஓரளவிற்கு காட்சிப்படுத்த முயல்கிறார் இயக்குனர். பிங்க் நிறம் எப்படியிருக்கும். மார்க் போட்டதால் கோபப்படும் கொடியின் மீதான காதலை இன்னதென்று வரிகளில் விளக்கும் தினேஷ், கொடியின் காலடித் தடத்தையும், வாசனையையும் தூரத்திலிருந்தே  தினேஷ் உணர்வதான புனைவு, 'நீ எப்படி இருக்கேன்னு பாத்துக்கறேன்'என்று தொடு உணர்வுகளில் நபர்களை உணரும் அவர்களின் உலகம், காதலை எதிர்பார்த்துச் செல்லும் கொடிக்கு கிடைக்கும் அயர்ன்-செய்யப்பட்ட-ட்ரெஸ்கள் இரக்கம், இசை - இளையராஜா, மின்சார ரயில்களில் பார்வையற்றோர், திருநங்கை, பிச்சைக்காரர்களின் வாழ்க்கை, பார்வையற்றோரின் குசும்புகள், பேசும் வார்த்தைகள் என்று அவர்களின் உலகினுள் நம்மை எட்டிப் பார்க்க வைக்கிறார்.
யதார்த்தமான காட்சியமைப்புகளும், நாடகத்தன்மையற்ற நடிப்பும், பளிச்சென்ற வசனங்களும், எளிமையான காதலும் படத்தைவிட்டு ரசிகர்கள் விலகாமல் பார்த்துக் கொள்கின்றன. அட்டகத்தி தினேஷூம், புதுமுக நாயகியான கேரளாவைச் சேர்ந்த மாளவிகாவும் நடிப்பில் பிரமாதப் படுத்திவிடுகின்றனர். தினேஷின் அந்த முழியும், வசனங்களைப் பேசும்போது பார்வையற்றவர்கள் போலவே பேசுபவரை நோக்கிப் பேசாமல் காதைச் சாய்த்தபடி பேசுவது என்று சின்ன விஷயங்களிலிருந்து விரல் நுனியில் உணர்வுகளைப் பரிமாறுவது வரை அருமையாகச் செய்திருக்கிறார்கள். இளையராஜா வெறியர், நாடகக் குழு உறுப்பினர்கள், தினேஷின் நண்பன், கொடியின் நண்பிகள், அண்ணன், உதவி செய்பவர்கள் என்று எல்லோரும் சரியாகவே நடித்திருக்கிறார்கள். இயக்குனருக்கும் இவர்களை நடிக்க வைத்ததில் பெரும்பங்குண்டு.
படம் யதார்த்த படங்களின் சாயலைக் கொண்டிருப்பது படத்தின் கதைக் களத்திற்கு அவசியமானதென்பதால் யதார்த்த ஒளியமைப்பு கொண்ட ஒளிப்பதிவு படத்திற்கு பலமாய் நிற்கிறது. ஒளிப்பதிவு ஷர்மா. இயக்குனரோடு இணைந்து அவருடைய உணர்வுகளை சரியாக உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார். அடுத்த பலம் சந்தோஷ் நாராயணின் இசை. பாடல்களும் அவற்றை படமாக்கிய விதமும் தமிழ்-கொடியின் காதலை ரசிகர்கள் மனத்தில் அச்சேற்ற உதவுகின்றன. பிண்ணணி இசையில் இசைஞானி ராஜாவுக்கும் சேர்த்து டைட்டில் கார்டு போடலாம் என்கிற அளவுக்கு படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் வியாபிக்கின்றன. தமிழ் இளையராஜாவின் குரலில் பாடுபவர் என்று வைத்திருப்பதும் பார்வையற்றோருக்கும் - இசைக்கும் - இளையராஜாவுக்குமிடையேயான உறவை பதியவைக்கும் நோக்கத்தில் கையாளப்பட்ட ஒரு உத்தியே. இந்த உத்தி படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.
படம் நன்றாக இருக்கிறது என்பதைத் தாண்டி ஒரு க்ளாசிக்காக மாறுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்பதை நாம் கூறித்தான் ஆகவேண்டும். பிற்பாதியில் சொல்லப்பட்ட கதை வலிந்து சொல்லப்பட்ட புனைவாக, வலுவில்லாததாகத் தென்படுகிறதேயன்றி அழுத்தமானதாக இல்லை(விக்ரம் நடித்த காசியில் கதையின் முடிவில் அப்படியொரு அழுத்தம் இருக்கும்). முற்பாதியில் கதையில் இருந்த தெளிவும் முதிர்ச்சியும் பிற்பாதியில் இல்லை. பார்வையற்றவர்களின் உலகின் காதல் உணர்வுகளுக்குள் தானும் பயணித்த இயக்குனர் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குள் ஊடுருவிப் பயணிக்காமல் போனதால் இது ஏற்பட்டிருக்கலாம். அது போல க்ளைமாக்ஸ், ஆன்ட்டி க்ளைமாக்ஸ் என்று திரும்பித் திரும்பி எங்கோ அலைய வேண்டிய தேவை சுவையானதொரு திரைக்கதை அமைந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. படம் முடிவு தெரிந்துவிட்ட பின் காதலர்கள் படும் துன்பத்தை மூன்றாம் பிறை ஸ்டைலில் சொல்ல முனைந்ததும் படத்துக்கு தொய்வையே தருகின்றன. படம் முடியும்போது அப்பாடா நல்லவேளை சொதப்பிவிடவில்லை என்று நாம் ஆறுதலடைகிறோம். ஆனாலும் ராஜூமுருகன் நி்ச்சயம் அடுத்த படத்தில் நம்மை நெகிழ்த்திவிடுவார் என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறார்.
மொத்தத்தில் இந்தக் கண்ணில்லாத குயில்களின் காதல் ராகம் எப்போதும் நெஞ்சுக்குள்ளேயே நிற்கும் தெய்வீக ராகமாக இல்லாமல், அமைதியான ஒரு காலை வேளையில் எழுந்தவுடன் கேட்கும் இனிமையான குயில்களின் ராகமாக ஆனதோடு மட்டுமே நின்றுவிட்டது. அதனாலென்ன ? குயில்களின் ராகமும் இனிமையானதுதானே !

பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழம்

தமிழினத்திற்கு விரோதியாக தமிழனையே நிறுத்துவதுதான் 60 ஆண்டுகளாக சிங்களர்களின் ராஜதந்திரமாக இருந்து வருகிறது. அதில் இன்னும் ஒருபடி மேலே போய் ஷோபாசக்தி, லீனா மணிமேகலை, சந்தோஷ் சிவன் என்று தமிழ்நாட்டு சினிமாத் துறையினரையும் உசுப்பேற்றியுளளார்கள். சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட், தற்போது வெளிவந்த இனம், லீனாமணிமேகலை - ஷோபா சக்தி இணைந்து எடுத்த செங்கடல் போன்ற படங்கள் இதற்குச் சான்று.

ஈழத்திலும் அப்படி சிங்களவர்களை அடிதாங்கி நிற்கும் தமிழர்கள் பலரைப் பார்க்கலாம். கொழும்பு, மலையகம், தெற்குப் பகுதி போன்ற சிங்களர்கள் பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இந்த மனப்போக்கை கொண்டிருப்பார்கள். இப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அந்தப் போக்கு உருவாகி வருகிறது. சோத்துக்கும், இடத்துக்கும் சிங்களன் தான் கருணைகாட்ட வேண்டும் என்கிற நிலை வரும்போது இந்தக் கேவலங்கள் நிகழுவதை என்னவென்று சொல்ல?உதாரணமாக சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழப் பிரதிநிதிகள் ராஜபக்சேவின் கையால் பதவிப் பிரமாணம் ஏற்றதில் உச்சிகுளிர்ந்து நின்றதைச் சொல்லலாம்.

முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இவர் தமிழன் தான். ஆனால் தமிழர்கள் யாராவது ஆட்டோகிராப் கேட்டால் கூட அலட்சியமாக இருப்பாராம். தன் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட தமிழர்கள் பட்ட துயரத்துக்காக ஒரு வார்த்தை உதிர்த்தில்லை. ஜாலியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்துக்கொண்டே இருந்தார். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது! வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது.. அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்தித்தார்.

அப்போது தமிழர் நிலை பற்றி முரளிதரன் "என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன். மக்களுக்கிடையிலான உணர்வுகளை நேர்ப்படுத்தும் பாலமாக கிரிக்கெட் இருக்கிறது. ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு நன்றி. இவையெல்லாம் நடக்க பெரும் முயற்சிகள் எடுத்தவர்கள் ராணுவத்தினர்தான். இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வடக்கில் ஒரு மில்லியன் மக்கள்தான். ஆனால் இப்போது மற்றவர்களை விட அவர்கள் மட்டும்தான் கூடுதல் கவனம் பெற்றுவருகின்றனர்!" என்று மிகுந்த அப்பாவி போல் பேசியிருக்கிறார்.

தனி ஈழம் குறித்தும் அதன் விடுதலை குறித்தும் பாஜக கட்சியின் போடும் இரட்டை வேடம் மிக வெளிப்படையானது. தமிழ்நாட்டில் தெற்கே போகப் போக இவர்களுக்கு ஈழ ஜூரம் அடிக்கும். வடக்கே போகப் போக 'யாரது ஈழத்தமிழர்கள்?' என்பார்கள். அக்கட்சியின் சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா சமீபத்தில் பேட்டியொன்றில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவேற்றதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். இனவெறி மிக்க ராஜபக்சே மத்தியப் பிரதேசத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு சென்ற ஆண்டு வந்தபோது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை வழங்கியவர் பாஜகவின் முதலமைச்சர். அப்போது அதை எதிர்த்து மத்தியப் பிரதேசம் வரை போய் முழங்கிய வைகோ அண்ணன் தான் இப்போது அதே பாஜக கூட்டணியில் அவர்களுக்கு ஆதரவாக முழங்குகிறார்.

உங்கள் கூட்டணியிலுள்ள வைகோவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம் பற்றி இருக்கிறதே அது பற்றி சொல்லுங்கள் என்று எச்.ராஜாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது.."பா.ஜ.க வைப் பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை. சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்."

கலைஞரோ முள்ளிவாயக்கால் படுகொலையின் போது இங்கிருந்து உண்ணாவிரத நாடகமாடி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டார். ஜெயலலிதாவோ தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் மறைமுக எண்ணத்தில் பாஜகவை எதிர்த்தே பேசுவதில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவின் வீர உரைகள் என்னவானதென்று நமக்குத் தெரியும். கம்யூனிஸ்ட்டுகளோ தீவிரவாதம் என்ற ஒரு சொல்லில் சிங்களர்களின் அனைத்து அரசு பயங்கரவாதங்களையும், இனப்படுகொலையையும், மறைக்கும் அறிவு ஜீவிகள்!!. அவர்களுக்கு அது அமெரிக்கா சொல்வதுபோல் ஒரு போர்க்குற்றம் மட்டுமே. மொத்தத்தில் தேர்தலில் தமிழர்கள் ஈழத்தை ஆதரிப்போருக்கு என்று வைத்துப் பார்த்தால் நிற்கும் எல்லோரும் அயோக்கியர்களே என்பது தெளிவாகும்.

முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற தமிழர்கள் இருக்கிறவரை தமிழினம் கேவலமாய்ச் சாகும் நிலை மாறப்போவதில்லை. இந்தியாவை மாற்றி மாற்றி ஆளும், தமிழர்களை தன்னுடைய நாட்டு இனமாகக் கருதாத காங்கிரஸூம், பாஜகவும் தமிழர்களை ஈழத்தில் அழிக்க வகையாக துணைபோகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்தான் தமிழர் நிலைக்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

Tuesday, February 25, 2014

ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது..

 
தமிழில் குறும்படங்களினால் மிளிர்ந்த புது இயக்குனர்கள் சினிமாவிலும் நுழைந்து சிக்ஸர் அடித்திருப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னொரு படம் இது. பண்ணையாரும் பத்மினியும் என்கிற பெயரில் வெளிவந்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்ற குறும்படமே அதே பெயரில் படமாக அழகாக விரிந்திருக்கிறது. படம் வசூலில் சிக்ஸர் அடித்ததா ? தெரியவில்லை. ஆனால் நுட்பமான உணர்வுகளைத் தொடுவதில் ஒரு ஹாட்ரிக் சிக்ஸர் அடித்திருக்கிறது இந்த ப.ம்.ப.ம்.

கார் என்பது ஆடம்பரத்துக்கான ஒரு அடையாளம். அதுபோக போக்குவரத்து தேவையை தீர்க்கவும் பயன்படும் வாகனம். அந்தக்கால பியட் பத்மினி காரொன்று ஒரு கிராமத்தில் ஈரமனதுள்ள பண்ணையார் ஒருவரின் வீட்டில் வந்து சேரும்போது அதன் ஆடம்பர அடையாளத்தைத் தாண்டி அந்தக் காரின் மீது கிராம மக்கள் முதல் பண்ணையாரின் வீட்டு மனிதர்கள் வரை கொள்ளும் ஈடுபாடு தான் படத்தின் கதையின் அடிப்படை. ஜெயப் பிரகாஷ் தான் கிராமத்துப் பண்ணையார். அவர்தான் கிராமத்துக்கு வந்த முதல் ரேடியோ, முதல் டெலிபோன், முதல் டி.வி., முதல் டாய்லெட் என்று எல்லா அறிவியல் கண்டுபிடிப்புக்களையும் அவர்களுக்கு அறிமுகம் செய்பவர். அத்தோடு அவற்றை கிராம மக்கள் தங்களிஷ்டம் போல உபயோகிக்கவும் அனுமதிக்கும் பரந்த மனதுள்ளவர்.

அவரிடம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரொருவர் ஒரு பியட் காரை கொஞ்சநாள் இருக்கட்டும் என்று விட்டுச் செல்கிறார். திடீரென்று கிராமத்தில் ஒரு பையனை பாம்பு கடித்துவிட அதே கிராமத்தில் டிராக்டர் ஓட்டும் முருகேசன் (விஜய்சேதுபதி) டிரைவராக மாறி காரில் பையனை ஓட்டிச் செல்கிறார். அதன்பின் கார் அந்தப் பண்ணையார் மற்றும் ஊர் மக்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாததாக எப்படி ஆனது என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குனர் ஒரு மெல்லிய சிறுகதையை சொல்வதுபோல பல சின்னச் சின்ன விஷயங்களை நகைச்சுவையோடும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியபடியே செல்கிறார். இழவு வீட்டில் விஜய்சேதுபதிக்கு வரும் காதல், பண்ணையாருக்கும் அவர் மனைவிக்குமிடையே முதிர்வயதிலும் நிற்கும் காதல், பண்ணையாரின் மகளின் சுரண்டல், பண்ணையாருக்கும் மனைவிக்குமிடையே நடக்கும் இரவு உரையாடல், காரைத் தள்ளிவிட விஜய்சேதுபதி செய்யும் ட்ரிக், காரின் முன்சீட்டில் ஏறிவிட ஏங்கும் சிறுவன் என்று படம் நெடுக ரசிக்கும் காட்சிகள் ஏராளம், காரானது பண்ணையார், அவர் மனைவி மற்றும் விஜய் சேதுபதியின் மனங்களில் மெது மெதுவாக நிறைவதை அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

பண்ணையாரின் பாத்திரப்படைப்பு, இப்படி ஊர்மக்களுடன் ஒன்றி வாழம் ஒரு பண்ணையாரை நாம் பார்க்கமுடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. பண்ணையாராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜெயப் பிரகாஷ், அவர் மனைவியாக வரும் துளசி, விஜய் சேதுபதி, அவர் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் (பால சரவணன்)'பீடை'ஆகியோர் நடிப்பில் நம்மை நெகிழ்த்திவிடுகிறார்கள், பண்ணையாரின் மகளிடம் காரைக் கேட்டுவிட்டு அவர் மறுத்து அவமானப்படுத்த கோபம் கொப்பளிக்க திரும்பிச் செல்லும் நடையில் சேதுபதியின் முகம் தெரியாவிட்டாலும் அந்த அவமானத்தையும் கோபத்தையும் உடலசைவுகளிலும், நடையிலும் அழகாக வெளிப்படுத்துகிறார் மனிதர்.

படத்தின் ஒளிப்பதிவு கோகுல் பினாய். ஆர்ப்பாட்டமில்லாத அலுங்காத படத்தின் கதைக்கேற்ற ஒளிப்பதிவு. இசை ஜஸ்டின் பிரபாகர் என்கிற மதுரையைச் சேர்ந்த புதுமுக இசையமைப்பாளர். உனக்காகப் பிறந்தேனே, காதல் வந்தாச்சோ, பேசுறேன் பேசுறேன் என்ற மூன்று பாடல்கள் இதம். பிண்ணணி இசையிலும் அசத்தியிருக்கிறார். படத்தின் பிற்பாதியில் சில இடங்களில் பிண்ணணி இசை கொஞ்சம் டிராமாவாக நீண்டாலும் முதல்படம் என்கிற வகையில் பிண்ணணி இசையில் ஆச்சரியப்படுத்துகிறார். ரவுண்ட் வருவார் என நம்பலாம்.

ஒருவருக்கு சாதாரணமாகத் தோற்றமளிக்கும் அற்ப விஷயங்கள் சமயங்களில் வேறு ஒருவருக்கு மிக முக்கியமான விஷயங்களாக மாறிவிடுகின்றன. ஒரு காரின் மீது ஒரு குடும்பத்து நபர்களுக்கு ஏற்படும் வினோதமான பாசத்தையும், அதில் ஊடாடும் மனித மனங்களின் மெல்லிய உணர்வுகளையும் அழகியலோடும் கலையுணர்வோடும் திரையில் வெளிக்கொணர்ந்திருக்கும் இயக்குனர் அருண் குமார் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். தமிழில் இதுபோன்ற மெல்லிய உணர்வுகளை பதியவைத்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் மலையாளப்படம் போல நல்ல கதையம்சத்துடனும் மலையாளப்படங்களில் இல்லாத நேர்த்தியுடனும் நிற்கிறது ப.ம்.ப.ம்

ப.ம்.ப.ம் பத்து நிமிட குறும்படமாக இருந்தபோது அதில் இருந்த செறிவும் விறுவிறுப்பும் அதே கதை கொஞ்சம் நீட்டப்பட்டு இரண்டுமணி நேரம் சொல்லும்போது இல்லாமல் போனது ஆச்சர்யமல்ல. விசித்திரம் என்ற குறும்படம் வில்லா எனும் சினிமாவாக விரிந்தபோதுகூட இதே பிரச்சனை ஏற்பட்டது. அதுபோக படத்தின் தலைப்பு படத்தின் முக்கிய எதிரியாக மாறியிருக்கிறது. ஏதோ மலையாள கவர்ச்சிப் படம்போல ஒரு ஈர்க்கும் தலைப்பாக வைக்கப்பட்டு அதற்கும் படத்துக்குமுள்ள தொடர்புகூட காட்டப்படவில்லை. படத்தில் எநதவொரு இடத்திலும் பியட் காரை பத்மினி கார் என்றுகூட யாரும் சொல்லவில்லை. பண்ணையார் காரைப் பார்த்ததும், கண்டதும் காதல் போல அதன்மேல் இனம்புரியாத ஈடுபாடு கொள்கிறார். ஆனால் அது தொடர்ந்து வளர்வதற்கான ஒரு வலுவான காரணம் படத்தில் காட்டப்படவில்லை. அது தெளிவாக காட்டப்பட்டிருந்தால் அதைத் தொடர்ந்து பண்ணையாரின் மனைவியின் ஈடுபாட்டையும், விஜய் சேதுபதியின் ஈடுபாட்டையும் ரசிகர்கள் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கும். அதேபோல படத்தின் மொத்தத்தையும் விவரிப்பதாக வரும் இளைஞனின் ஆரம்ப வர்ணணைகளில் அவன் கார் வாங்கும்போது காரினால் அவனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட வெற்றிடம் லேசாக குறிப்பிடப்படாததால் படம் முடிவடையும்போது வரும் காட்சிகள் பலமாக பதிய மறுக்கின்றன. ஆனாலும் படம் இவற்றால் சோடை போகவில்லை.

ப.ம்.ப.ம் வசூலைக் குவிக்கிறதோ இல்லையோ தமிழில் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். கவிதைபோன்ற இந்தப் படத்திற்கு வேறு என்ன தலைப்பு இருந்தால் பொருத்தமாய் அழகாய் இருந்திருக்கும் என்று யோசித்தபோது எனக்குத் தோன்றிய பெயர் - 'ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது'

Friday, January 31, 2014

முத்துக்குமாரின் முடிவு..

கடந்த 2009 அன்று முத்துக்குமார் என்கிற இளைஞன் ஈழத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பெயரில் நடந்த இன அழிப்பு படுகொலைகளை, தமிழர்கள், குழந்தைகள், பெண்கள் என பாகுபாடின்றி கொல்லப்படுவதை காணச் சகிக்காமல், இந்த சிங்கள, இந்திய, தமிழ் அரசியல்வாதிகளின் போலி வாதங்களை துகிலுரித்து மக்களே விழித்தெழுங்கள் என்று தீயில் தானே கருகிக்கொண்டு செத்துப் போனான்.
 
அன்று பதற்றமும் உள்ளுக்குள் துடிக்கும் கோபமுமாக அவனை கருகிய உடலாக கொளத்தூரில் பார்த்தபோது இந்த உலகின் மனிதமாபிமானமற்ற கோரமுகத்தின் நிறம் அவன் உடலெங்கும் வியாபித்திருந்தது.

அன்று அங்கிருந்த கோபாவேசமிகுந்த இளைஞர்கள் பலரையும் அப்போது தனது 'வீரமான பாசத்தால்' கட்டிப்போட்ட 'பச்சை'த் தமிழன் திருமாவளவன் பிறகு அந்த ஆண்டே ராஜபக்சேவிடம் இளித்து பேசிவிட்டு வந்து தானும் ஒரு பச்சைத் துரோகி என நிரூபித்ததையும், அவனது இறுதி ஊர்வலத்தில் மாயானத்தில் பேசிய புரட்சிப் புயல் வை.கோவின் புயல் குஜராத்துக்குப் போய் மோடியின் தாடிக்குக் கீழே தென்றலாய் வீசிக் கொண்டிருப்பதையும், அப்போது பாசமலர்ப் படம் காட்டி ஐயகோ கடிதம் எழுதி 'மழைவிட்டும் தூவானம் விடவில்லை' டயலாக் பேசிய கலைஞர் இப்போது குடும்ப கட்சி சண்டையில் மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பதையும், அன்று இளைஞர்களை கூவியழைத்த மருத்துவர் ஐயாவோ இன்று சாதிச் சண்டைகளை தூண்டி தன்னை மீண்டும் ஐயாவாக கொண்டுவர பிரயத்தனம் செய்துகொண்டிருப்பதையும் பார்க்கும்போது அவர்களின் 'புலி வேஷம்' கலைந்து கூத்துக்கு வேஷம் போடுபவர்கள் தான் அவர்களும் என்பது இப்போது புரிகிறது. அன்று எரிமலையாய்ச் சீறிய இந்தத் தலைவர்கள் இன்றுவரை முத்துக்குமாருக்கு ஒரு நினைவிடம் கூட அமைக்கவிடாமல் அவன் தந்த எழுச்சியை அமுக்கிவிட்டு கொளத்தூரில் அவன் வீட்டுக்குச் சென்று கல்லறைக்கு பால் வார்த்துவிட்டு நைசாக வந்துவிட்டார்கள்.
 
ஆனால் அன்று குமுறிய இளைஞர்கள் யாரும் இவை எதையும் மறந்துவிடவில்லை. அவர்கள் ஒரு நாள் எழுவார்கள். அவனையும் அவனைப் பின்பற்றி அதுபோல உயிர்துறந்த செங்கொடி வரையிலான 14 தமிழர்களையும் இன்று நாம் நினைவு கூர்வோம்.

கீழேயிருப்பது சாஸ்திரி பவன் வாசலில் அன்று தன் உயிரை எரித்துக் கொள்ளும் முன் முத்துக்குமார் எழுதி வைத்து வீசி எறிந்த அவனது மரண வாக்குமூலக் கடிதம். இது பரிட்சையில் பெயிலாகியோ, வேலை கிடைக்காமலோ, காதல் கை கூடாமலோ செய்த சாதாராண தற்கொலையல்ல. அதிகாரம் கையில் இல்லாத ஒரு சாமானிய மனிதன் வேதனையின் விளிம்பில் அதிகாரம் நிரம்பிய இந்திய, சிங்கள வர்க்கத்தின் நயவஞ்சக குணத்தை காணுங்கள் மக்களே என்று தன்னை எரித்து வெளிச்சம் போட்டு காட்டிய விளக்கு. படியுங்கள் இன்னொருமுறை. 

"விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம்.
வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை.
என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிடமுடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.
இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?
ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை,கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா?
பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால்யார் நம் பக்கம் இருக்கிறார்கள்? கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!
இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும்,தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்துமருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன?
ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார்போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம்எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.
இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்தியதலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்புகளம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம்போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில்,இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது.
சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளைஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்குமாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!
போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,
ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனிதஉரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள்,ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.இதையெல்லாம் மக்களேசெய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள்.
உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தைசட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். நாங்கள் தமிழ் மாணவர்கள்,தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம்.
எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.
எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிமாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்?
எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்?
எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம்செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான்நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைதுசெய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடியமாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது.
அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும்எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத்தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்புகொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ,அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழவைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம்,உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே,பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான்.
இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில்,சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவுஉண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா...
இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்ததருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசுஅதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும்விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னததலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்.இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம். அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.

1965 
இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில்ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால்,இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின்வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே,தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.
இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும்,ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மௌனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள்.

'
அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை' என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில்,புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள்அல்லர் (they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை,இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா,பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத்தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.
அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது,விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.ராஜீவ் காந்தியைக்கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.
ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர,கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா,தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருசூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ,மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.
இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமேபோராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும்.
கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியதுமட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையேஉருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர,இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி!
இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே,அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலைசெய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மௌனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா?
அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்கமுடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்றநம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்குஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ,இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. 
இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. 
ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. 
இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. 
புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு,அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. 
புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. 
ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. 
பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல,பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. 
அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. 
புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல்,எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. 
சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. 
பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. 
தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. 
தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. 
சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
29-01-2009."