Thursday, December 6, 2012

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்க நடந்த நாடகம் வெற்றி


 
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்கிற கதையை கடந்த சில மாதங்களாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மாற்றி வஜனங்கள் பேசி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றனர்.

ஆளுங்கட்சியோ அன்னிய முதலீடு பல லட்சம் கோடி வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்று புளுகியது.

இந்தப் புளுகு பற்றி தெரிய ஒரு நடந்த கதைக்குப் போவோம்.

ஒரு சேம்பிளுக்குப் பார்த்தீங்கன்னா  நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ்நாடு 2023 என்ற பெயரில் முதல்வர் ஜெயலலிதா டி.வி.எஸ், ஆம்வே, முருகப்பா, செயின்ட் கோபெய்ன் அப்புறம் ஹிடாச்சி ஆகிய ஐந்து கார்ப்பரேட் கம்பெனிகளுடன் எம்.ஓ.யு(MOU) அதாவது மெமோரண்டம் ஆப் அண்டர்ஸ்டாண்டிங் கையெழுத்திட்டிருக்கிறார்.

அதாவது அவர்கள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் சுமார் 20,000 கோடிகள் முதலீடு செய்யப் போகிறார்களாம். அப்பாடா தமிழ்நாடு சொர்க்கபுரியா மாறப்போகுதப்பான்னு சந்தோஷப்படாதீங்க..

இந்தப் பெரிய பணத்தைப் போட்டு அவர்கள் ஆரம்பிக்கப் போகிற கம்பெனிகளில் 1.36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பாம். உடனே ஆஹான்னு சொல்வீங்களே. அதிலேயும் ஒரு ட்விஸ்ட்டு இருக்கு.

அதாவது 2500 பேருக்கு தான் நேரடியா பெர்மணன்ட் வேலையாம். மிச்சம் ஒரு லட்சத்தி 34 ஆயிரம் பேருக்கும் அப்ரண்டிஸ், ட்ரெய்னீ, டெம்பரவரி, காண்ட்ராக்ட், பிச்சைக்காரன் என்கிற பெயர்களில் மாசம் 3000, 5000 என்று அடிமாட்டு சம்பளம் பேசி வேலை வாங்கப்படும்.

அப்ரண்டிஸ், ட்ரெய்னியெல்லாம் இப்படியே பிச்சையெடுக்கிறமாதிரி சம்பளம் வாங்கினா ஏழேழு ஜென்மம் போனாலும் அம்பானியாக முடியாது (ஆனா அவுங்க மட்டும் எப்படிப்பா ஒரே ஜென்மத்துல கும்பானியானாங்க? உங்கள விட கிட்னி ஜாஸ்தியா வேலை செய்யுதா அவங்களுக்கு மட்டும்?)

சரி விடுங்க. இவுங்க குடுக்கிற வேலை வாய்ப்பின் லட்சணம் இது தான். 20000 கோடியை இறக்குனாத்தான் 2500 பேருக்கு நிரந்தரம்னு சொல்லிக்கிறமாதிரி வேலை. அதுவும் எவ்வளவு நாள் நிரந்தரம்ன்னு உறுதியா சொல்ல முடியாது.

இவுங்க இருபதாயிரம் கோடி இன்வெஸ்ட் பண்றாங்க இல்லியா. அதுல 30-40 சதவீதம் தொழிற்கூடம், கட்டிடம் கட்டவும், அப்புறம் 30-40 சதவீதம் மிஷின்களை இறக்குமதி பண்ணவும் போக, மிச்சமிருக்கிற கொஞ்சூண்டு பணம் தான் ஆப்பரேட்டிங் காஸ்ட்.

அதுல லாபம் கண்டிப்பா வந்தே ஆகணும். 10 வருஷத்துல 20ஆயிரம் கோடி இன்வெஸ்ட் பண்ணினா அந்தக் கம்பெனி தர்மத்துக்கா இன்வெஸ்ட் பண்ணும் ? இல்லை.
அதே பத்து வருஷத்துல அதிலருந்து கிடைக்கிற லாபம் 40ஆயிரம் கோடியா இருக்கணும். இல்லாட்டி என்ன கர்மத்துக்கு அந்த இன்வெஸ்ட்மண்ட்ன்றேன்.

நாப்பதாயிரம் கோடி லாபம் வரணும்னா அவனெல்லாம் டாஸ்மாக் தான் வச்சி நடத்தணும். இதிலே நம்ம முதல்வரம்மா கிட்ட எதுக்கு 'அண்டர்ஸ்டேண்டிங்' பண்றாங்க ?
எதுக்குன்னா, இடம் சல்லிசா கிடைக்கும், தண்ணீர் சல்லிசா கிடைக்கும், கரண்ட் சும்மா கிடைக்கும் 24 மணி நேரமும், ரோடு போட்டுத் தரும் கவர்மெண்ட் ப்ரீயா. இவ்வளவும் சல்லிசா கிடைக்க ஆளுங்கட்சிய ஒரு 'அண்டர்ஸ்டேண்டிங்' பண்ணா போதும்.

இது நம்ம ஊரு முருகப்பா குரூப்புக்கே இவ்வளவு சலுகைன்னா அன்னிய முதலீடுன்றது லட்சம் கோடிகளில் புரளும். லட்சம் கோடியை எண்ணிப் பார்க்கவே நமக்கு ஆயுசு முடிஞ்சு போகும்.
http://trinitymirror.net/coimbatore/wp-content/uploads/2012/11/04-11-2012.pdf

ஆயிரம் கோடிகளுக்கு அம்மாவைப் புடிச்சவங்க.. லட்சம் கோடிக்கு மன்னுமோகனைப் பிடிச்சிட்டாங்க..அவ்வளவு தான் சிம்பிள்.
வந்திருச்சி சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.

இதுக்கு பில்டப்புகள் பார்த்தா பலவிதம்...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தே ஆவணும்னு பிஜேபி, மம்தா பானர்ஜி ஒரே போராட்டம்..பில்டப். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தா அதை ஜெயிக்க தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லைன்றது எல்கேஜி பையனுக்குக் கூட தெரியும்.

இதுக்கு பதில் பில்டப் நம்ம கலைஞர், கசப்பாக இருந்தாலும் நாங்கள் அதை ஆதரிப்போம்ன்றார் கலைஞர். அவரு பேரனே நாளப் பின்ன அதுல ஒரு பெரிய ஷேர் ஹோல்டராக வாய்ப்பிருக்கு. அதை ஏன் அவரு விடணும்? ஈழத்தமிழனுக்கு நீலிக்கண்ணீர் வடிச்சப்பவே அவர் கூலிங்கிளாஸ் கண்ணாடிக்குப் பின்னாடி இருந்த முகமூடி கிழிஞ்சி போச்சி. இனி எதுக்கு முக்காடுன்னு நென்ச்சிட்டார் போல இருக்கு.

இதில் கம்யூனிஸ்ட்டுகள் பில்டப் கொஞ்சம் விசேஷமானது. அவர்கள் 'நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றுப் போகும்னு எல்.கே.ஜிப் பையனுக்குத் தெரியும்ன்றது எங்களுக்கும் தெரியும். அதனால அதை பார்லிமண்டில் விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு விடணும்'  அப்படின்னு வீர வசனம் பேசினாங்க.

கடைசில என்ன ஆச்சு நேத்திக்கு வீரதீரமா பார்லிமண்ட்ல ஷிப்ட் வச்சி ஆளாளுக்குப் பேசி இன்னிக்கு ஓட்டெடுப்புக்கு விட்டதில 254 ஆதரவாயும் 224 எதிராயும் விழுந்திடுச்சி. அன்னிய முதலீடு ஜெயிச்சுடுச்சு. ஆனா பாவம் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு யார் ஓட்டுப் போடுவாங்களோ அவங்களே தான் இந்த வாக்கெடுப்புக்கும் ஓட்டுப் போடுவாங்க.. அப்போ நம்பிக்கையில்லா தீர்மானமே தோத்துடும்னா இது மட்டும் எப்படியப்பா ஜெயிக்கும்னு ப்ளே ஸ்கூல் படிக்கிற பையனுக்கு தெரியற லாஜிக் இவங்களுக்கு மட்டும் புரியவேயில்லை.

ஜனநாயக முறைப்படி போராடி நாலு நாள் பார்லிமண்டை ஒத்தி வைச்சாச்சு. கடைசில ஜனநாயக முறைப்படி தான் அன்னிய முதலீடும் வெற்றி பெற்றிடுச்சு 20 ஓட்டு கூட அதிகமா வாங்கிடுச்சு. அதுக்காக ஜனநாயக முறைல, பார்லிமண்ட்ல சொன்னா சரிதான்னு போயிடுவாங்களா கம்யூனிஸ்ட்டுகள் ?

அடுத்த புளுகு 'சில்லறை அந்நிய முதலீடு வந்தா விவசாயிகளுக்கு லாபம்..ஏன்னா இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியா வால்மார்ட்டே வந்து கொள்முதல் பண்றதுனாலே '

இதுக்கு இன்னொரு கதைக்குப் போவோமா.. ஒரு ஊர்ல ஒரு நாட்டாமை(40 வருஷத்துக்கு முந்தின இந்திய கவுர்மெண்ட்டு) இருந்தாராம்.

அந்த ஊர்ச் சந்தைல மாடு விக்க வர்றவங்க(விவசாயி) மாட்டை சரியான விலைக்கு வித்துட்டுப் போகனும்றதுக்காக எல்லாரும் நாட்டாமையோட தரகர்கள் கிட்டே தான் விலை பேசனும்னு சொல்லி வியாபாரத்தை ஒழுங்கா வெச்சிகிட்டாராம்.

நடுவுல இருந்த நாலு ரவுடிப் பசங்கள் (ப்ரைவேட் கம்பெனிகள்) இதை உடைக்கிறதுக்கு அவுங்க நாலு தரகர்களை உள்ளே வுட்டு அவுங்க வேணும்னே விலையை கூட்டிக் குறைச்சிப் பேசி கடைசில மாடெல்லாம் இந்த ரவுடிப் பசங்களுக்கு கிடைக்கிற மாதிரி பண்ணிட்டாங்களாம்.

இதையெல்லாம் பாத்த பெரிய தாதா (வால்மார்ட்) இவனுங்கள் என்ன சல்லிப் பசங்க.. நானே நேரடியா புகுந்து எல்லாத்தையும் அள்றேன் பாருன்னுட்டு உள்ள புகுந்தானாம்.

இந்தச் சின்ன ரவுடிப் பசங்க, அவங்களோட தரகர்களை அடிச்சி விரட்டிட்டு ஹீரோ மாதிரி எபக்ட் குடுத்து நின்னானாம். உடனே மாட்டுச் சந்தை மக்களெல்லாம் இனிமே எங்க மாட்டையெல்லாம் நீங்க தான் நிரந்தரமா நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிட்டே இருக்கணும்ணு கேட்டுக்கிட்டாங்களாம்.

ஒரு மாசம், ரெண்டு மாசம் போயிட்டு பின்னாடி தாதா சொன்னானாம்.. எனக்கு இவ்வளவு மாடு தேவையில்லை. நானே நிறைய மாடு வெச்சிருக்கேன். நீங்கள்லாம் போய் ஆடு கொண்டு வாங்கன்னானாம்.

எல்லோரும் வளத்த மாட்ட அடிமாட்டு விலைக்கு அவன்கிட்டவே தள்ளிட்டு ஆடு வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்களாம். அப்புறம் வந்தா சீச்சி... எனக்கு ஆடு வேண்டாம் ஒட்டகம் தான் வேணும்னானாம்.

இப்படிப் போகுது கதை..  ரொம்ப சிம்பிளா கேக்கணும்னா வால்மார்ட் வந்ததால் அமெரிக்காவில் விவசாயிகள் என்கிற இனமே அழிந்து போகும் நிலையில் இருக்கிறது. அங்கே எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகள் தான் விவசாயம் பண்ணுகின்றன. விவசாயிங்க இல்லை.

ஒரு காலத்தில் 100 பேருக்கு ஆண்டு முழுதும் வேலை கொடுத்த 4 ஏக்கர் நிலம் இன்று 4 பேர் கூட பார்த்துக் கொள்ள தேவையில்லை. எல்லாம் மிஷின் பார்த்துக்கிடும் என்று இருக்கிறது அமெரிக்காவில்.

அப்புறம் எப்படி வேலை வாய்ப்பு பெருகும் ?

அடுத்த புளுகு வால்மார்ட் வந்தால் உணவுப் பொருட்கள் வீணாகாது. குளிர் பதன அறைகளில் பத்திரமாக சேமிக்கப்படும்.


40 வருடங்களுக்கு முன் உணவு தானியங்களை சேமிக்கும் குளிர் பதன கிடங்குகளை நாட்டில் நிறுவியது ஆளும் அரசு மட்டுமே. அன்றைக்கு கிடங்கை வாடகைக்கு பயன்படுத்தக் கூட வக்கின்றி இருந்தது தனியார் துறை.

இன்று அரசு பிச்சைக் காரனாய் நிற்கிறது. ரிலையன்ஸ் அம்பானி அரசை விட அதிகமாக குளிர்பதனக் கிடங்குகளை கைவசம் வைத்திருக்கிறார். அரசு கிடங்கில் தானியங்களை எலிகள் தின்கின்றன. அப்படி வீணாகப் போவதை எடுத்து மக்களுக்கு ரேஷன் கடைமூலம் குடுய்யா என்ற சுப்ரீம் கோர்ட்டைப் பார்த்து நம்ம மன்மோகன் சிங் சொல்கிறார் "உங்க வேலையப் பாருங்கப்பா.. எனக்கு வேற வேல இருக்கு".

இது யார் தவறு ? அரசு என்றால் மக்கு மோகன்களும், மௌன குரு நரசிம்மா ராவ்களும் ஆண்டதில் அரசு தனியாரிடம் கைகட்டி நிற்கும் நிலை வந்தது யாரால்?

மக்களே... உங்களால். உங்களால் தான்.
அரசுத் துறையில் இருக்கும் மக்கள் பொறுப்பற்று இருப்பதும், சாதாரண மக்கள் தனியார் தான் நல்லா வசதி செய்யுதே என்று உங்கள் சுயநலத்துக்கு தனியாரிடம் போய் தனியாரை இன்று அசுரர்களாக வளரவிட்டதும் தான்.

அதன் பலனை நீங்கள் நாளை அனுபவிப்பீர்கள்.. எஞ்சாய்..ஆல் தி பெஸ்ட்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.