Saturday, July 1, 2017

குடிப்பழக்கம் போக்கும் இயற்கை உணவு

குடிப்பழக்கம் உள்ளவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அவர்களுக்கு குடிக்கும் எண்ணம் அதிகமாகிக் கொண்டே செல்லும். அவர்களின் கல்லீரல் ரத்தத்தில் சேரும் ஆல்கஹாலின் அளவை சுத்தப்படுத்தியபடியே இருப்பதால் பழுதாகி இருக்கும்.

அப்பழக்கம் உள்ளவர்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சாற்றை தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்து வருவதன் மூலம் படிப்படியாக அதன் அளவைக் குறைத்துப் பின் முழுவதுமாக நிறுத்தச் செய்துவிடலாம்.

பாகற்  பழச்சாறு   2 டீஸ்பூன்
பாகற் கொடி இலைச்சாறு 2 டீஸ்பூன்
நெல்லிப்பொடி      2 டீஸ்பூன்
நன்னாரிப் பொடி    2 டீஸ்பூன்
பசுமோர்            50 மிலி

பாகற்பழம் என்பது பாகற்காய் பழமாகக் கனிந்ததை அரைத்து எடுத்த சாறு. பாகற்கொடியின் இலையை அரைத்து எடுத்த சாறும் வேண்டும். நெல்லிப் பொடியும் நன்னாரிப் பொடியும் இதனுடன் அரைத்து எடுத்து அவற்றை பசுமோரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்து வரவேண்டும்.

குடிப்பழக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து குணமாக ஆறுமாதங்களோ அல்லது ஒரு வருடங்களோ ஆகலாம்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.