Saturday, February 23, 2013

ஹைதராபாத்தில் இரு இடங்களில் குண்டுவெடிப்பு - 11 பேர் பலி. ஹெலிகாப்டர் காணாமல் போனது.

நேற்று முன்தினம் மாலை சுமார் 7 மணியளவில் ஹைதராபாத் தில்ஷூக்நகரில் மக்கள் நெருக்கம் மிகுந்த இரு இடங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து இரு குண்டுகள் வெடித்ததில் 11 பேர் இறந்து போனார்கள். 50பேர் காயமைடந்துள்ளார்கள்.

ஆந்திராவில் குண்டுவெடித்ததை தொடர்ந்து நாடெங்கிலும் தீவிரவாத பதட்டம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தேசிய பாதுகாப்பு படையொன்றை ஹைதராபாத்துக்கு அனுப்பியுள்ளார். இது ஹைதராபாத்தில் நடக்கும் மூன்றாவது வெடிகுண்டுத் தாக்குதலாகும்.

அப்சல் குருவை பிப்ரவரி 9 ல் தூக்கிலிட்டதைத் தொடர்ந்து தீவிரவாதத் தாக்குதல்கள் வரும் என்று அரசு எதிர்பார்த்தேயிருந்ததாம். தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கைகள்  உளவுத்துறையிடம் இருந்து முன்கூட்டியே வேறு வந்துள்ளனவாம். ஆனாலும் வழக்கம் போல் எங்கே எப்படி எத்தனை மணிக்கு தீவிரவாதிகள் தாக்குவார்கள் என்று சொல்லாததால் மெத்தனமாக அரசு இருந்துவிட்டதாம். (குண்டு வெடித்ததன் மூலம் ஏற்கனவே அப்சல் குருவைத் தூக்கில் போட்டது சரிதான் என்று இந்திய கூட்டு மனசாட்சி இன்னும் உறுதியாக நம்பிக்கொள்ளலாம்).

குண்டு வெடிப்பு பற்றி கேள்விப்பட்டதும் பீதியடைந்த நகரத்து மக்கள் எல்லாம் பயந்தடித்து வீட்டிற்கு ஓட ஆரம்பித்துவிட்டார்களாம். ஆபிஸ்கள் எல்லாம் லீவ் விடப்பட்டு எல்லோரும் வீடு நோக்கி திரும்ப ஒரே ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டதாம். யாரும் வெளியே வரவே பயப்படுகிறார்களாம். சரி மக்கள் பயந்தாகிவிட்டதே ஊடகப் புலிகள் என்ன செய்கின்றார்கள் என்று பார்த்தால் எக்ஸ்பர்ட்டுகள் என்று நான்கு பேர் உட்கார்ந்து கொண்டு அரசு தீவிரவாதத்தை ஏன் சரியாக ஒடுக்கவில்லை ? கண்காணிப்பு பத்தவில்லையா ? என்று அக்குவேறு ஆணிவேறாக அலசி மாய்கிறார்கள்.

அரிசி விலை ஏறுவதையும், பெட்ரோல் டீசல் விலை மாதம் தோறும் உயர்வதையும், அதைச் சாக்காக வைத்து வீட்டு வாடகையிலிருந்து ப்ளாட்பார கடை வரை எல்லோரும் பொருட்களின் விலையேற்றுவதையும், முக்கியமாக ராணுவத்திற்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என்று வெளிவந்து சோனியா அம்மாவின் சொந்த ஊரான இத்தாலியிருந்து ஒரு புரோக்கர் வந்து ராணுவ தளபதியிடம் பேசினார் என்று காரசாரமாக விவாதம் ஊடகங்களில் நாறிய நேரத்தில் இப்படி மக்களின் எல்லா பிரச்சனைகளையும் அவர்கள் மனத்திலிருந்து மறக்கடிப்பதற்காகவே குண்டுகள் வெடித்தது போல் வெடித்திருக்கின்றன. நேற்றிலிருந்து ஊடகங்கள் முதல் மக்கள் வரை யாரும் ஹெலிகாப்டர் ஊழல் பற்றியோ அதற்கு முந்தைய ஊழல்கள் பற்றியோ  யோசிக்காமியோபர்கெட்டோமியோ வியாதி வந்து குண்டு பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சரி குண்டு வெடிப்புக்கள் பற்றி பார்ப்போம். குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் காரணம். இன்னின்ன காரணத்துக்காக குண்டு வைத்தோம் என்று எந்தத் தீவிர வாத அமைப்பும் இது வரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையாம். ஹெலிகாப்டர் ஊழலை மறைக்க நாங்களே தான் குண்டு வைத்தோம் என்று அரசுத் தரப்பிலிருந்தும் யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையாம். எனவே அரசு இது சம்பந்தமாக குண்டு சைக்கிள்களில் வைக்கப்பட்டது, மற்றும் பொது இடமான வெங்கடாத்ரி தியேட்டர் அருகே வைக்கப்பட்டது (தியேட்டரில் விஸ்வரூபம் ஓடிச்சாங்க..?) போன்ற விஷயங்களை 'நுட்பமாக' ஆராய்ந்ததில் இந்தியன் மஜாகிதீன் என்ற (இளிச்சவாய) தீவிரவாத அமைப்பின் கைவரிசையாக இருக்குமோ என்று சிபிஐ அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். இவுங்கள்ல கொஞ்சப் பேரு நம்ம அரசோட பிடியில பத்திரமா ஜெயில்ல கம்பியை ரொம்ப வருஷமா எண்ணிக்கிட்டே இருக்கிறாங்க இல்லியா அவனுங்கள்ல யாராவது ஜெயிலுக்குள்ளேயே இருந்துகிட்டு தியேட்டர்ல போய் குண்டு வெச்சிட்டு வந்தான்னு கதை, திரைக்கதை ரெடிபண்ணி அப்புறம் ஒண்ணு ரெண்டு போட்டோக்களை ரிலீஸ் பண்ணுவாங்க.

அப்சல் குரு முறைக்கிற மாதிரி இருக்கிற ஓரே படத்தை எல்லா ஊடகங்களும் போட்டு 'இவன கொன்னாத் தான் சரி' ன்ற ஃபீலிங்கை மக்களுக்கு உருவாக்குனாங்க இல்லியா அது மாதிரி ஒரு போட்டோ வரும். அதுல ஒரு கிப்ஸல் குரு கிடைப்பான்.
உடனே அவனைக் கொன்னே ஆகணும்னு அத்வானியிலிருந்து நம்ம ஊர் ராமகோபாலன் வரை ஒரே போராட்டம் போராடுவாங்க, பந்த் நடத்துவாங்க. சுப்ரீம் கோர்ட்ல கேஸ் எல்லாம் நடக்கும். நல்லா பொழுது போகும்.

இது வரைக்கும் குண்டு வெச்சது யாரு, எதுக்கு வெச்சாங்கன்னே கண்டு பிடிக்க முடியலையாம். சிபிஐ கண்ல விளக்கெண்ணெய் விட்டுட்டு இந்தக் கேஸை துப்பறியிறாங்களாம். அதனால் அடுத்த பலியாடு கிடைக்கிற வரை கொஞ்சம் பொறுமையா ஹெலிகாப்டர் ஊழல்ல சோனியாஜி, ராகுல்ஜிக்கெல்லாம் தொடர்பு இருக்குமோ இருக்காதோன்னு நீங்க கொஞ்ச காலம் யோசிக்காம இருப்பீங்கன்னா குண்டு வெச்ச ஆளு மேலும் குண்டு வைக்கமாட்டான்னு உறுதியா நம்பலாம். செத்துப் போனவங்களோட ஆவிகள் மட்டும் பார்லிமண்டையே சுத்தி சுத்தி வரும்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.