Wednesday, August 10, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (101-200) - பாகம் 2

இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை (101-200) - பாகம் 2 

(1-100) பாகம் 1  ஐப் படிக்க ..  http://ambedhan.blogspot.com/2011/08/1-100-1.html 

(ஷரத்துகள் 101-200) - பாகம் 2 

101.
அச்சமயம், "பொதுமக்கள் காயமடைவதைத் தடுப்பதற்காக எம்மிடையே காயமேற்படுகிறது' என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

"இவ்விடயம் எமக்கு மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. இல்லாவிடின், சரமாரியாக குண்டுகளை வீசி எம்மால் அப்படியே முன்னேறிச் சென்றிருக்க முடியும்.' பெப்ரவாரி 25 ஆம் திகதியும் அதன் பின்னர் ஏப்பிரல் 27ஆம் திகதியும், இலங்கை இராணுவம் தொடர்ந்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூன்ய வலயங்கள் மீது கன ரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்தது. ஆனால் களத்தில் நடப்பது இதற்கு மாற்றமானதாகவே இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக பீரங்கிகளைப் பிரயோகிப்பது இலங்கை இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையின் அடிப்படை அணுகுமுறையாக இருந்தது.

வெற்றி நெருங்கியதும், இப்பழக்கம் கைவிடப்படவில்லை மாறாக எல்.ரி.ரி.ஈ யினை நகரவிடாது அது அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உள்ள பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையிலும் அது தொடர்ந்தது. தீவிர ஷெல்வீசசு காரணமாக அப்பிரதேசத்தில் இருந்து தப்பியோட பல பொதுமக்கள் முயற்சித்த போது, பொதுமக்கள் அங்கிருந்து செல்வதற்கு அவர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் இன்னுமொரு அரசாங்க நோக்கம் நிறைவேறுவதாக அமைந்தது.

தொடர்ந்து யுத்த சூன்ய வலயத்தை இலக்கு வைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் பீரங்கிக் குண்டுப் பிரிவுகள் தக்கவாறு அமைத்துக் கொள்ளப்படுவதை அரசாங்கத்தின் அறிவிப்புக்கள், செய்மதிப் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ஒப்பீட்டளவில் எல்.ரி.ரி.ஈ யினரிடம் குறைவான கன ரக ஆயுதங்களே எஞ்சியிருந்ததோடு, அவற்றைப் பாவிப்பதற்கான இடவசதியும் குறைவாகவே இருந்தது.

102.
சிறிய கடலோரப் பகுதியில் நெரிசல் அதிகமாகி அங்கு வாழக்கூடிய இடவசதியும் மிகக் குறைவாகி இருந்தது.

இடம்பெயர்ந்தோர் தம் கூடாரங்களை அமைத்திருந்த பெரும்பாலான பிரதேசம் நீர் கசியும் கடலோர மணல் தரையாக இருந்ததோடு அது குடியிருப்புக்கு ஏற்றதாகவும் இருக்கவில்லை, அத்தோடு, இடம்பெயர்ந்தோர் அங்கு தம் பாதுகாப்புக்காக தற்காலிக பதுங்கு குழிகளை அமைத்துக் கொள்வதும் கஷ்டமாகவே இருந்தது.

அக்கால கட்டத்தில் இடம்பெயர்ந்தோரின் அன்றாட வாழ்க்கை பதுங்கு குழிகளிலேயே கழிந்ததோடு, சிலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தம் இருப்பிடங்களுக்கு மேலே வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர். நன்னீர் அரிதாக இருந்ததோடு உணவுக்கும் தட்டுப்பாடு நிலவியதால் சிலர் பசியினால் மரணித்தனர். பருவ கால மழை ஆரம்பித்ததும் பல பதுங்கு குழிகளில் நீர் நிறைந்து மக்களின் வாழ்க்கை மேலும் மோசமடைந்தது.

7. புதுமாத்தளன் ஆஸ்பத்தி மீதான ஷெல்லடித் தாக்குதல்

103.
புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தி புதுமாத்தளனுக்கு இடம் பெயர்ந்தபோது, "வன்னியின் மீட்கப்படாத பிரதேசங்களில் இப்போது எந்தவொரு ஆஸ்பத்தியும் செயற்படவில்லை' என அரசு அறிவித்தது.

இருந்தபோதிலும், இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில், புதுமாத்தளை உள்ளிட்ட மூன்று தற்காலிக ஆஸ்பத்திரிகளும், வேலாயன்மடத்தில் சிறிய வைத்தியசாலையொன்றும் முள்ளிவாய்க்காலில் ஒரு ஆஸ்பததிரியும் இருந்தன. அவற்றின் அமைவிட எல்லைகள் அனைத்தும் அரசாங்கத்துக்குத் தெரிந்தே இருந்ததோடு, அவற்றின் மீது சின்னங்கள் இடப்பட்டு அவை தெளிவாகவே குறிக்கப்பட்டிருந்தன. அங்கு அரசாங்க வைத்தியர்களே தொடர்ந்தும் சேவையாற்றி வந்தனர். புதிதாகக் காயமடைந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் நிரம்பி இருந்தனர்.

அடிப்படை மருத்துவப் பொருட்களை வன்னிக்குள் அரசாங்கம் அனுமதிக்காததால், புதுமாத்தளன் ஆஸ்பத்திரியின் நிலைமை மிக மோசமாக இருந்ததோடு, அங்கு காயமடைந்தோரின் உறுப்புக்கள் கசாப்புக் கடைக் கத்திகளைக் கொண்டே மயக்க மருந்து இன்றி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

சுகாதாரத் துவாய்கள் மற்றும் பருத்தித் துணிகள் புண் கட்டுத் துணியாகப் பாவிக்கப்பட்டன. போத்தல்கள் மரங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டு பாரிய காயமடைந்தோர் மரங்களுக்குக் கீழே படுக்க வைக்கப்பட்டனர். அங்கிருந்த சில வைத்தியர்களின் கடுமையான உழைப்புக்கு மத்தியிலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையால் பல நோயாளிகள் மரணித்தனர். சடலங்கள் தினம் ஆஸ்பத்திரிக்கு முன்னால் குவித்து வைக்கப்பட்டன.

104.
2009 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் ஷெல் வெடிகள் விழுந்ததால் குறைந்த பட்சம் 16 நோயாளிகள் அங்கு கொல்லப்பட்டனர். சாலையில் அமைந்திருத்த இலங்கை இராணுவத்தின் தளங்களில் இருந்தே ஷெல் வெடிகள் வந்தன. ஆனால், பின்னர் ஏரிக்கு அப்புறம் இருந்த இலங்கை இராணுவ நிலைகளில் இருந்தும் (அங்கிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு ஆஸ்பத்திரி தெளிவாகப் பார்வைக்குத் தெரிந்த போதிலும்) ஷெல் வெடிகள் செலுத்தப்பட்டன.

சில காயமடைந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததோடு அவர்கள் தனியானதொரு பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பெப்ரவரியிலும் மார்ச்சிலும் புதுமாத்தளன் ஆஸ்பத்திரி பலமுறை ஷெல் தாக்குலுக்கு உள்ளாகியது. மார்ச்சு 27ஆம் திகதி அளவில் ஆர்பிஜிக்கள் ஆஸ்பத்திரி மீது செலுத்தப்பட்டபோது பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்கு விளைந்த சேதத்துக்குப் புறம்பாக, சத்திர சிகிச்சை கூடம், தற்காலிக வார்ட்டுக்கள் மற்றும் கூரையும் சேதமடைந்தன.

105.
தினம் பல உயிர்களைப் பலிகொண்டு பல குடும்பங்களை நிர்க்கதியாக்கும் ஷெல் வெடிகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று வந்த போதிலும், ஆளில்லா விமானம் மூலம் இனங் கண்டு கொள்ளக் கூடிய பொதுமக்கள் திரண்டிருந்த இடங்கள் மீது இலங்கை இராணுவம் ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டது. மார்ச் 25ஆம் திகதி அம்பலவன் பொக்கணை மீதான பல்குழல் ரொக்கட் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 140 பேர்கள் உயிரிழந்னர்.

2009 ஏப்பிரல் 8ஆம் திகதி, பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சகர் ஒழுங்கு செய்திருந்த பால் மா விநியோக வரிசையொன்றில் இருந்த அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அம்பலவன்பொக்கணையில் ஷெல் வெடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இறந்த சில பெண்கள் தமது குழந்தைகளுக்குப் பால் மாவைப் பெற்றுக் கொள்ளும் அட்டைகளைக் கைகளில் வைத்திருந்தனர்.

8. ஐ.சிஆர்சி கப்பல்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முட்டுக்கட்டைகள்

106.
2009 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் கரையோரப் பகுதியிலிருந்து காயமடைந்த பொதுமக்களை கப்பல் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வன்னியில் உள்ள பொதுமக்களின் கஷ்டங்களைக் குறைப்பதற்காக ஐ.சி.ஆர்.சி தொடர்ந்தும் முன்னணிப் பங்களிப்பை வழங்கியது.

இறுதி மாதங்களின் போது மொத்தம் 16 ஐசிஆர்சி கப்பல்கள் யுத்த வலயத்துக்கு வந்து சென்றன. புதுமாத்தளனில் இருந்து ஐ.சி.ஆர்.சி இன் சர்வதேச ஊழியர்கள் முதலாவது கப்பல் மூலம் அங்கிருந்து சென்ற போதிலும், ஒவ்வொரு தடவையும் கப்பல்கள் வந்தபோது, அவர்கள் மீண்டும் சில மணி நேரங்கள் கரையில் இருந்தனர்.

ஐ.நா. ஊழியர்களை அரசாங்கம் கப்பலில் இருக்க விடவில்லை.

107.
காயமடைந்த பொதுமக்களுக்கும் அவர்களைச் சார்ந்த சிலருக்கும் ஐ.சி.ஆர்.சி. கப்பல்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்து செல்ல அனுமதிச் சீட்டுக்களை எல்.ரி.ரி.ஈ வழங்கிய போதிலும், கரையில் இருந்து 1 கிலோ மீற்றருக்குள் கப்பல்களை வர விடாததால் காயமடைந்தோரை சிறு படகுகள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

காயமடைந்தோர் கரையில் வசையாக நிறுத்தப்பட்ட போது பல தடவை இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இலங்கை இராணுவத்தினால் செலுத்தப்பட்ட ஷெல் வெடிகள் சில சமயங்களில் கடலில் ஐ.சி.ஆர்.சி. கப்பல்களுக்கு அருகில் வந்து விழுந்தன. ஏப்பிரல் 22ஆம் திகதி அளவில் செல் வெடி காரணமாக மாலுமி கப்பலை ஆழமான இடத்துக்குச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்.

108.
உணவுப் பொருட்களை போக்குவரத்துச் செய்யும் ஒரே வழியாக ஐசிஆர்சிக் கப்பல்கள் இருந்த போதிலும், ஏற்றி வருவதற்கு அவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் போதியளவாக இருக்கவில்லை. யுத்த சூன்ய வலயத்தில் நிலைமை படுமோசமாக மாறிய நிலையில் கரைக்கு வந்த ஐசிஆர்சி ஊழியர் ஒருவரைச் சூழ்ந்து கொண்ட அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த மக்கள் தம்மை வன்னியில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

எல்.ரி.ரி.ஈ அக்கூட்டத்தை முரட்டுத்தனமாகக் கலைத்தது. இறுதி ஐ.சி.ஆர்.சி கப்பல் 2009 மே 9 ஆம் திகதி வன்னிக்கு வந்தது. 2009 மே 15 ஆம் திகதி மேலுமொரு கப்பல் வந்த போதிலும் யுத்தத்தின் தீவிரத் தன்மை காரணமாக திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. மொத்தம் 14,000 காயமடைந்தோரையும் அவர்கள் உறவுகளையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூன்ய வலயங்களில் இருந்து ஐ.சி.ஆர்.சி. அகற்றியதோடு சுமார் 2,350 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களையும் முள்ளிவாய்க்காலுக்கு எடுத்து வந்தது. எல்.ரி.ரி.ஈ. அதன் உறுப்பினர்களை யுத்த களத்திலிருந்து சிகிச்சைக்காகச் செல்ல அனுமதிக்காததால், பாதுகாப்பாக அகற்றப்பட்ட அனைவரும் பொது மக்களாகவே இருந்தனர்.

9.முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதல்

109.
2009 ஏப்பிரல் ஆரம்பத்தில், ஆனந்தபுரத்தில் நேர்ந்த தோல்விக்குப் பின், எஞ்சியிருந்த எல்...ஈ. யின் படைப்பிவுகள் அனைத்தும் போல கரையோரப் பகுதிக்குப் பின்வாங்கின.

சூன்ய வலயத்தினுள் அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல் உக்கிரமடைந்தது.

இறுதிக் கட்டம் வரை மோதல் முழுவதிலும் அது மோட்டார்களைச் சார்ந்திருந்த போதிலும், பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களை விடுவிப்பதற்காக "மனிதாபிமான நடவடிக்கை' ஒன்றை மேற்கொள்வதாக அக்கட்டத்தில் அரசாங்கம் கூறியபோதிலும், அது பல்குழல் குண்டு செலுத்திகள் மற்றும் விமானக் குண்டு வீச்சு போன்ற கன ரக ஆயுதங்களைத் தொடர்ந்து பிரயோகித்து வந்தது.

2009 ஏப்பிரல் 19 ஆம் திகதி, புதுமாத்தளன் மற்றும் அம்பலன்பொக்கணை ஆகியவற்றுக்கு இடையிலான பிரதேசம் தீவிர ஷெல்லடித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிவு, யுத்த சூன்ய வலயத்தினூடாக எல்.ரி.ரி.ஈ யின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முதற்தடவையாகக் கரையோரப் பகுதியை அண்மியது.

இதனால் யுத்த சூன்ய வலயம் இரு கூறாக்கப்பட்டு பொது மக்களிடையே பலத்த சேதம் ஏற்பட்டது. யுத்த சூன்ய வலயம் இவ்வாறாக கூறுபட்டதை அடுத்து, ஏற்கனவே தப்பியோடிய சுமார் 70,000 பேர்களுக்கு மேலதிகமாக மேலும் ஒரு 100,000 பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச் செல்ல முடிந்தது. குறைந்த பட்சம் மேலுமொரு 130,000 பொதுமக்கள் தென் பகுதியில் சிக்குண்டு இருந்தனர்.

(43)
110.
யுத்த சூன்ய வலயத்தின் வட பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர், யுத்த வலயத்தில் முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்தி மாத்திரமே எஞ்சியிருந்த ஒரேயொரு ஆஸ்பத்திரியாக இருந்தது. சீருடை அணிந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவரும் ஆஸ்பத்திரியில் இருக்கவில்லையென்பதோடு, ஒருவரும் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வரவில்லை. இப்போது நிலைமைகள் மிக மோசமாக இருந்தன. ஆஸ்பத்தியில் நான்கு வைத்தியர்கள் இருந்ததோடு அங்கு இடத்துக்கு ஏற்றவாறு இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள் செயற்படுத்தப்பட்டன.

பாரிய தலைக் காயங்கள் மற்றும் ஏனைய உயிரைப் பறிக்கக் கூடிய காயங்கள் உள்ளிட்ட நோயாளிகள் நோவு தணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தார்களே அன்றி அவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிய எண்ணிக்கையிலான கட்டில்கள் மாத்திரமே இருந்ததால், காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு முன்பாகவும் மண் தரையிலும் தனியாக அல்லது தம் உறவுகளின் அரவணைப்பில் இருந்தனர்.

புண்களைக் கட்டுவதற்கான துணிகள் கிடைக்காததால், பழைய துணிகள் அல்லது சாறிகள் புண்களைக் கட்டுவதற்காகப் பாவிக்கப்பட்டதோடு, சுத்தமின்மையினால் நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக இருந்தது. அநேகமாக சத்திர சிகிச்சை மயக்க மருந்து இன்றி பாரிய கத்திகளால் மேற்கொள்ளப்பட்டதோடு துண்டிக்கப்பட்ட உறுப்புக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக இரத்தத்துக்கான தட்டுப்பாடு நிலவியதால், மீண்டும் துணியால் வடிகட்டிப் பாவிப்பதற்காக நோயாளியின் இரத்தம் பைகளில் சேகரிக்கப்பட்டது.

111.
பலதடவை ஆஸ்பத்திரி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததால், வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியின் பிறிதொரு இடத்துக்கு ஆர்டிஎச்எஸ் இடம்பெயா்ந்த போதிலும், அங்கு கூட தெளிவான சின்னங்கள் இடப்பட்டிருந்த போதிலும், ஆஸ்பத்திரி இலங்கை இராணுவத்தின் ஷெல்லடித் தாக்குதலுக்கு ஆளாகி பலர் உயிரிழந்தனர். இரண்டாவது ஆஸ்பத்திரியிலும் நிலைமைகள் மோசமாக இருந்ததோடு இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதல் காரணமாக சில ஆஸ்பத்திரி ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள்.

வைத்தியர்களின் மறுப்புரைகள் உண்மையை பாதிக்காது: ஐநா நிபுணர் குழு அறிக்கை(பாகம்) - 07

(44)
10. எல்...ஈ. யினால் பொதுமக்கள் கொல்லப்படுதல் மற்றும் கட்டாய ஆட்சேர்த்தல்

112.
இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து எல்.ரி.ரி.ஈ யின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து தப்புவதற்காக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் முயன்றபோது அதனை நிறுத்துவதற்கு மேலும் அதிக வன்முறைகளை எல்.ரி.ரி.ஈ.கடைப்பிடித்தது.

சில எல்.ரி.ரி.ஈ.உறுப்பினர்கள் தப்பிச் செல்லும் பொதுமக்களை போகவிட்டபோது ஏனையோர் ஏகே47 துப்பாக்கி கொண்டு அவர்களை நோக்கிச் சுட்டு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பாரபட்சம் காட்டாமல் கொன்றனர்.

தப்பிச் செல்வதற்காக முனைந்த இடம்பெயர்ந்தோர் எப்படியாவது தப்பிச் சென்று இலங்கை இராணுவத்தினர் அணிகளைப் போய் அடைவதற்காக குழந்தைகளையும் மற்றும் பொருட்களையும் தூக்கிக் கொண்டும் சில வேளைகளில் பயத்தினால் அவற்றைக் கீழே போட்டு விட்டும் ஓடினர்.

சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர், மேலும் சிலர் ஆழமற்ற நீரில் தடுமாறினர் அல்லது மிதி வெடிகளில் சிக்குண்டு படுகாயமடைந்தனர். சிறுவர்கள் மற்றும் சிலர் ஏரியில் மூழ்கி இறந்தனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியாவிட்டாலும் அது கணிசமானதாக இருந்ததோடு யுத்தம் தீவிரமடைந்த போது அவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

113.
புது அணியினரின் தேவை அதிகரிக்கவே, எல்.ரி.ரி.ஈ மீண்டும் அதன் பலவந்தமாக ஆட்சேர்க்கும் கொள்கையைத் தீவிரப்படுத்தி பாதுகாப்பு முன் அரண்களில் நிறுத்துவதற்காக இளைஞர்களையும் வயது குறைந்தோரையும் இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.

ஏப்ரல் நடுப்பகுதியில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, முன்னாள் திருகோணமலை அரசியல் துறைத் தலைவரான எழிலனின் தலைமையில் எல்.ரி.ரி.ஈ யினர் நூற்றுக்கணக்கான இளைஞர்களை வலையர் மடம் கோயிலில் இருந்து நிர்ப்பந்தமாக அணியில் சேர்த்து முள்ளிவாய்க்காலுக்கு அவர்களை பேருந்துகளில் எடுத்துச் சென்றனர்.

பெற்றோர் தம் பிள்ளைகளை யுத்தத்துக்காக எடுத்துச் செல்ல வேண்டாம் என அழுது மன்றாடிய போதிலும் அது பலனளிக்கவில்லை.

114.
ஏப்ரல் 26 ஆம் திகதி, ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் ஒன்றை எல்.ரி.ரி.ஈ. பிரகடனப்படுத்திய போதிலும் அதனை ஒரு "கோமாளிக் கூத்து' என அரசாங்கம் நிராகரித்து விட்டது. 2009 ஏப்ரல் 27ஆம் திகதி, எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கனரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்துவதாகவும் இரண்டாவது தடவையாகவும் அரசாங்கம் அறிவித்தது.

2009 மே 8 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தின் தெற்கில் மிகச் சிறிய பிரிவொன்றை மூன்றாவது யுத்த சூன்ய வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியது..

11.இறுதி நாட்களில் இலங்கை இராணுவத்தின் ஷெல் வீச்சு (மே 13-18)

115.
மே 13ஆம் திகதி, 58ஆவது படை அணி கிழக்குத் திசையில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறுவதற்காக அதன் பயணத்தைத் தொடர்ந்ததோடு, 53ஆம் படைப்பிரிவு ஏரியை நோக்கி ஏ35 வீதியினூடாக கிழக்கு நோக்கி முன்னேறியது.

55ஆவது படைப் பிரிவின் அணியினர் புதுமாத்தளனில் இருந்து மேலும் தெற்கு நோக்கிப் படையெடுத்தனர். அத்தருணத்தில், அரசாங்கம் 10,000 பேர்கள் மாத்திரமே அங்கு இருந்தனர் எனக் கூறிய போதிலும், மூன்று சதுர கிலோமீற்றர் பகுதியொன்றில் 100,000 பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என ஐ.நா. மதிப்பீடு செய்கிறது.

(45)
116.
யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது.வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரியில், இரத்தம் கசியும் பலத்த காயங்களுடன் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் படுத்திருந்தனர். கடும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கிடையே இறந்தவர்களும் காணப்பட்டனர்.

நோயாளிகளைக் கவனித்து வந்த உறவினர்களும் கூட உணவுச் சத்தின்றி நலிந்து போயிருந்தனர்.

9. இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்கள் மரணங்கள், மே 2009லம் குழுவுக்குப் புகைப்படைப்பிடிப்பாளர் சமர்ப்பித்தது.

117.
ஐ.சி.ஆர்.சி. தொடர்ந்து எதுவித மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு மூன்றாவது யுத்த சூன்ய வலயத்தில் ஷெல் தாக்குதல் இருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்குண்டிருந்த போதிலும், எல்.ரி.ரி.ஈ யின் சிரேஷ்ட தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை நெருங்க நெருங்க இலங்கை இராணுவத்தின் தாக்குதல் ஒரு புது மட்டத்திலான தீவிரத்தை அடைந்தது.

எல்.ரி.ரி.ஈ தலைமைத்துவமோ தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைத் தாக்குதல்களை உள்ளிட்ட உயிர்துறக்கும் தாக்குதல்களில் தம் உறுப்பினர்களை ஈடுபடுத்தினர்.

118.
மூன்றாவது யுத்த சூன்ய வலயத்தின் இட நெருக்கடி காரணமாக பல பக்கங்களில் இருந்து வரும் ஷெல் வீச்சுக்களில் இருந்து தப்புவதற்காக பொதுமக்களுக்கு எந்தவொரு மறைவிடமும் இருக்கவில்லை. ஷெல்வெடிகள் சரமாறியாகப் பொழிந்ததோடு வேட்டுக்கள் பறந்து கொண்டிருந்தன. பலர் இறந்ததோடு, எதுவிதப் பதிவுமின்றி அவர்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டார்கள்.

கரும்புகையும் சடலங்களில் இருந்து வரும் வாடையும் காற்றில் நிறைந்திருந்தது. சிலர் தம் குழந்தைகளின் உணவுக்காக அல்லது காயமுற்ற மற்றும் குற்றுயிராகக் கிடப்பவர்களுக்கு உதவி கோரி மன்றாடிக் கொண்டிருந்தார்கள். அக்காட்சி நரகத்தை ஒத்ததாக இருந்தது.

(46)
119.
காயமடைந்தோர் மற்றும் இறந்தவர் பற்றிக் கவனிப்பதற்காக ஷெல் தாக்குதலை நிறுத்துமாறு உதவி அரசாங்க அதிபரும் வைத்தியர்களும் பல முறை அவசரத் தொலைபேசி அழைப்புக்களை விடுத்த போதிலும், இலங்கை இராணுவம் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

2009 மே 14ஆம் திகதிக்குப் பின்னர், ஷெல் வீச்சின் கடுமை காரணமாக வைத்தியர்கள் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியவில்லையாதலால் அதனை மூட வேண்டியேற்பட்டது. அகற்றப்பட முடியாத பல நோயாளிகள் அங்கு அப்படியே கைவிடப்பட்டனர். உயிர் பிழைத்த அனைவரும் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான இடங்களில் முடங்கியிருந்தனர்.

உணவு சமைப்பது முடியாத காரியமாக இருந்ததோடு, மலசலம் கழிக்க வெளியே போனால் கூட உயிருக்கு ஆபத்து நேரும் நிலையே இருந்தது. சில பொதுமக்கள் கூட்டமாக வெளியேற முயன்றபோது எல்.ரி.ரி.ஈஅவர்களை நோக்கிச் சுட்டு ஷெல் வெடிகளை ஏவினர். தப்பியோடியவர்களை தனித்தனி இலங்கை இராணுவ வீரர்கள் பாதுகாப்பாகச் செல்ல உதவினர்.

120.
மே 15ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ. தம் தொடர்பாடல் சாதனங்களை தகர்த்து நொறுக்கினர். மே 16ஆம் திகதி பாரியதொரு அதிர்வெடி எல்.ரி.ரி.ஈ பிரதேசத்தைக் குலுக்கியதோடு பல இடம் பெயர்ந்த மக்களின் குடிசைகள் நெருப்பினால் அழிந்தன.

அதே தினம் இலங்கை இராணுவத்தின் 58ஆவது மற்றும் 59ஆவது படைப்பிரிவுகள் கரையோரத்தில் இணைந்தனர். அப்போது இராணுவக் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா எல்.ரி.ரி.ஈ க்கு எதிரான வெற்றியைப் பிரகடனப்படுத்தினார்.

53ஆவது படைப்பிரிவு தெற்கு நோக்கி அதன் பயணத்தை நந்திக் கடல் ஏரியினூடாகக் தொடர்ந்தது. உயர்பீடத் தலைவர்கள் பலரை உள்ளிட்ட எல்.ரி.ரி.ஈ. யின் எஞ்சியிருந்தவர்கள் மற்றும் சுமார் 250 உறுதியான போராளிகள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 3 சதுர கிலோமீற்றர் பிரதேசமொன்றில் சுற்றி வளைக்கப்பட்டனர். முடிவு நெருங்கிவிட்டது. அத்தலைவர்கள் பலன் மரணங்களைச் சூழ்ந்த நிலைமைகள் சர்ச்சைக்குரியதாயுள்ளது.

121.
2009 மே 18ஆம் திகதி, யுத்த சூன்ய வலயத்தில் இருந்து தப்பியோட முயன்றபோது பிரபாகரன், சூசை மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் கூறின. சார்ள்ஸ் அன்ரனி, நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரும் இறந்தவர்களுள் அடங்கினர்.

பிரபாகரன் மற்றும் அவன் நெருங்கிய சகாக்கள் கொல்லப்பட்டார்கள் என மே 19ஆம் திகதி, இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு, அவர்களின் சடலங்கள் தொலைக்காட்சியினூடாகவும் காட்டப்பட்டன. சடலங்களின் பல புகைப்படங்கள் பின்னர் வெளியாகின.

எல்.ரி.ரி.ஈ. மீது கிடைத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தி அதே தினம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

122.
மே 16 மற்றும் 19ஆம் திகதிகளுக்கிடையே, வலயத்தில் சிக்குண்டிருந்த எஞ்சியிருந்த பொதுமக்கள் கரையோரப்பகுதியில் இருந்து தெற்கே வட்டுவாய்கால் பாலத்தைக் கடந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றனர்.

ஷெல் வெடிகள் தொடர்ந்ததோடு, (எல்.ரி.ரி.ஈயின் அழிக்கப்பட்ட ஆயுதக் குவியல்கள் உள்ளிட்ட) பாரிய நெருப்புக்கள் எரிந்து கொண்டிருந்தன. சடலங்கள் எல்லாவிடத்திலும் சிதறிக் கிடந்ததோடு, வழியில் விழுந்திருந்த காயற்றோர் நடக்கக் கூடியவர்களிடம் உதவி கேட்ட போதிலும் அவர்களுக்கு உதவ முன்வருவோர் அரிதாகவேயிருந்தனர்.

பாசமுள்ள இறந்த உறவினர்களைக் கட்டியணைத்துக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. எங்குமே மரண வாடை வீசிக் கொண்டிருந்தது.

(47)
123.
2009 மே 18ஆம் திகதி வன்னியில் ஆயுதந்தரித்த யுத்தத்தின் முடிவைக் குறித்தது. "கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவிலான மனிதாபிமான அவலத்தில்' இறுதி நாட்கள் முடிவடைந்தது என்பதாக ஐ.சி.ஆர்.சி. குறிப்பிட்டது.

ஈ.மனிதாபிமான உதவியை நிராகப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பற்றிச் சர்ச்சை எழுப்பல்

124.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் முழுவதிலும், குறிப்பாக 2009 ஜனவரி முதல் மே வரை, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்டி, மனிதாபிமான உதவிகளைக் குறிப்பாக உணவு மற்றும் மருந்து வகைகளின் அளவைக் குறைப்பதற்காக குறைந்த மதிப்பீட்டை அரசாங்கம் பிரயோகித்தது.

125.
இறுதிக் கட்டத்தின் ஆரம்பத்தில், 2009 ஜனவரி 13ஆம் திகதி, சுயாதீன மதிப்பீடுகளின் படி, வன்னிப் பிரதேசப் பொதுமக்களின் எண்ணிக்கை 150,000 க்கும் 250,000 க்கும் இடைப்பட்டதாக இருந்தது என அரசாங்க இணையத்தளம் தெவித்தது.

ஆரம்பத்தில் ஐ.நா. இன் மதிப்பீடு 250,000 ஆக இருந்தது. (பின்னர் அந்த மதிப்பீடுகள் அதிகமாக இருந்த போதிலும்). பின்னர் 2009 ஜனவயில், வன்னியில் இருந்த பொதுமக்கள் எண்ணிக்கை 75,000 க்கும் கூடிய மதிப்பீட்டின் படி 100,000 க்கும் இடைப்பட்டதாக இருந்தது என பாதுகாப்பு அமைச்சு கூறியது.

ஆயினும், வன்னியில் இருந்த பொதுமக்களின் சரியான எண்ணிக்கையை பிழையற்ற முறையில் மதிப்பீடு செய்வதற்கான போதியளவை விஞ்சிய தகவல் அரசாங்கம் வசம் இருந்தது.

ஒவ்வொரு மாதம் உலக உணவுத் திட்டத்தில் இருந்து உலர் உணவு பங்கீடுகளைக் கோருவதற்காக அரசாங்க அதிபர்கள் ஐ.டி.பி.யினர் பற்றிய தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து வந்துள்ளனர்.

2008 செப்டெம்பருக்கு முன் அச்சமயம் எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமார் 420,000 பொதுமக்கள் இருந்ததாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களினால் தொகுக்கப்பட்ட எண்ணிக்கைகள் குறிப்பிட்டன.

இவ்வெண்ணிக்கைகள் அதிகரித்துக் காட்டப்பட்டிருக்கலாம் என்றிருந்த போதிலும், ஐ.நா. சிறுவர் நிதியத்தின் படி, வன்னியில் பதிவு செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 70,000 ஆக. அதாவது அரசாங்கத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கைக்குச் சுமார் சமமானதாக இருந்தது.

126.
பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட எண்ணிக்கைகள் மாறுபட்டதாக இருந்த போதிலும், வேண்டுமென்றே அவை குறைவாகவே வைக்கப்பட்டிருந்ததோடு, வலயத்தில் தொழில்புரிந்த சில அரசாங்க ஊழியர்கள் வேறு கணக்குகளை அல்லது தேவைக்கான வேறு மதிப்பீடுகளை வழங்கிய போது அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.

உதாரணமாக, 2009 பெப்ரவரி 2ஆம் திகதி, இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் இருந்து உதவி அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்டத்தில் அச்சந்தர்ப்பத்தில் சுமார் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் சுமார் 330,000 ஆட்கள் இருப்பதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஆயினும், மார்ச் 18 ஆம் திகதி 330,000 என்ற அக்கணக்கு "விதிகளுக்குக் கட்டுப்படாததும் அடிப்படையற்றதும்' எனவும். "குறிப்பாக ஐ.டி.பி. கணக்குகள் தொடர்பாக எந்தவொரு மூலத்துக்கும் தவறான தகவலை வழங்கியதற்காக' அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அரசாங்கம் "விருப்பத்துக்கெதிராக நிர்ப்பந்திக்கப்படும்' எனவும் உதவி அதிபருக்கான பதிலில் தேசத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

(48)
127.
2009 பெப்ரவ இறுதியில், இடம்பெயர்ந்தோன் குடிசைகளைக் கணக்கெடுத்து உரு மற்றும் வேர்ல்ட்வியூ செய்மதிப் படங்களை ஒரு பகுதியாக வைத்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பகுதியில் 267,618 பொதுமக்கள் இருப்பதாக அது கருதுவதாக ஐ.நா. நாட்டுக்கான குழு அரசாங்கத்துக்கு அறிவித்தது.

ஏப்ரல் கடைசியில், ஐ.நா. இன் மதிப்பீடுகளின் படி தொடர்ந்தும் 127,177 பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என்ற போதிலும், அக்காலப்பகுதியில் 10,000 பேர்கள் மாத்திரமே எஞ்சியிருந்தனர் என அரசாங்கம் கூறியது.

இறுதியாக அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மற்றும் மெனிக் பாம் அத்துடன் வேறு முகாம்களில் குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 290,000 ஆக இருந்தது.

இவ்வெண்ணிக்கைகளுக்கிடையிலான வேறுபாட்டினை போதியளவு அரசாங்கம் விளக்கவில்லை.

128.
அரசாங்கத்தின் குறைவான மதிப்பீட்டின் விளைவாக, வன்னிக்கு உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் நிஜத் தேவையைவிட மிகக் குறைவாக இருந்ததால், பட்டினிச் சாவு மற்றும் போசாக்கின்மை அங்கு பரவலாகக் காணப்பட்டது.

அதே போன்று, வன்னிப் பிரதேசத்துக்கு அனுமதிக்கப்பட்ட மருந்து வகைகள் ஷெல் வீச்சுக் காரணமாக ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு கொஞ்சம் கூடப் போதியதாக இருக்கவில்லை. மார்ச் 2010 இல் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்த போது, தேவைப்படும் மருந்து வகைகள் இல்லாதது பாரிய கக்ஷ்டங்களுக்கும் தேவையற்ற உயிழப்புக்களுக்கும் வழிகோலியது.

ஆர்.டி.எச். வைத்தியர்கள் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை பற்றி கடிதங்கள் மற்றும் தொலைக்காட்சியினூடாகவும் தெவித்த போது, ஊடகங்களுடன் பேசுவதை புகார் செய்வதை நிறுத்துமாறும் அல்லது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்களை சுகாதார அமைச்சு எச்சரிக்கை செய்தது.

129.
2009 மார்ச் 19ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரியில் தேர்ச்சி பெற்ற மயக்க மருந்து கொடுக்கும் வைத்தியர் இல்லாததால், கடுமையான வலி தடுப்பு மருந்துகளும் நரம்புக்குள் செலுத்தும் திரவங்களை மாத்திரமே அனுப்படியும் என சுகாதார பராமரிப்பு மற்றும் போசாக்கு அமைச்சின் செயலாளர் வைத்தியர்களுக்கான பதிலில் தெவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகருக்கு அல்லது தமிழ் நாடு முதலமைச்சருக்குக் கடிதங்களை அனுப்பி இராஜதந்திர மரபு முறைகளை மீற வேண்டாமென்றும் அப்படி மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் வைத்தியர்கள் எச்சரிக்கப்பட்டார்கள்.

130.
மே 16ஆம் திகதி வைத்தியர்கள் யுத்த வலயத்தில் இருந்து வெளியேறியதும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல மாதங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009 ஜூலை ஆரம்பத்தில், வைத்தியர்கள் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தி, யுத்தத்தில் உண்மையிலேயே சிலரே மரணித்ததாகவும் காயமடைந்ததாகவும் அது பற்றி பொய் சொல்ல எல்.ரி.ரி.ஈ .தம்மை நிர்ப்பந்தப்படுத்தினர் எனவும் அங்கு அவர்கள் கூறினர்.

இம்மறுப்புரை தாம் தொடர்ந்து வன்னியில் இருந்த போது வழங்கிய நேர்காணல்கள், இலத்திரனியல் தபால் மற்றும் விடுத்த பகிரங்க அறிக்கைகளுடன் மாறுபட்டதாக இருந்தது. அரசாங்கம் அவர்களை அழுத்தத்துக்குள்ளாக்கியதாகவும் இம்மறுப்புரைகள் அவர்கள் முன்னர் வழங்கிய அறிக்கைகளின் உண்மையைப் பாதிக்காது எனவும் இக்குழு நம்புகிறது.

(49)
பொதுமக்கள் எண்ணிக்கை மறறும் அவர்கள் தேவைகள் பற்றிய 1ஆம் நிலைத் தகவலைக் கைவசம் வைத்திருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் பொது மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக வன்னிக்கான பொருட்களின் விநியோகத்தைக் குறைப்பதற்கான வியூகத்தின் ஓர் அங்கமாக மிகவும் குறைவான எண்ணிக்கை பற்றிய மதிப்பீட்டையே பிரயோகித்தது. இதற்காக மதிப்பீடுகள் குறைக்கப்பட்டன என்பதை பின்னர் சிரேஷ்ட அரசாங்க அதிகாரியொருவர் ஒப்புக்கொண்டார். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அரசாங்கம் பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ உடன் இணைத்துக் காட்டியதையும் குறைவான எண்ணிக்கைககள் குறிக்கிறது.

உ.இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை

132.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது வன்னியில் இறந்த அல்லது காயமடைந்த பொதுமக்கள் பற்றிய உறுதியானதொரு கணிப்பு இல்லை உண்மையானதொரு கணிப்பை மேற்கொள்வதைப் பல காரணிகள் சிரமமாக்கியுள்ளன:

(அ) யுத்தப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்கள் எண்ணிக்கை 330,000 ஆக இருந்திருக்கலாம் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை நிச்சயமற்றதாகும்,

(ஆ) பிரிக்கும் செயற்பாட்டில் வெளிப்படையற்ற தன்மை காரணமாக வன்னியில் இருந்து வெளியே வந்தவர்களின் சரியானதொரு கணிப்பு இல்லாதமை,

(இ) இறுதிக் கட்டத்தின் போது கட்டாயமாக ஆட்சேர்த்தல் காரணமாக சிக்கலாகிய நிலைமையில் எல்.ரி.ரி.ஈ இன் போராளிகள் பற்றிய எண்ணிக்கை பற்றிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பல பொதுமக்கள் தாம் விழுந்த இடத்திலேயே அவர்கள் மரணம் பற்றிய எவ்வித அவதானிப்பும் பதிவும் இன்றி அவர்கள் புதைக்கப்பட்டது.

133.
வைத்தியர்களால் சேகரிக்கப்பட்ட காயமடைந்த மற்றும் மரணமாகியவர்கள் பற்றிய, ஆஸ்பத்திகளால் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகுகளினால் ஒத்துப்பார்க்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சில மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறுதிக் கட்டத்தின் போது சுமார் 40,000 சத்திர சிகிச்சை நடவடிக்கைகளையும் 5,000 அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்பட்டதையும் ஒரு மதிப்பீடு கொண்டுள்ளது. காயம் மற்றும் மரணங்களுக்கிடையிலான 1:2 அல்லது 1:3 என்ற விகிதாசாரத்தின் படி பார்த்தால மிகஅதிகளவிலானபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அது குறிக்கக் கூடியதாகவுள்ளது.

ஏனையவர்கள் இந்த மதிப்பீட்டை 75,000 எனக் குறிப்பிடுகிறார்கள், அதாவது யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியாகியவர்களின் எணிக்கை (சுமார் 290,000) மற்றும் யுத்த வலயத்தில் இருந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (யுத்த சூன்ய வலயத்தில் ஜனவரி முதல் இருந்த சுமார் 330,000 அத்துடன் அதற்கு முன்னர் எல்.ரி.ரி.ஈ. யின் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய சுமார் 35,000).

134.
ஐக்கிய நாடுகள் நாடு சார்ந்த குழுவே தகவலின் ஒரே மூலமாக இருந்தது பகிரங்கப்படுத்தப்படாத ஆவணமொன்றில், கணிப்பு நடவடிக்கைகள் கஷ்டமாகும் வரை ஆகஸ்ட் 2008 முதல் 2009 மே 13ஆம் தகதி வரை மொத்தம் 7,721 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 18,479 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது மதிப்பீடு செய்துள்ளது. 2009 பெப்ரவரி ஆரம்பத்தில், தகவலுக்கான பிரவேசம் கஷ்டமாக இருந்த போதிலும், காயமடைந்த மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கையைத் தொகுக்கும் செயற்பாடொன்றை ஐ.நா. ஆரம்பித்தது.

இச்செயற்பாட்டின் போது ஆர்டிஎச்எஸ் இடம் கிடைக்கும் கணக்கு விபரங்களை அது அடிமட்டக் கோடாக எடுத்துக் கொண்டதோடு, உறுதிப்படுத்த முடியாத அல்லது தமிழ்நெட் மற்றும் வன்னிக்கு வெளியேயிருந்து வந்த அரசாங்கக் கணிப்புக்கள் போன்ற பக்கச்சார்பான லங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

(50)
135.
ஐ.நா. நாடுசார்ந்த குழுவினால் கணிக்கப்பட்ட எண் ஒரு ஆரம்பத்தை வழங்குகிறது என்ற போதிலும் பல காரணங்களுக்காக அது மிகக் குறைவாக இருந்தது.

முதலாவதாக, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாடடுப் பிரதேசங்களில் செயற்பட்ட அவதானிப்பாளர்கள் வலைப்பின்னல் ஊடாக நிஜமாகவே அவதானிக்கப்பட்ட காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய விபரத்தில் மாத்திரம் அது தங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட பலர் அவதானிக்கப்படாதிருக்கலாம்.

இரண்டாவதாக, ஐ.நா. மே 13ஆம் திகதி கணக்கெடுப்பதை நிறுத்திய பின்னர், காயமடைந்த மற்றும் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகத்திருக்கலாம். ஷெல்வீச்சின் தீவிரத்தன்மை காரணமாக, பல பொதுமக்கள் அவர்கள் இறந்த இடத்திலேயே விட்டு விடப்பட்டதோடு அவை பதியப்படவோ, ஆஸ்பத்திக்குக் கொண்டு வரப்படவோ அல்லது புதைக்கப்படவோ இல்லை. இதனால், உண்மையிலேயே மொத்தக எண்ணிக்கை ஐ.நா. யின் கணிப்பை விட மிக அதிகமாயிருக்கும்.

136.
அரசாங்கத்திடம் பரிந்து கேட்டுக் கொள்ளும் போது ஐ.நா. காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் கூடிய எண்ணிக்கையைக் குறிப்பிட்டதோடு, அதன் குறிப்பான மதிப்பீடுகளைப் என்றுமே பகிரங்கப்படுத்தவில்லை. ஐ.நா.வழங்கிய கணக்குகளை, அவை கற்பனை செய்யப்பட்டவை எனவும் அது ஐ.நா.வின் காரியமல்ல வென்றும் அரசாங்க அதிகாரிகள் கடுமையாக அக்கணிப்புக்களைச் சர்ச்சைக்குட்படுத்தினர்.

பகிரங்கமாக யுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட "பலத்த சேதம்' பற்றி அல்லது காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை "ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு' அதிகமாக இருந்தது என ஐ.நா. குறிப்பிட்ட போதிலும் உண்மையான எண்ணிக்கையை சரி பிழை பார்க்க முடியவில்லை. குறிப்பான கணிப்புக்களை வழங்குவதில்லை என்ற முடிவு பொதுமக்கள் காயமடைந்தது மற்றும் மரணித்தது பற்றிய செய்தி அறிக்கை விடுப்பதை முக்கியத்துவமற்றதாக்கி விட்டது.

ஆயினும், ஜனவரி 20ஆம் திகதி முதல் அநேகமாக யுத்த சூன்ய வலயங்களினுள் 2,800 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துமிருக்கலாம் என மனித உரிமையகளுக்கான உயர் ஸ்தானிகள் பகிரங்கமாக அறிவித்த 2009 மார்ச்சு 13ஆம் திகதி வரை இந்நிலைப்பாடு பேணப்பட்டு வந்தது.

137.
யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் படி, தம் சொந்தங்களின் மரணம் பற்றி அறிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. பல நம்பகமான மூலங்களின் மதிப்பீட்டின் படி, 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்பும், பொதுமக்கள் மரணம் பற்றிய ஏற்றுக் கொள்ளப்படடிக்கூடிய கணிப்பு இல்லை என்ற போதிலும், இத்தருணத்தில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என பல மூலங்களின் தகவல் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்ட அனைவர் பற்றி இனங்காண்பதற்கும் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிய சரியானதொரு கணக்கைப் பெறுவதற்கும் உரியதொரு புலனாய்வு மாத்திரமே வழிவகுக்கும்.

பாதுகாப்பு விடயத்துக்கே அரசாங்கம் முக்கியத்துவம் அளித்தது: ஐநா நிபுணர் குழு அறிக்கை (பாகம்) - 08

(51)

(ஊ) யுத்த வலயத்திற்கு வெளியே மற்றும் பின்னர் நடந்தேறிய சம்பவங்கள் தொடர்பான நம்பத்தகு குற்றச்சாட்டுக்கள்

138.
வன்னி யுத்தத்தில் பிழைத்த பொதுமக்களின் இக்கட்டு நிலை அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களுக்குச் சென்றதும் முடிவுக்கு வரவில்லை. வன்னியிலிருந்து வெளியேறும் பெருந்திரளான மக்களை வரவேற்கத் தான் தயார் என அரசாங்கம் 2009 ஜனவரியில் இருந்தே அறிவித்திருந்த போதிலும், பெருந்திரளான மக்கள் வெளியே வந்தபோது அதற்கான போதிய வசதியினை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதோடு, அதனைச் சமாளிப்பதற்கும் கஷ்டப்பட்டது. பொதுவாக மனிதாபிமான தேவைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் நலனை விட பாதுகாப்பு விடயங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது. .

139.
யுத்த வலயத்தில் இருந்து பொது மக்கள் வெளியே வந்ததும், தமக்குக் கிடைக்கும் வரவேற்பினைப் பற்றிப் பலர் அச்சம் கொண்டிருந்தனர். அவர்கள் பாரிய அழுத்தத்துக்குட்பட்டும் களைப்படைந்துமிருந்தனர். அநேகம் பேர் புதிதாக விதவைகளானவர்களாகவும், அனாதைகளானவர்களாகவும் அல்லது அங்கவீனற்றவர்களாகவும் இருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோர் யுத்தக் காயங்களுடன் காணப்பட்டனர். அவர்களுள் குறைந்த பட்சம் 2,000 அங்கவீனர்கள் இருந்தனர்.

பெருந்திரளானவர்கள் வெளியேறியதும் நிலைமை குழப்பமாக இருந்ததோடு, பல குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்திருந்தனர்.

இச்செயற்பாட்டின் போது குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டன குடும்பத்தினரைக் கண்டு பிடித்து ஒன்று சேர்ப்பதற்கான ஏற்பாடு போதியளவாக இருக்கவில்லை என்பதோடு, இதில் பங்களிப்பதற்கு ஐ.சி.ஆர்.சி. அனுமதிக்கப்படவில்லை..

140.
குடும்பங்களில் இருந்து பிரிந்த நிலையில் பல பெண்கள் தனியாக்கப்பட்டதோடு பாலியல் வன்றைக்குப் பலியாகும் நிலையை எதிர்நோக்க வேண்டியி ருந்தது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போதியளவு போசாக்கு, மருத்துவப் பராமரிப்பு இன்றியும் யுத்த வலயத்தில் இருந்த போது பாரிய மனோ தத்துவ ரீதியிலான அழுத்தங்களுக்கும் ஆளாகியிருந்தனர். கட்டாயமாகக் குழந்தைகள் அணி சேர்க்கப்பட்டது தாய்மார் மீது பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

141.
யுத்தம் இளம் வயதினர் மேல் குறிப்பானதொரு தாக்கத்தைக் கொண்டிருந்தது.

14 வயது சிறுவர்கள் கூட எல்.ரி.ரி.ஈ யினால் பலவந்தமாக அணி சேர்க்கப் பட்டனர். இள வயதில் திருமணத்தை உள்ளிட்ட அணி சேர்ப்பதைத் தவிர்ப்பதற் கான நடவடிக்கைகள் இளம் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மீது கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும், ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஷெல் வீச்சுக் காரணமாக மரணமடைந்து அல்லது அங்கவீனர்களாக ஆகினர். சில குழந்தைகள் பதுங்கு குழிகளில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றதால் கொல்லப் பட்டார்கள். தீவிர போசாக்கு மதிப்பீடொன்றின் படி, 25 சதவீதமான குழந்தைகள் பாரிய ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

142.
பலமுறை இடம்பெயர நேர்ந்ததால் பல குழந்தைகள் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர். பலர் தம் பெற்றோரை இழந்திருந்ததோடு, தனியாக வெளியேறியதால் அவர்கள் பதியப் படவில்லை. அநேகமான குழந்தைகள் சத்துணவின்றியும் பல சிறு குழந்தைகள் உலர் தன்மையினால் அல்லது வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

(52)
143.
அதேபோன்று, யுத்தத்தினால் முதியவர்களும் பாதிக்கப்பட்டார்கள். பல முறை நேர்ந்த இடம் பெயர்வு காரணமாக, முதியவர்களால் தொடர்ந்தும் நடக்க முடியவில்லையாதலால் அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் கைவிடப்பட்டனர்.

இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த இன்னும் சிலர் களைப்பு மற்றும் தடுக்கக் கூடிய நோய்களினால் மரணமானார்கள்.

1. பிரிக்கும் செயற்பாட்டின் போதான மீறல்கள்

144.
வன்னியை விட்டகன்று வட்டுவாகல் பாலம் மற்றும் ஏனைய அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அடைந்து யுத்தத்தில் உயிர் தப்பியவர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். உள்ளே வரும் பொதுமக்கள் பல்வேறு குழுக்களாகப் பிக்கப்பட்டார்கள்.

முதலில், இலங்கை இராணுவம் பொதுவாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் இருக்கிறதா எனப் பார்ப்பதற்காக அவர்கள் உடம்பைச் சோதனை யிட்டது. (ஒரு சில) மடிக் கணணிகளும் கமராக்களும் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டபோது அவற்றிலிருந்த பெறுமதிமிக்க தகவல்கள் இல்லாமற்போயின. மக்கள் பின்பு அநேகமாக கால்நடையாக கிளிநொச்சி, புல்மோட்டை மற்றும் பதவிய போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆரம்ப பிரிக்கும் அமைவிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வமைவிடங்களில், ஒரு நாளாவது எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்புபட்டிருந்தவர்களை தம்மை இனங்கண்டு சரணடையுமாறு இலங்கை இராணுவம் அழைத்தது, அப்படிச் செய்பவர்களுக்குத் தொழிற் பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக உறுதி மொழி அளித்தது. மாறாக, எல்.ரி.ரி.ஈ என இனங்காணப்பட்டவர்கள் வேறு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ இனர் பெண்களாகவும் சிறுவர்களாகவும் இருந்தனர்.

145.
மேலும், பிரிக்கப்பட்டு வேறு அமைவிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை இனங்காண்பதற்காக கருணா பிரிவு அல்லது தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்) உறுப்பினர்களை அரசாங்கம் உபயோகித்தது. ஆரம்பப் பிரிக்கும் அமைவிடங்களுக்கான சர்வதேச மனிதாபிமான முகவர்களின் பிரவேசத்தை வேண்டுமென்றே அரசாங்கம் தடுத்தது.

146.
ஆரம்பப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஓமந்தையில் உள்ள மற்றுமொரு பிரிக்கும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட் டார்கள். ஆண்களும் பெண்களும் வெவ்வேறாகப் பரிசோதிக்கப்பட்ட போதிலும், பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக ஆடைகள் களையப்பட்டு அவர்கள் சோதனை இடப்பட்டதால் அவர்கள் அவமானத்துக்கு உட்பட்டதோடு, குறிப்பாக பெண்களும் சிறுமிகளும் தாக்கமுறும் சாத்தியம் அதிகத்தது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐ.சி.ஆர்.சி. ஓமந்தையில் ஓரளவிலான பிரவேசத்தைப் பெற்ற போதிலும், தனியாக மக்களை சந்தித்துப் பேச அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜூலை 2009 இற்குப் பின்னர், ஐ.சி.ஆர்.சி. இதிலிருந்து ழுமையாகத தடுக்கப்பட்டது.

(53)
147.
சிகிச்சை தேவைப்பட்ட பொது மக்கள் வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள் அல்லது புல்மோட்டையில் இந்திய வைத் தியர்கள் சேவை புரிந்த மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

வவுனியா ஆஸ்பத்திரியில் காயமுற்றோர் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததால் பலர் சிகிச்சை முடிவடையுன்னர் வெளியேற்றப்பட்டதோடு சகல நோயாளிகளும் இலங்கை இராணுவத்தினன் காவலில் வைக்கப்பட்டு பொலிஸ் புலனாய்வாளர்களினால் (குற்றப் புலனாய்வுப் பிவு அல்லது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு) விசாரிக்கப்பட்டார்கள். சில நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் இருந்து மாயமானார்கள்.

148.
குறிப்பாக பிரிக்கும் செயற்பாட்டின் விளைவாக கொலைத் தண்டனைகள், காணாமாற்போதல், வன்புணர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றன.

(அ) கொலைத் தண்டனைகள்

149.
இலங்கை இராணுவத்தின் பொறுப்பில் இருந்த சில எல்.ரி.ரி.ஈ . உறுப்பினர்கள் கொலைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை உறுதி செய்யப்பட்ட படச் சுருள்களும் பல புகைப்படங்களும் குறிப்பிடுவதாக இருந்தது. சிலரின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த பல இறந்த உறுப்பினர்களின் சடலங்களைக் (பொதுமக்களாகவும் இருக்கலாம்) காட்டும் புகைப்படங்கள் குழுவுக்குக் கிடைத்தன.

2009 ஆகஸ்ட் 25ஆம் திகதி யூகே யினைத் தளமாகக் கொண்ட சனல் 4 நியூஸ் ஊடகம் பல சிறைக்கைதிகள் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு இலங்கை படை வீரர்களால் சடுதியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் வீடியோப் படங்களை ஒளிபரப்பியது.

படத்திலிருந்த கைதிகள் நிர்வாணமாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். மிக அருகில் இருந்து தலையில் சுடப்படு முன்னர் அவர்கள் உதைக்கப்பட்டு சேற்றில் தடுமாற விடப்பட்டார்கள்.

அதற்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கக் கூடிய ஏனைய பல சிறைக்கைதிகளையும் அப்படம் காட்டுகிறது. சனல் 4 இனால் 2010 டிசம்பர் 2ஆம் திகதி அதே காட்சியைக் கொண்ட இன்னுமொரு படம் நிலப்பரப்பின் மீது பார்வையைச் செலுத்தி கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நிர்வாண கோலத்தில் இருந்த மேலும் பல ஆண் மற்றும் பெண்களின் சடலங்களைக் காட்டியது. அவர்களுள் இளம் வயது சிறுவன் ஒருவனும் ஒரு பெண்ணும் காணப்பட்டார்கள். அப்பெண் எல்.ரி.ரி.ஈ யின் பிரசித்தி பெற்ற ஊடக தொகுப்பாளர் "இசைபிரியா' என இனங்காணப்பட்டது.

2009 மே 18ஆம் திகதி 53ஆவது படைப்பிரிவின் "எதிரி நடவடிக்கை' ஒன்றின் போது இசைப்பிரியா கொல்லப் பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணை யத்தளம் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கதாகும். நீடிக்கப்பட்ட வீடியோப் படம் சில படைவீரர்களின் முகங்களைக் காட்டுவதோடு சிலர் காட்சியை கையடக்கத் தொலைபேசி மூலம் படம் பிடிப்பதையும் காணக் கூடியதாகவிருக்கிறது. .

150.
கொலைத் தண்டனை நிறை வேற்றப்படுவதற்கு முன் எடுக்கப்பட்டதாகத் தெரியும் புகைப்படங்களில் உயிருடன் இருக்கும் சிறைக்கைதிகள் இடையே இச்சிறுவனை ஒத்த ஒருவன் இருப்பதையும் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டிருப்பதையும் காணக் கூடிய தாகவிருக்கிறது.

ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்ட சில எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் சித்திர வதைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதையும் புகைப்படங்களில் காணக் கூடியதாக விருக்கிறது. இரத்தம் வழிந்தோடும் நிலையில் மரமொன்றில் கட்டப்பட்ட இளம் ஆண் ஒருவரையும் வீடியோப்படம் ஒன்று காட்டுகிறது. பின்னர் புலிக் கொடியொன்றினால் போர்த்தப்பட்ட புதை குழியொன்றில் அவரைக் காணக் கூடியதாகவுள்ளது.

(54)
(ஆ) காணாமல்போதல்கள்

151.
பிரிக்கும் அமைவிடங்களில் அல்லது ஓமந்தையில் ஆட்களின் பகிரங்கப் பதிவொன்றை அரசாங்கம் வழங்கவில்லை என்பதோடு, அச்செயற்பாட்டைக் கண்காணிப்பதற்கு சர்வதேச அமைப்புக்களை அனுமதிக்கவுமில்லை.

இதனால் ஆட்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாகவுள்ளது. கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது, ஆரம்பத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளை அடைந்த போது தம் கணவன்மார்கள் அல்லது உறவுகள் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டதாகவும் அன்று முதல் இன்று வரை அவர்கள் பற்றிய எது விதத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் பல பெண்கள் தெரிவித்ததோடு, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யவுமில்லை.

2009 மே மாதத்தில், காணாமல் போனதாக, சில தனி நபரல்லாத ஆட் குழுக்கள், பற்றிக் குறிப்பிடும் குறைந்த பட்சம் 32 குற்றச் சாட்டுக்கள் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. இவர்களுள் பலர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களாவர்.

(இ) வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்செயல்

152.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதும் அதனைத் தொடர்ந்தும் தமிழ் பெண்களுக்கெதிராக நிகழ்ந்த வன்புணர்ச்சி மற்றும் பாலியல் வன்முறைகள் மிகக் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

கலாசார நுண்ணர்வுகள் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் கறை தாக்கத்துக்குள்ளானவர்கள் தம் உறவுகளுக்குக் கூட அத்தகைய குற்றச் செயல்கள் பற்றிய அறிவிப்பைத் தடுத்தது. அது அவ்வாறிருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதும் அதனைத் தொடர்ந்தும் அரசாங்கப் படையினர் மற்றும் அவர்களின் தமிழ் துணையாளர்களாலும் பாலியல் வன்றைக்கு உட்படுத்தப்பட்டது பற்றிப் பெண்கள் மறைகமாக அறிவித்துள்ளனர்.

153.
பல புகைப்படங்களும் வீடியோப் படங்களும், குறிப்பாக சனல் 4 இனால் வழங்கப்பட்ட வீடியோப் பதிவுகளும், இறந்த பெண் உறுப்பினர்களைக் காட்டுவதாக உள்ளன. அவற்றில், மீண்டும் மீண்டும் பெண்கள் நிர்வாணமாக அல்லது கீழாடைகள் அகற்றப்பட்டு அவர்களின் மார்பகங்கள் மற்றும் மர்மஸ்தானங்கள் திறக்கப்பட்டுக் காட்டப்படுகிறார்கள்.

இலங்கை இராணுவப் படைவீரர்களின் சிங்கள மொழி விளக்கத்துடனான சனல் 4 படங்கள், கொலை செய்யப்படு முன் அல்லது பின் வன்புணர்ச்சி அல்லது பாலியல் வன்முறை நிகழ்ந்திருக்கலாம் என்ற உறுதியான ஊகத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு வீடியோ படத்தில் இலங்கை இராணுவப் படை வீரர்கள் இறந்த (அல்லது குற்றுயிராகக் கிடக்கும்) நிர்வாணமான சடலங்களை மிகவும் அவமரியாதையுடன் ட்ரக் வண்டி ஒன்றில் ஏற்றுவதையும், அசைவதாகத் தெரியும் ஒரு பெண்ணின் காலை பலமாய் மிதிப்பதையும் காட்டுகிறது.

இலங்கை காவல்துறையினர் (குற்றப் புலனாய்வுப் பிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிவு) அல்லது இலங்கை இராணுவத்தின் பொறுப்பிலிருந்த போது சந்தேகிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் வன்புணர்ச்சிக்குட்படுத் தப்பட்டதாகவும் அறிக்கைகள் இருக்கினறன.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வன்புணர்ச்சி சம்பவங்களை சர்வதேச முகவர்களும் பதிவு செய்ததோடு, மேற்படி சம்பவங்களை காவல்துறையினருக்கோ சர்வதேச ஈடுபாட்டாளர்களுக்கோ தெரிவிக்க வேண்டாம் என இடம்பெயர்ந்தோரை இராணுவத்தினர் எச்சரித்தனர்.

(55)
(அ) விசாரணையின்றி மூடிய முகாம்களில் இடம்பெயர்ந்தவர்களைத் தடுத்து வைத்தல்

154.
யுத்த வலயத்தில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம், மன்னார். திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் வியாபித்திருந்த 21 இடம்பெயர்ந்தோர் அமைவிடப் பின்னலில் இருத்தப்பட்டனர். அநேகமானோர் படிப்படியாக வவுனியாவுக்கு அருகில் இருந்த மெனிக் பாம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, உச்சக்கட்டத்தில் உலகின் ஆகக் கூடிய இடம்பெயர்ந்தோரை எண்ணிக்கையான சுமார் 250,000 பேர்களை அது உள்ளடக்கியது.

155.
மெனிக் பாம் மற்றும் ஏனைய இடம்பெயர்ந்தோர் அமைவிடங்கள் புறத் தொடர்பற்றவையாக முட்கம்பிகளினால் சூழப்பட்டு அங்கு இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக, வன்னியின் இடம்பெயர்ந்தோர் சனத்தொகை முழுமையாக தடுத்து வைக்கப்பட்டதோடு வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் முடியும் வரை மற்றும் வன்னிப் பிரதேசத்தில் இருந்து போதியளவு கண்ணிவெடிகள் அகற்றப்படும் வரை இடம்பெயர்ந்தோரை தடுத்து வைப்பது அவசியமாகும் என அரசாங்கம் சாதித்தது.

மெனிக் பாமில் பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்ததோடு, முன்னாள் தமிழ் தீவிரவாதக் குழுக்களின் துணைப்படையினர் பெரும்பாலும் இரவு நேரங்களில் தமது முகத்தை மறைக்கும் தொப்பி அணிந்தவர்களாக எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்புடையவர்கள் எனத் தாம் கூறுபவர்களைத் தேர்ந்தெடுத்து அகற்றுவதற்காக மனிதாபிமான அமைப்புக்களின் பார்வைக்குத் தெரியாமல் உலவி வந்தனர்.

156.
மெனிக் பாமில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ தனிமையாக இடம்பெயர்ந்தவர்களுடன் கதைப்பதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் சர்வதேச அமைப்புக்கள் தடுக்கப்பட்டன.ஆரம்பத்தில் ஐ.சி.ஆர்.சி. குறுகிய காலப்பகுதியில் மெனிக்பாமுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், விரைவில் அது நிறுத்தப்பட்டது.

யுத்த வலயத்தில் இருந்து வெளியேறியவர்கள் தம் அனுபவங்களை சர்வதேச முகவர்களுக்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் சொல்வதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்பதை இக்கட்டுப்பாடுகள் குறிப்பிடுவதாயிருந்தன.

ஆண் துணையின்றித் தனியாயிருந்த பெண்கள் மற்றும் தனியாய் இருந்த குழந்தைகள் பாலியல் மற்றும் ஏனைய வன்முறைகளுக்கு உட்படுவதை உள்ளிட்ட இடம்பெயர்ந்தோர் முகாமில் மீறல்களுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளை புற மற்றும் சுயாதீன கண்காணிப்பு இல்லாத நிலை அதிகரித்தது.

157.
மெனிக் பாம் அமைக்கப்படு முன், இடம்பெயர்வதற்கான சர்வதேச அமைப்பு, ஐ.நா. மனித உமைகள் உயர் ஸ்தானிகர், ஐ.நா. சிறுவர் நிதியம் மற்றும் ஏனையவற்றை உள்ளிட்ட சர்வதேச முகவர்கள் முகாம்கள் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச தரங்களை நிறைவேற்றுவதைப் பொறுத்தே மனிதாபிமான உதவி வழங்கப்படும் என்ற நிபந்தனையைத் தங்களுக்குள்ளே கலந்துரையாடினர். தோதான தரங்கள் பற்றி இவ்வாறான பல அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டன.

ஆயினும், பெருந்திரளான இடம்பெயர்ந்தவர்கள் வர ஆரம்பித்ததும், நிபந்தனைகள் பற்றிய பொதுவான நிலைப்பாட்டினை சர்வதேச முகவர்களால் எய்த முடியவில்லை. மெனிக் பாமில் மிகத் தரக் குறைவான நிலைமைகள் நிலவிய போதிலும் பல சர்வதேச முகவர்கள் தொடர்ந்தும் உதவியை வழங்கினர்.

(56)
158.
இடம்பெயர்ந்தோர் மாதக்கணக்காக அல்லது சில சந்தர்ப்பங்களில் பல வருடங்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 2009 டிசம்பர் அளவில், சுமார் 149,000 இடம்பெயர்ந்தோர் விடுவிக்கப்பட்டதோடு, மேலும் 135,000 பேர் முகாம்களில் எஞ்சியிருந்தனர். 2010 செப்டம்பர் அளவில், 242,741 இடம்பெ யர்ந்தவர்களை விடுவித்திருப்பதாகவும் 25,795 பேர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

(ஆ) முகாமில் மனிதத்தன்மை அற்ற நிலைமைகள்

159.
இடம்பெயர்ந்தோருக்கான "நலன்புரிக் கிராமம்' என அரசாங்கம் மெனிக் பாம் இனைக் குறிப்பிட்ட போதிலும், அதற்கென்றே நீர் வளம் எதுவுமின்றி அது நடுக்காட்டில் அமைக்கப்பட்டிருந்தது. 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பெருந்திரளான இடம்பெயர்ந்தோர் வந்ததும், மெனிக் பாமில் இருந்த நிலைவரங்கள் சர்வதேச தரங்களை விட மிகக் குறைவானதாகவே இருந்தன.

இதனால் பொதுமக்கள் மேலதிக தேவையற்ற கஷ்டத்தையும் அவலத்தையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. புதிதாக வந்தவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்ததோடு, பலர் மன அழுத்தத்தினால் தாக்கமுற்றிருந்த போதிலும், சமூக சேவைகள் அமைச்சு மனோதத்துவ ரீதியிலான ஆதரவை வழங்க அனுமதிக்கவில்லை. சில இடம்பெயர்ந்தோர் தற்கொலை செய்து கொண்டனர். அடிப்படை சிகிச்சைக்கான அனுமதிப் பத்திரத்துக்காகக் காத்திருக்கும் போது அல்லது தடுக்க முடிந்த நோய்களினால் சிலர் இறந்தனர்.

160.
முகாம்களில் அதிக நெரிசல் காணப்பட்டதால் சிலர் பாதுகாப்பற்ற முறையில் தம் வாழ்க்கையை மேற்கொள்ள முனைந்தனர்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் உட்பிரவேசித்ததைத் தொடர்ந்து மெனிக் பாமில் உணவு, நீர், வதிவிட மற்றும் சுகாதார வசதிகளுக்குத் தீவிர பற்றாக்குறை நிலவியது.

இருப்பிடங்கள் தரபோலின் ப்ளாஸ்டிக் ஆக இருந்ததனால் பகல் நேரங்களில் சூடு கடுமையாக இருந்தது.

உணவு மற்றும் நீரைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் பல மணி நேரங்கள் அல்லது சில வேளைகளில் நாள் ழுவதும் காத்து நிற்க வேண்டியிருந்தது. உணவு மிகத் தரக் குறைவாக இருந்ததோடு சில சந்தர்ப்பங்களில் அது தட்டுகள் இன்றி விரித்த கைகளில் கொட்டப்பட்டது.

161.
அநேகமான சந்தர்ப்பங்களில் குடும்பங்கள் தம்முடன் உறவுத் தொடர்பற்ற ஏனைய குடும்பங்களுடன் கூடாரங்களில் ஒன்றாக வைக்கப்பட்டனர்.

தம் கணவன்மார் காணாமற் போன அல்லது இறந்த பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் விடயத்தில், அப்படி ஒரே கூடாரத்தில் இருப்பது ஏனைய ஆண்களினால் அவர்கள் துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துகிறது.

போதியளவு மறைவிடம் வழங்கப்படவில்லை என்பதோடு, அவர்கள் மலசல கூடங்களைப் பாவிக்கும் போது அல்லது குளிக்கும் போது படைவீரர்கள் அவர்களைப் பார்த்து அவர்கள் அந்தரங்கத்தில் மற்றும் கௌரவத்தில் தலையிடுவதாக இருந்தது. உணவு, இருப்பிடம் அல்லது முகாம்களில் உதவி பெறுவதற்காக சில பெண்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

162.
மெனிக் பாமில் அடிப்படை நிலைமைகள் மனிதத்தன்மை யற்றவையாக இருந்த அதேவேளையில், வெஸ்டர் யூனியன் (பணமாற்று வசதி) அங்கு திறக்கப்பட்டதோடு, பல்லாயிரக்கணக்கானோர், அவர்களுள் பலர் புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகள் உள்ள எல்.ரி.ரி.ஈ இனர் இராணுவத்தினருக்கு லஞ்சம் வழங்கி முகாம்களில் இருந்து வெளியேற முடிந்தது.

தடுப்பு முகாம்களில் சித்திரவதை; புலிகளின் தலைமை சரணடைய முயன்றது: ஐநா நிபுணர் குழு அறிக்கை (பாகம்) - 09

(57)
(அ)தடுப்புக் காவலில் சித்திரவதை

163.
குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியன மெனிக் பாம் முகாக்குள் அலகுகளைப் பேணி வந்ததோடு கிரமமாக விசாரணைகளையும் நடாத்தின. வைத்தியர்கள், உதவி அரசாங்க அதிபர் மற்றும் ஐ.நா.பணியாட் தொகுதியின் இரு அங்கத்தவர்கள் ஆகியவர்களை உள்ளிட்ட ஏனையவர்கள் எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்பு உண்டு எனக் கருதப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களுள் சிலர் சித்திரவதைக்கு உட்படுத்தவும்பட்டனர்.

விசாரணை முகாமிலிருந்து அடித்தல் மற்றும் அலறல் குரல்களைக் கேட்கக் கூடியதாகவிருந்தது. குறைந்தபட்சம் தடுப்புக் காவலின்போது சித்திரவதை செய்யப்பட்ட ஒன்பது சந்தர்ப்பங்களை ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் பதிவு செய்தது. தடுப்புக்காவலில் இருந்த சிலர் அழைத்துச் செல்லப்பட்ட பின் அவர்கள் திரும்பி வரவில்லை.

3 . எல்.ரி.ரி.ஈ.. எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை விசாரணையின்றித் தடுத்து வைத்தல்

164.
பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் போது, எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை இலங்கை இராணுவத்தினர் பொதுவாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அல்லது அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் பூசா மற்றும் ஓமந்தை ஆகிய இடங்களில் உள்ள வேறு தடுப்பு முகாம்களுக்கு அகற்றினர்.

பல சந்தர்ப்பங்களில், தமது குடும்பத்தினரைத் தடுத்து வைப்பதற்கான அறிவித்தலை இலங்கை இராணுவம் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை என்பதோடு எல்.ரி.ரி.ஈ

எனச் சந்தேகிக்கப்படுபவர்களை இனங்காண்பதற்கு அவர்கள் பிரயோகித்த முறை பற்றியும் தெரிவிக்கவில்லை.

குழுவுக்கு அரசாங்கம் வழங்கிய கணக்கின் படி, 2010 செப்டெம்பரில் இருந்தவாறாக,' ஆரம்பத்தில் சரணடைந்த..' மொத்தம் 11,696 பேர் "பற்றிய தகவல் உள்ளதோடு அவர்கள் நெறிப்படுத்தப்படுகின்றனர் என அரசாங்கம் அறிவித்த போதிலும், இவ்வெண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாதிருப்பதோடு, ஐ.நா., ஐசிஆர்சி அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்கள் பற்றிய சுயாதீன மேற்பார்வையினை மேற்கொள்வதை அரசாங்கம் அனுமதிக்கவில்லை.

யுத்தத்தில் ஈடுபடாதோர் அல்லது இறுதி வாரங்களில் அல்லது நாட்களில் மாத்திரம் சேர்த்துக் கொள்ளப்பட்டோர் ஆகியவர்களை இவ்வெண்ணிக்கை உட்படுத்துகிறது.

அரசாங்கக் கணக்குகளின்படி அவர்களுள் 594 சிறுவர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் சிறுவர்கள் பெரியவர்களுடன் வைக்கப்பட்டிருந்த போதிலும் ஐ.நா. சிறுவர் நிதியம் அவர்களைப் பதிவு செய்தது.

பின்னர் அவர்கள் வேறு சிறுவர் புனர்வாழ்வு மத்திகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆயினும், அவை பெரும்பாலாக நாட்டின் தெற்கில் இருந்ததால் குடும்பத்தினர் அவர்களைச் சென்று பார்ப்பது கஷ்டமாகவிருந்தது.

165.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் எல்.ரி.ரி.ஈ உடன் அவர்களுக்கு இருந்த தொடர் புகள் பற்றி விரிவாக விசாரிக்கப்படுவர்.

பின்னர் அவர்களில் சிலர் புனரமைப்பு ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள "பாதுகாப்பான இடவசதி மற்றும் புனர்வாழ்வு மத்திகளுக்கு' இடமாற்றம் செய்யப்படுவார்கள். அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் 2006 இல் அமைக்கப்பட்ட இவ்வலுவலகம், "புனர்வாழ்வளிப்பதற்காக' சரணடையும் ஒருவரை பாதுகாப்புச் செயலாளன் கட்டளையின் பேல் இரண்டு வருடங்கள் வரை வைத்திருக்கலாம்.

2010 செப்டெம்பரில் குழுவுக்கு அரசாங்கம் வழங்கிய தகவலின் படி, "சுமார் 6,500' முன்னாள் போராளிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர் "குறுகிய கால புனர்வாழ்வுக்கு' அத்துடன், "சுமார் 3,500' பேர் "நீண்டகால புனர்வாழ்வுக்கு' உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, "1,500 க்கும் குறை வானோர்' தீவிர எல்.ரி.ரி.ஈ. இனர் என இனங்காணப்பட்டுள்ளனர்.

(58)
166.
குழுவுக்கு அரசாங்கம் வழங்கிய ஆவணங்களின்படி, "புனர்வாழ்வளிக்கப் பட்ட' 5,809 பேர்கள் "மீளிணைக்கப்பட்டுள்ளார்கள்', அதாவது, 2011 பெப்ரவரி 8 ஆம் திகதியில் இருந்தவாறாக, விடுவிக்கப்பட்டுள்ளதோடு. மேலும் 4,581 பேர் புனரமைப்பு ஆணையாளர் நாயகத்தின் கீழான ஒன்பது பல்வேறு தடுப்பு மத்திகளில் தற்போது "புனர்வாழ்வு அளிக்கப்பட்டு' வருகிறார்கள்.

1,306 எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்கள் தொடர்ந்தும் புறத்தொடர்பற்ற தடுப்பு நிலையங்களில் குற்றவியல் விசாரணை மற்றும் சட்டரீதியிலான நடவடிக்கைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இது குறிக்கிறது.

167.
அரசாங்கத்தின் வெளிப்படையற்ற நிலை காரணமாக வெவ்வேறான "சரணடைந்த' இந்த எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அமைவிடங்களில் உள்ள நிலைமை பற்றி எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

எவ்வித புற அவதானிப்புமின்றி சுமார் இரண்டு வருடங்களாக விசாரணை மற்றும் புலனாய்வு அத்துடன் "புனர்வாழ்வளித்தல்' மேற்கொள்ளப்பட்டு வருவதால், தட்டிக் கேட்க ஆளி ல்லாத நிலையில் எல்.ரி.ரி.ஈ யினர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் கற்பழிப்பு, சித்திரவதை அல்லது காணாமற்போதல் போன்ற மீறல்களுக்கு ஆளாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிக மாகவுள்ளன.

(எ) ஏனைய குற்றச்சாட்டுக்கள்
168.
மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களுக்குப் புறம்பாக, அவை நம்பகரமானவை என குழு தீர்மானிக்க முடியாத வேறு பல குற்றச்சாட்டுக்களும் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் நிலைத்தகவுள்ள பாரதூரமான சுபாவம் காரணமாக அவை புலனாய்வு செய்யப்பட வேண்டும்.

1.கொத்துக் குண்டுகள் அல்லது வெள்ளை பொஸ்பரஸ் பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டு

169.
புதுக்குடியிருப்பினைச் சுற்றிலும் இரண்டாவது யுத்த சூன்ய வலயத்திலும் பொது மக்களுக்கு எதிராக கொத்துக் குண்டுகள் அல்லது வெள்ளை பொஸ்பரஸ் அல்லது ஏனைய இரசாயனப் பொருட்களை இலங்கை அரசாங்கம் பாவித்தது என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இலங்கை அரசாங்கம் இந்த ஆயுதங்களைப் பாவித்ததை நிராகரித்தது, வெள்ளை பொஸ்பரஸைப் பாவித்ததாக எல்.ரி.ரி.ஈ யினைக் குற்றம் சாட்டுகிறது.

.வெள்ளைக் கொடி பற்றிய சம்பவம் 2.
170.
எல்.ரி.ரி.ஈயின் அரசியல் துறை தலைமைத்துவம் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களும் இலங்கை இராணுவத்தினடம் சரணடைந்த போது அவர்கள் மீது கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பல்வேறு அறிக்கைகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

யுத்தத்தின் இறுதி நாட்களில், எல்.ரி.ரி.ஈ யின் அரசியல்துறை தலைவர், நடேசன் மற்றும் புலிகளின் சமாதானச் செயலகத்தின் தலைவர், புலித்தேவன் தொடர்ச்சியாக. பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட பலருடன் சரணடைவது பற்றிக் கதைப்பதற்காகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

அவர்களுடன் சுமார் 300 பொதுமக்கள் இருந்ததாகக் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் நிபந்தனையற்ற சரணடைவுக்கு எல்.ரி.ரி.ஈ யின் அரசியல் தலைமைத்துவம் தயக்கம் காட்டிய போதிலும், தமது இறுதி மறைவிடத்தை இலங்கை இராணுவத்தினர் அண்மித்ததால், நடேசனும் புலித்தேவனும், கேணல் ரமேசும் கூட, நிபந்தனையின்றிச் சரணடைய இணங்கினர்.

இத்தீர்மானம், ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மற்றும் நோர்வே, ஐக்கிய இராஜதானி அத்துடன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அரசாங்கங்கள், ஐசிஆர்சி பிரதிநிதிகள் மற்றும் ஏனை யோருக்கு அறிவிக்கப்பட்டது. நடுவர்கள் ஊடாக மஹிந்த, கோதாபய மற்றும் பசில் ராஜபக்ஷ, முன்னாள் வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன அத்துடன் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அது அறிவிக்கப்பட்டது.

171.
அவர்கள் சரணடைவது ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் பசில் ராஜபக்ஷவும் உறுதிப்பாடு வழங்கினர். இது நடுவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட எல்.ரி.ரி.ஈ தலைவர்களுக்குத் தெவிக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட ஒரு வழியாக வெள்ளைக் கொடி ஒன்றை ஏந்தியவாறு மெதுவாக இராணுவத்தினரை நோக்கி நடக்கு மாறு அவர்கள் பசில் ராஷபக்ஷவினால் அறிவுறுத்தப்பட்டார்கள்.

சரணடையும் இடத்தில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என்ற எல்.ரி.ரி.ஈ யின் கோரிக்கை நிராகக்கப்பட்டது. 2009 மே 18 ஆம் திகதி காலை சுமார் 6.30 மணியளவில் நடேசனும் புலித்தேவனும் தாம் மறைந்திருந்த இடத்தில் இருந்து தமது குடும்பத்தினரை உள்ளிட்ட பெரியதொரு கூட்டத்துடன் 58 ஆவது படைப்பிவு நிலைகொண்டிருந்த பிர தேசத்தை நோக்கி நடக்க முற்பட்டனர்.

இன்னுமொரு கூட்டத்துடன் கேணல் ரமேஷ் பின்னால் வந்தார். சிறிது நேரத்துக்குப் பின்னர், நடேசனும் புலித்தேவனும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என பிபிசி யும் ஏனைய தொலைக்காட்சி நிலையங்களும் அறிவித்தன. இச்சம்பவம் பற்றி பின்னர் அரசாங்கம் பல்வேறுபட்ட விளக்கங்களை வழங்கியது. அவர்கள் கொல்லப்பட் சூழ்நிலைகள் பற்றிய தகவல் அரிதாக உள்ள நிலையில், எல்.ரி.ரி.ஈ தலைமைத்துவம் சரணடைய நாடியிருந்தது என குழு நம்புகிறது.

ஏ.நிகழ்வுகள் பற்றிய அரசாங்கத்தின் கூற்று

172.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கூற்றுக்கு மிகவும் மாற்றமானதொரு கண்ணோட்ட த்தை மேற்படி நம்பகமான குற்றச்சாட்டுகள் வழங்குகின்றன.

"பூஜ்ய பொதுமக்கள் பாதிப்பைக்' கொண்டதொரு "மனிதாபிமான மீட்டு நடவடிக்கையை' அது மேற்கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது. 2010 மே 7 ஆம் திகதி, உரையொன்றின் போது பாதுகாப்புச் செயலாளர், யுத்தத்தில் இராணுவ நடவடிக்கைக் கட்டளைகளுள் பூஜ்ய பாதிப்புக் கோட்பாடு உள்ளடக்கப்பட்டது உலகில் இதுவே முதற்தடவையாகும் எனக் குறிப்பிட்டார். 2010 ஜூன் 18ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ ஆற்றிய உரையொன்றில், "சாதாரண பொது மக்களுக்கு எதிராக ஒரு வேட்டேனும் தீர்க்கப்படுவதற்கு நாம் இடமளிக்கவில்லை' எனத் தெவித்தார்.

2010 மே 18ஆம் திகதியன்று யுத்த முடிவின் முதலாவது ஆண்டு நிறைவன்று, பின்வருமாறு பாதுகாப்புச் செயலாளர் நினைவூட்டினார்: நாம் "யுத்த சூன்ய வலயங்களை' பிரகட னப்படுத்தினோம். பொதுமக்கள் வாழும் யுத்த வலயங்களை எதிர்கொண்டபோது வான், பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொள்வதிலிருந்தும் நாமாகவே தவிர்ந்து கொண்டோம். இது பற்றி எமது கள கட்டளைத் தளபதிகள் மிகவும் கவனமாக இருந்ததோடு அவர்கள் தம்மை அநேகமான சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். மேலும் யுத்தத்தின் எல்லாக் கட்டங்களிலும் உலக உணவுத் திட்டம், செஞ் சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. ஊடாக சிக்குண்ட பொதுமக்களுக்கான உணவு மற்றும் மருந்து வகைகள் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

(60)
173.
2009 மார்ச் 2ஆம் திகதி, அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித வளங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சியில்: "கனரக ஆயுதங்களைப் பாவிப்பதற்கான எந்தவொரு நியாயமும் இல்லை..மற்றும் உண்மையிலேயே சுமார் 10 நாட்களுக்கு முன்னர் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என ஆயுதப் படைகள் தெளிவான தீர்மானமொன்றை எடுத்தனர். நீங்கள் அறிந்திருப்பீர்கள், எல்.ரி.ரி.ஈ. சுமார் 48 சதுர கிலோமீற்றர் சிறிய பரப்பொன்றுக்குள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால், கனரக ஆயுதங்களை நாம் பாவிக்க முடியாது' எனக் குறிப்பிட்டார்.

ஆயினும், யுத்தம் முடியும் வரை 81மிமீ வரையிலான மோட்டார்கள் பிரயோகிக்கப் பட்டதாகக் கூறிய ஏனைய அரசாங்க அதிகாரிகள், அவை கனரக ஆயுதங்கள் அல்ல என வாதிட்டனர்.

174.
2009 ஏப்ரல் 06 ஆம் திகதி, "பணயக் கைதிகளைக் காப்பாற்றும் உலகின் மிகப் பெரிய நடவடிக்கையில்' இலங்கை இராணுவம் ஈடுபட்டிருந்தது என லெப் டினன்ட ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் ஒப்சேவர் பத்திரிகைக்குத் தெரிவித்தார். 2009 மே 18 ஆம் திகதி, "இரத்தக் களறியொன்று ஏற்படும்' என்ற எச்சரிக்கைகள் பிழையென நிரூபிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க தெவித்தார்.

யுத்த வலயத்தில் இருந்து வரும் இடம் பெயர்ந்தோர் "நலன்புரி நிலையங்களில்' வரவேற்கப்பட்டார்கள் எனவும் முன்னாள் எல்.ரி.ரி.ஈ இனர் "மீட்பு' செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் "புனர் வாழ்வு' பற்றிக் கவனம் செலுத்தப்படுவதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

175.
கிடைக்கக் கூடிய சகல தகவல்களையும் கடுமையாக மீளாய்வு செய்து மதிப்பீடு செய்த பின்னர், நிகழ்வுகள் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கூற்றை குழு ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

ஐ. முடிவுகள்

176.
எனவே, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றிய குழுவின் விளக்கம் இலங்கை அரசாங்கம் புரிந்துள்ள ஐந்து அடிப்படை வகுதிகளைச் சேர்ந்த பாரிய நிலைத்தகவுள்ள மீறல்களை வெளிப்படுத்துகிறது:

(அ) பரவலான செல்வீச்சினால் பொதுமக்கள் இறப்பு இலங்கை இராணுவம் வன்னியில் அதன் இராணுவ நவடிக்கையை, அதிக அளவில் பொதுமக்களுக்குச் சேதம் ஏற்படும் விதத்தில், சில சமயங்களில் பல்குழல் ரொக்கட் ஏவும் கருவிகளை மற்றும் பீரங்கிகளைக் கொண்ட பாரிய மற்றும் பரவலான செல்தாக்குதலைப் பிரயோகித்து முன்னெடுத்தது. பொதுமக்கள் ஒன்று திரள்வதற்காக அவர்களை ஊக்குவித்து மற்றும் கன ரக ஆயுதங்கள் பாவிக்கப்பட மாட்டாது என அது அறிவித்த பின் மூன்று தொடர்ச்சியான யுத்த சூன்ய வலயங்கள் மீது ஷெல் தாக்குதலை அது மேற்கொண்டது. ஆளில்லாத விமானங்களை உள்ளிட்ட இராணுவத்தினர் உளவு அமைப்புக்கள் மற்றும் ஐ.நா. அத்துடன் ஐசிஆர்சி போன்ற புற பாத்திரங் களின் அறிவிப்புக்கள் மூலம் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றி அறிந்திருந்த போதிலும், ஷெல் தாக்குதலை அது மேற்கொண்டது.

பொதுமக்களிடையான அதிக உயிர்ச்சேதம் காயம் அரசாங்கத்தின் ஷெல் வீச்சு காரணமாகவே யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் நேர்ந்தன. யுத்த வலயத்தில் இருந்து சர்வதேச அமைப்புக்களை ஒதுக்கி வைப்பது மூலம் புற அழுத்தத்தையும் மற்றும் அவதானிப்பினையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முனைந்தது.

(61)
(ஆ)ஆஸ்பத்திரிகள் மற்றும் ஏனைய மனிதாபிமான நிலைகள் மீதான செல் தாக்குதல்:

போர் முனைகளில் அரசாங்கம் திட்டமிட்ட விதத்தில் ஆஸ்பத்திரிகளை, சிலவற்றை மீண்டும் மீண்டும், செல்லடித்துக் தாக்கியது. ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த காயமடைந்த சில பொதுமக்கள் செல் வீச்சுக் காரணமாக மீண்டும் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.

வன்னியில் இருந்த அனைத்து ஆஸ்பத்திரிகளும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியதோடு அவற்றில் இருந்து அகல வேண்டியிருந்தது. அவற்றின் அமைவிடயங்களை அரசாங்கம் நன்க றிந்திருந்த நிலையிலும் இவ்வாறு நேர்ந்தது.

(இ) மனிதாபிமான உதவியை மறுத்தல்.

உணவு மற்றும் அடிப்படை மருந்து வகைகள், குறிப்பாக காயங்களுக்கான மருந்து வகைகள் போன்ற மனிதாபிமான உதவியை யுத்த வலயத்தில் இருந்தவர்களுக்கு அரசாங்கம் திட்டமிட்டவாறு கிடைக்கச் செய்வதைத் தடுத்தது. இதற்காக, யுத்த வலயத்தில் எஞ்சியிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது.

குறிப்பாக சத்திர சிகிச்சைக்கான பொருட்களை வழங்காமை பொதுமக்களின் கஷ்டங்களை அதிகரித்ததோடு, மரணிப்பவர்களின் எண்ணிக்கையையும் அது அதிகரித்தது.

(ஈ) பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தில் உயிர் தப்பியவர்களின் மீதான மனித உரிமைகள் மீறல்.

அதன் செயற்பாடுகளை "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை' எனக் குறிப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டோரும் யுத்தத்தில் உயிர் பிழைத்தவர்களும் யுத்த வலயத்தை விட்டகன்றபின், அரசாங்கம் அவர்களை மேலும் கஷ்டங்களுக்குள்ளாக்கியது.

பாரிய நெரிசல் மோசமான நிலைமைகளைத் தோற்றுவித்ததோடு, அது தடுத்து வைக்கப்பட்டவர்களின் அடிப்படை சக மற்றும் பொருளாதார உமைகளில் பிளவினை ஏற்படுத்தி தேவையின்றி உயிர்கள் பலியாவதற்கு வழிகோலியது.

சகல இடம்பெயர்ந்தவர்கள் புறத் தொடர்பற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதோடு, மனிதாபிமான அமைப்புக்களுடன் தனியாகக் கதைப்பதற்கு அவர்கள் அனுமதி க்கப்படவில்லை. முகாம்களில் மற்றும் தடுப்புக் காவலில் பெண்கள் மேலும் இம்சைக்குட்படுத்தப்பட்டார்கள்.

எல்.ரி.ரி.ஈ இனைப் பிரித்தெடுப்பது எந்தவித வெளிப்படையோ புறக் கண்காணிப்போ இன்றி நடைபெற்றது. சந்தேகிக்கப்பட்ட சில எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதோடு ஏனையோர் மாயமானார்கள்.

நிர்வாணமான பெண் உறுப்பினர் புகைப் படங்கள் மற்றும் படச்சுருள்கள் அவர்கள் கற்பழிக்கப்பட்டதை அல்லது பாலியல்ரீதியில் தாக்கப்பட்டதைக் குறிப்பதாகவுள்ளன.

விசாரணையின் போதான சித்திரவதை தொடர்ந்தது. எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்கள் வெவ்வேறு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்கள், ஐசிஆர்சி, இலங்கை மனித உமைகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய முகவர்களின் கண்காணிப்பின்றி, வருடக்கணக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

(உ) வெள்ளை வேன்களை உள்ளிட்ட கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் போன்ற பல்வகையான அச்சுறுத் தல்கள் மூலம் ஊடகங்களையும் ஏனைய விமர்சகர்களையும் பயறுத்தி மௌனம் சாதிக்க வைக்க அரசாங்கம் முனைந்தது. .

177.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றிய குழுவின் விளக்கம் எல்.ரி.ரி.ஈ புரிந்துள்ள ஆறு அடிப்படை வகுதிகளைச் சேர்ந்த பாரிய நிலைத்தகவுள்ள மீறல்களை வெளிப்படுத்துகிறது:

(62)
(அ) தாக்குதலைத் தடுப்பதற்காக பொதுமக்களைப் பொறியாகப் பாவித்தல்.

யுத்த களத்தில் நிலவிய பாய ஆபத்துக்கள் மற்றும் பயங்கரமான நிலைமைகளைக் கவ னியாது, எல்.ரி.ரி.ஈ பொதுமக்களை வெளியேற அனுமதிக்காது, அவர்களைப் பணயக் கைதிகளாகவும் சில சமயங்களில் அவர்களுக்கும் முன்னேறி வரும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையிலான தாக்குதலைத் தடுப்பதற்கான பொறியாகவும் பிரயோகித்தது.

எல்.ரி.ரி.ஈ அதன் தலைமைத்துவத்தைப் பாதுகாக்க போரிட்டபோது அது பொதுமக்களைத் தேவையற்றவர்கள் என தொடர்ச்சியாக பலிகொடுத்தது. பொதுமக்களை வெளியேற விடாது எல்.ரி.ரி.ஈ தடுத்த காரணத்தினால் யுத்தத்தில் மொத்தம் மடிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது.

(ஆ)எல்ஈ கட்டுப்பாட்டில் இருந்து தப்ப முனைந்த பொதுமக்களை கொலை செய்தல்.

2009 பெப்ரவரி முதல், யுத்த வலயத்தில் இருந்து தப்ப முயற்சிக்கும் பொதுமக்களைச் சுடும் கொள்கையினை எல்.ரி.ரி.ஈ கடைப்பிடித்தது. இதனால் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகத்தது. பொதுமக்கள் தப்பிச் செல்லும் இடங்கள் மீது அது உறுப்பினர்களை நிறுத்தி நீரில் தடுமாறி அல்லது கண்ணி வெடிகள் நிறைந்த இடங்களைத் தாண்டி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கிச் செல்லத் தடுமாறிக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. அப்போது சிலர் நீரில் மூழ்கி மரணித்தனர்.

(இ) பொதுமக்களிடையே இருந்து இராணுவ உபகரணங்களைப் பாவித்தல்.

இடம் பெயர்ந்த மக்களுக்கிடையே யுத்த சூன்ய வலயத்தில் இருந்து எல்.ரி.ரி.ஈ எறிகுண்டுகளைச் செலுத்தியதோடு, இடம் பெயர்ந்தோர் இருக்கும் இடங்களில் இருந்து அல்லது ஆஸ்பத்திரிகள் போன்ற பொது இடங்களில் இருந்து துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டனர் அல்லது இராணுவ உபகரணங்களைக் களஞ்சியப்படுத்தி வைத்தனர்.

இலங்கை இராணுவம் பதிலடி கொடுக்கும் என்பதையும் அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் அறிந்திருந்தும் அவர்கள் அவ்வாறு செய்தனர். சில சமயங்களில் பொதுமக்களிடையே இருந்து சுட்டுவிட்டு பொதுமக்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து விரைவாக அகன்று விடுவார்கள்.

(ஈ)சிறுவர்களைக் கட்டாயமாக அணிதிரட்டல்.

யுத்தம் நடைபெற்ற காலம் முழுவதிலும் கட்டாயமாக ஆட்சேர்க்கும் கொள்கையினை எல்.ரி.ரி.ஈ கடைப்பிடித்த போதிலும், இறுதிக் கட்டங்களின் போது 14 வயதுச் சிறுவர்கள் உள்ளிட்ட சகல வயதுக்குட்பட்டவர்களையும் ஆட்சேர்ப்பதில் அது தீவிரமாக ஈடுபட்டது.

ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பிள்ளைக்கு மேல் அது ஆட்சேர்த்ததோடு, சாவதற்கென்ற தம்பிள்ளைகளை எடுத்துச் செல்வதைத் தடுக்க முனைந்த உறவுகளைத் அவர்கள் தாக்கி னர். இக் கொள்கை மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் எல்.ரி.ரி.ஈ எதிர்நோக்கி நம்பிக்கை அற்ற நிலைமையிலும் செயற்படுத்தப்பட்டது.

யுத்த வலயத்துக்கு வெளியேயும் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள்: ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை (பாகம்) - 10

(63)
(உ) வலுக்கட்டாய உழைப்பு.

தனது சொந்தப் பாதுகாப்புக்காக அகழிகளைத் தோண்டுதல் மற்றும் அரண்களை அமைப்பது மூலம் தம் பாதுகாப்பு அணிகளை உறுதிப்படுத்துவதற்காக எல்.ரி.ரி.ஈ பொதுமக்களை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதோடு, அப்படிச் செய்வதன் மூலம் போராளிகள் மற்றும் பொதுமக்களிடையே உள்ள வேறுபாட்டினை தெளிவற்றதாக்கினர். இதனால் பொதுமக்களை ஷெல் தாக்குதலுக்கான மேலதிக ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.

(ஊ) தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைக் கொலை செய்தல்.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, யுத்த வலயத்துக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் அதன் கொள்கையை எல்ஈ தொடர்ந்தும் கடைப்பிடித்தது. யுத்தத்தின் முந்திய கட்டங்களுடன் ஒப்பீட்டளவில், அத்தகைய தாக்குதல்களை நடத்து வதற்கான அதன் திறன் குறைந்திருந்த போதிலும், 2009 பெப்ரவ 09 ஆம் திகதி முல்லைத்தீவு பிரிக்கும் மத்திய நிலையத்தில் 30 பேர்களைக் கொன்ற தற்கொலைத் தாக்குதல், 2009 மார்ச் 10ஆம் திகதி சுமார் 15 பேர்களைக் கொன்ற அமைச்சர் மஹிந்த விஜேசேகர மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஆகியவற்றை உள்ளிட்ட பல தாக்குதல்களை அது யுத்த வலயத்துக்கு வெளியே மேற்கொண்டது.

ஐங. குற்றச்சாட்டுக்களை சட்டதியாக சீர்தூக்கிப் பார்த்தல்

178.
அத்தியாயம் ஐஐஐ இல் விளக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நம்பகமானவை என்ற குழுவின் தீர்மானத்தைக் கருத்திற்கொண்டு, அக்குற்றச்சாட்டுக்களின் சட்ட ரீதியிலான தகைமைகளை அது இப்போது ஆராயும்.

இந்த மதிப்பீட்டை அதன் ஆணை தேவைப்படுத்துகிறது. மேலே குற்றம் சாட்டப்பட்ட நிகழ்வுகள் சட்டத்தை மீறும் குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களா மற்றும், அவை நிகழ்ந்தன என பின்னர் நிரூபிக்கப்பட்டால், மீறல்களா என்ற கேள்விக்கு இப்படியாக இக்குழு கவனம் செலுத்துகிறது.

மேலும், தற்போதைய மதிப்பீடு குற்றச் சாட்டுக்களைச் சட்டப்படியாக வகைப் படுத்தலுக்கு மட்டுப்படுகிறது. ஏதுமொரு குற்றச்சாட்டு சர்வதேச சட்டத்தை மீறுவதாக இல்லை என்ற குழுவின் கருத்து அதன் பின்னணியில் உள்ள நடவடிக்கையை அது அனுமதிக்கிறது என்பதாகாது. அத்தியாயம் ஐஐஐ இன் இறுதியில் இனங்காணப்பட்ட குற்றச்சாட்டுக்களின் வகுதிகளை குழு சீர்தூக்கிப் பார்க்கிறது.

அ. பொருத்தமான சட்டம்

179.
சர்வதேச மனிதாபினமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உமைகள் சட்டம் ஆகிய இரண்டினதும் குற்றஞ் சாட்டப்பட்ட மீறல்களை ஆராய்வதை குழுவின் ஆணை தேவைப்படுத்துகிறது.

இலங்கையில் போன்ற நீண்ட காலயுத்தம் ஒன்றின்போது சர்வதேச மனிதாபிமான சட்டம் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஏற்புடைத்தாகும் என்ற அடிப்படை மற்றும் தர்க்க ரீதியில் நெடுங்காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேசச் சட்டம் ஆகியவற்றின் அடிப் படையில் குழு ஆய்வுகளை மேற்கொள்கிறது.

180.
குழுவின் தேவைகளுக்காக, சர்வ தேச மனிதாபிமான மற்றும் மனித உமை கள் சட்டம் ஆகியவற்றை ழுமையாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றின் முக்கிய விதிறைகளை கலந்தாராய்தல் போதுமானதாகும்.

மேலும், சம்பந்தப்படுத்தப்பட்ட மனிதா பிமான மற்றும் மனித உமைகள் சட்டத் தின் விதிறைகள் நாடுகள், சர்வதேச அமைப்பக்கள், நீதிமன்றங்கள், நீதித்துறை போன்ற கண்காணிப்பு அமைப்புக்கள் அத்துடன் ஏனைய நிறுவனங்களால் கணி சமான அளவு விளக்கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

(64)

1. சர்வதேச மனிதாபிமான சட்டம் 181. இப்போர் நிலைவரம் தெளிவாக உள்நாட்டு ஆயுதந் தாங்கிய மோதலொன்றின் நிலையை அடைந்திருந்ததால், அதாவது, அரசாங்கத்துக்கும் அமைப்பு உருவிலான ஆயுதக் குழுக்களுக்கும் இடையே நீண்டகால வன்றை சம்பந்தப்பட்டது, சர்வதேச மனிதாபிமான சட்டம் ஏற்புடைத் தாகிறது "நாடுகளுக்கு இடையே அல்லது அரசாங்கம் மற்றும் அமைப்பிலான ஆயுதக் குழுக்களிடையே அல்லது நாட்டுக்குள் அத்தகைய குழுக்களுக்கிடையே நீண்ட கால ஆயுதந்தாங்கிய வன்முறை தீர்வுக்கான வழிமுறையாக நாடப்பட்டால்' ஆயுதந்தாங்கிய யுத்தம் ஒன்று உண்டு, என்பது முன்னாள் யூகொஸ்லாவியாவுக் கான சர்வதேச குற்றவியல் குழுவின் கூற்றாகும்.

குழு ஆராய்ந்த காலப்பகுதியில் இலங் கையில் உள்நாட்டு ஆயுத மோதல் ஒன்று அதற்கான தீவிரத்தன்மையுடன் மேற் கொள்ளப்பட்டது என்பதில் சந்தேக மில்லை அதன் விளைவாக, அரசாங்கம் எல்ஈ யும் இம்மோதலை நடத்திய விதத்தை நிர்ணயிக்கும் சட்டம் சர்வதேச மனிதாபிமான சட்டமாகும்.

182.
1949 ஆம் ஆண்டின் நான்கு ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு இலங்கை ஒரு தரப்பாகும்; சர்வதேசம் சாராத யுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் (உடன்படிக்கை நிபந்தனை ஐஐ) ஜெனீவா உடன்படிக்கைகளுக்கான 1977 ஆம் ஆண்டின் மேலதிக நிபந்தனை களுக்கு அது தரப்பினரல்ல.

எனவே, மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடப்பாடுகள் நான்கு ஜெனீவா உடன்படிக்கைகளின் பொதுவான உறுப்புரை 3 இல் வழங்கப்பட்டுள்ளனவாகும்.

பொதுவான உறுப்புரை 3 இன் முக்கிய ஏற்பாடுகளை மேற்கோள் காட்டுவது பொருத்தமாகும்.

(1) ஆயுதங்களைக் களைந்த அல்லது நோயினால் காயங்களினால், தடுத்து வைக்கப்படுவதினால் அல்லது வேறு கார ணங்களுக்காக தொடர்ந்தும் பங்கேற்க முடியாத படை வீரர்களை உள்ளிட்ட எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள், சாதி, நிற, சமய, ஆண் பெண் பாகுபாடு, பிறப்பு அல்லது செல்வம் அல்லது வேறு ஏதே னும் அது போன்ற காரணங்களுக்காக எந்தவொரு வேற்றுமையும் காட்டப்படாது, சகல சந்தர்ப்பங்களிலும் கருணையுடன் நடாத்தப்பட வேண்டும்.

இதற்காக, மேற்சொல்லப்பட்டவர்கள் தொடர்பில் பின்வரும் நடவடிக்கைகள் எந்தவொரு நேரத்திலும் மற்றும் எந்த வொரு இடத்திலும் தடைசெய்யப்பட் டுள்ளதோடு தொடர்ந்தும் அப்படியே இருக்கும்.

(அ) குறிப்பாக சகல விதமான கொலைகள், உறுப்பழிவு, கொடூரமாக நடாத்தப் படுதல் மற்றும் சித்திரவதை போன்ற உயிருக்கும் ஆளுக்கும் எதிரான வன்முறை (ஆ) பணயக் கைதிகளாகப் பிடித்தல் (இ) குறிப்பாக அவமானப்படுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் விதத்தில் நடத் துவதைக் கொண்ட சொந்த கௌரவத் துக்குப் பங்கம் விளைவித்தல். . .

(2) காயமடைந்தோரும் நோயாளிகளும் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

(65)

183.
சர்வதேச சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் சம்பிரதாயம் பற்றிய கருத்தை நிர்ணயிப்பதற்காக, அரச செயற் பாடு மற்றும் மனப்பான்மை ஆகியவற்றை ழுமையாக பகுப்பாய்வு செய்யும் ஐசிஆர்சி இன் ஆய்வான, கஸ்டம இன்டர்நெஷனல் ஹூமனிடேயன் லோ (2005) அத்துடன் சர்வதேச மற்றும் தேசிய சட்டத்துறை தீர்மானங்கள் மற்றும் சர்வதேச குற்றவியல் குழுக்களின் சட்டம் மற்றும் சட்ட ஆய்வுத்துறை ஆகியவற்றை உள்ளிட்ட பல்வேறு மூலவளங்களில் குழு தங்கியிருந்தது.

2. சர்வதேச மனித உமைகள் சட்டம் 184. அநேகமான நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளபடியும் ஆக்கிரமிப்புச் செய் யப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்பில் மதில் ஒன்றை கட்டுவது தொடர்பான சட்ட பின் விளைவுகள் என்ற 2004 ஆம் ஆண்டின் சர்வதேச நீதி மன்றத்தின் ஆலோசனைக் கருத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவாறும் ஆயுதமேந்திய மோதல் நிலைமைகளில் மனித உமைகள் சட்டம் ஏற்புடைத் தாகிறது.

கொங்கோ நிலப்பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆயுதந் தாங்கிய நடவடிக் கைகள் பற்றி 2005 ஆம் ஆண்டில் வழங் கப்பட்ட தீர்ப்பில் இதே நியாயத்தைப் பிரயோகித்து ஆயுதந்தாங்கிய மோதலின் போது சிவில் மற்றும் அரசியல் உமைகள் பற்றிய சர்வதேச நடைறை மரபினை உகண்டா மீறியுள்ளது எனக் கண்டது.

185.
ஆயுதமேந்திய மோதலுடன் சம் பந்தப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான சட் டத்தின் விதிகள் மீது குழு அதன் கவன த்தை ஈடுபடுத்தி, அவற்றுள் பல மனித உரிமைகள் மீறல்களுக்குச் சமமாகிறது என்பதை இனங்காண்கிறது. 2009 மே 19 ஆம் திகதி யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மனித உரிமைகள் சட்டம் தோ தான ஒரே சட்டத்தொகுப்பாக ஆகியுள் ளது.

இவ்வாறாக, யுத்தத்தை நடாத்துவதற் குப் புறம்பான மனித உரிமைகள் மீறல்கள் பற்றி மாத்திரமே குழு நடவடிக்கை எடுக்கிறது.

186.
சிவில், கலாசார, பொருளாதார, அரசியல் மற்றும் சக உரிமைகள் விவ காரங்கள் சம்பந்தப்பட்ட அடிப்படை சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக் கைகள் மற்றும் சித்திரவதையைத் தடை செய்யும் அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன் படிக்கைகள் ஆகியவற்றுக்கு இலங்கை ஒரு தரப்பாக உள்ளது.

ஐசிசிபிஆர் உடன்படிக்கையின் 4 ஆம் உறுப்புரையின் கீழான சில ஏற்பாடுகளைத் தள்ளுபடி செய்வதாக இலங்கை 2000 மே 20 ஆம் திகதி செயலாளர் நாயகத்துக்கு அறிவித்ததோடு, 2010 யூன் 4ஆம் திகதி, கைது செய்தல் மற்றும் தடுத்து வைத்தல் அத்துடன் வழக்கைத் துரிதப்படுத்தல் ஆகிய உய செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட உறுப்புரை 9(3) இனைத் தவிர்ந்த உடன் படிக்கையின் எல்லா ஏற்பாடுகளில் இருந்து நீங்கிக் கொள்வதாக செயலாளர் நாயகத்துக்கு இலங்கை அறிவித்தது.

187.
தள்ளுபடி செய்வது சட்டப்படி செல்லுடியாகுமா என்பது பற்றி நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற் கொண்டு குழு ஐசிசிபிஆர் இன் பொருத்த மான சகல ஏற்பாடுகளையும் பின்வருமாறு ஆராய்கிறது.

(66)

188.
எல்ஈ யினை பொறுத்தவரை யில், நாடல்லாத பாத்திரங்கள் விதிமுறைக்கேற்ப மனித உரிமைகள் உடன்படிக்கையொன்றுக்கான தரப்பினராக முடியாதபோதிலும், நாடொன்றின் இடப்பரப்பினுள் நடைமுறையிலான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் நாடல்லாத குழுக்கள் அப்பிரதேசத்தில் மனிதர்களின் அடிப்படை மனித உமைகளை மதிக்க வேண் டும் என்பது இப்போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதொன்றாகும்.

பாதுகாப்புச் சபையை உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் பல்வேறு அமைப்புக்கள் அத்தகைய பாத்திரங்கள் மனித உரிமைகள் சட்டத்தை மதிக்க வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளன. சர்வதேச பாத்திரங்களுக்கிடையே இவ்விடயம் பற்றிய கருத்து முரண்பாடுகள் உள்ளன என்பதை குழு இனங்கண்ட போதிலும், குறைந்த பட்சம், உயிர் வாழ்வதற்கான உரிமை மற்றும் பௌதிகப் பாதுகாப்பு மக்களின் முழுமையான தன்மை அத்துடன் சித்திரவதை மற்றும் கொடூரத் தன்மை, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவாக நடத்துதல் மற்றும் அத்தகைய தண்டனை ஆகியவற்றிலிருந்து விடு தலை ஆகியவற்றை உள்ளிட்ட அநேக மான மனித உரிமைகளை அதன் அதிகாரத்துக்குள் இருக்கும் மக்களுக்கு உறுதிப்படுத்த எல்ஈ கடமைப்பட்டுள்ளது என்ற கருத்தை குழு கொண்டுள்ளது.

ஆ, பொருத்தமற்ற போர் நடவடிக்கை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் 189. இந்த யுத்தத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் பகிரங்கமாக வெளியிட்ட குறிக்கோள்களோ (அரசாங் கத்தைப் பொறுத்தவரை பயங்கரவாதத்துக்கு எதிராகச் போர்தொடுத்தல் மற்றும் எல்ஈ இனைப் பொறுத்த வரை தனி நாட்டுக்காகப் போர் புரிதல்) இரு தரப் பினரும் கடைப்பிடித்த நடைறைகளின் பொருத்தமற்ற தன்மையோ தரப்பினருக்கு சர்வதேச மனிதாபிமான சட்டம் ஏற்றுடைத்தாகுவதில் தாக்கத்தை ஏற்படுத் தாது. தனது தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காகவும் பயங்கரவாதத்தில் ஈடுபடக்கூடிய கிளர்ச்சியாளர்களை உள்ளிட்ட, ஆயுதந்தாங்கிய தாக்குதல்களில் இருந்து அதனைப் பாதுகாத்துக் கொள்ளவும் சர்வதேச சட்டத்தின் கீழ் நாடொன் றுக்கு உரிமை உண்டு.

அந்த நோக்கங்களை அடைவதற்கு எந்த முறையையாவது பயன்படுத்துவதை அந்நோக்கங்கள் நியாயப்படுத்தாது அத் தகைய சட்டபூர்வமான தேவைகளுக்கான சகல நடவடிக்கைகளும் சர்வதேச சட்டத் தின் தேவைப்படுத்தல்களுக்கு இயைவாக இருத்தல் வேண்டும்.

190.
இவ்வாறாக, சர்வதேச மனிதாபி மான சட்டம் எல்ஈ இனைப் போன்றதொரு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் நாடு களின் நியாயபூர்வமான கவலைகளை மதிக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக, சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு, அதுவும் சர்வதேச சட்டத்துக்கு அந்த யுத்தம் அப்பாற்பட்டது என கடந்த பல வருடங்களாக இலங்கையில் சிவில் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் விடுத்த அறிக்கைகள் பிழையானதாகும். மேலும், ஒரு தரப்பினன் மீறல்கள், பொதுவான நியதியின்படி, மற்றத் தரப்பினர் சட்டத்தின் கீழான அதன் கடப்பாடுகளை இடைநிறுத்துவதற்கு அனுமதியளிக்காது என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத் தின் அடிப்படையான நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதும் வாத மூலக் கூற்று மாகும்.

(67)

இ. சட்ட ரீதியிலான பொறுப்பு வகைகள் 191. குற்றச்சாட்டுக்களின் சட்டபூர்வ மான சுபாவத்தை ஆராய்வதில், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் கடப்பாடுகளை விதிக்கும் பல்வேறு குழுக்களையும் அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களுக்கு பொறுப்பு யார் என்பதையும் குழு கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

மூன்று வகையான பொறுப்புக்களை குழு கவனத்திற் கொள்கிறது. அரசின் பொறுப்பைப் பொறுத்தவரை, குற்றஞ் சாட்டப்பட்ட மீறல்கள் உண்மையெனக் கண்டறியப்பட்டால், அவற்றுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பா என்ப தாகும். சர்வதேசச் சட்டத்தின் கீழ், இல ங்கை அரசின் செயல்களுக்கு மாத்திரம் அரசின் பொறுப்பு தோதானதாகும்.

அரசின் அறிவுறுத்தல்களுக்கேற்ப அல்லது அதனால் பணிக்கப்பட்டு அல்லது கட்டுப்படுத்தப்பட்டு நாடு சாராத பாத்திரங்களின், அதாவது துணைப் படைக் குழுக்கள் அல்லது தனிப் பிரஜைகளின் நடவடிக்கைகளுக்கு அரசு பொறுப்பாகும்.

சர்வதேச மனிதாபிமான சட்டம் இவ் விடயத்தில் எல்ஈ இனை உள்ளிட்ட நாடல்லாத ஆயுதக் குழுக்கள் மீது கடப் பாடுகள் விதிக்கிறது என்பதை இனங் காணும் மனவுருவாக அமைப்பிலான பொறுப்பு உள்ளது.

ஈ. இலங்கை அரசாங்கத்தின் குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்கள் 192. இலங்கை அரசாங்கத்தின் நட வடிக்கை தொடர்பாக ஐந்து வகையான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை அத்தி யாயம் ஐஐஐ இனங்காண்கிறது. சட்டப்படி யான மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டின் ஒவ்வொரு வகுதி பற்றிய குழுவின் மதிப் பீட்டினை இவ்வத்தியாயம் வழங்குகிறது.

1. பரவலான செல் தாக்குதல் லம் பொதுமக்களை கொலை செய்தல் (அ) ஜெனீவா உடன்படிக்கைகளின் பொதுவான உறுப்புரை 3.

193.
பொது உறுப்புரை 3 இன் பந்தி (1) உட்பந்தி (அ) வின் படி, இலங்கை இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தன மான ஷெல் வீச்சு காரணமாக பொது மக்கள் கொல்லப்பட்டதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள்.

மூன்று யுத்த சூன்ய வலயங்கள் மீதான தாக்குதல்களை இது உள்ளடக்குகிறது.

கண்மூடித்தனமாகச் ஷெல் வீச்சு கொலை க்கு நிகராகுமா என்பது தொடர்பாக, "பீரங்கித் தாக்குதல் போன்ற தாக்குல் ஒன்றுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டு.

அதன் விளைவாக பொது மக்கள் மரணித்தால், அத்தகைய தாக்குதல்களை நடாத்துபவர்கள் அத்தகைய தாக்குதல்கள் மரணத்தை விளைவிக்கக்கூடும் என்பதை அறிந்திருந்தால், அத்தகைய மரணங் களை கொலை என வகைப்படுத்தப் படலாம்' என்பதாகச் சர்வதேச சட்ட ஆய்வுத்துறை ஏற்றுக்கொள்கிறது.

(ஆ) போராளிகள் மற்றும் பொது மக்கள் ஆகியவர்களுக்கிடையிலான வேறுபாட்டுக்கான தேவை 194. சர்வதேச மனிதாபிமான சட்டத் தின் படி, "மோதலில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சகல சந்தர்ப்பங்களிலும் பொது மக்கள் மற்றும் போராளிகள் ஆகியவர்களை வெவ்வேறாக பிரித்தறிய வேண்டும். போராளிகளை நோக்கி மாத்திரமே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என் பதோடு பொதுமக்களை நோக்கி மேற்கொள்ளப்படலாகாது' (விதி 1, ஐசிஆர்சி ஆய்வு).

(68)

195.
பிரித்தறிவதின் அடிப்படைக் கோட்பாட்டை இலங்கை அரசாங்கம் மதிக்கவில்லை என்பதை நம்பத்தகுந்த குற்றாசட்சாட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

வன்னியில் மேற்கொள்ளப்பட்ட அதன் இராணுவ நடவடிக்கைகள் பூஜ்ய பொதுமக்கள் தாக்கத்தைக் கொண்டிருந்தன என அரசாங்கம் கூறிய போதிலும், ஆயிரக்கணக்கான பொது மக்கள் காயமடைந்தும் மரணித்தும் உள் ளார்கள் என்பதை நம்பகமான மதிப்பீடுகள் காட்டுகின்றன். யுத்த வலயத்தில் சிக்குண்டிருந்த பொதுமக்கள் எண்ணிக்கை பற்றிய மிகக் குறைவான மதிப் பீட்டையும் அது வழங்கியதை இவற்றுடன் சேர்த்து பார்க்கும் போது, யுத்த வலயத்தில் இருந்த பலரை அல்லது அநேகமானவர்களை எல்ஈ உடன் சம்பந்தப்படுத்தி இந்த மூலக் கோட்பாட்டைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள அது தவறியுள்ளது என்பதை இவை குறிக்கின்றன.

(இ) பொதுமக்கள் அல்லது பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவது மீதான தடை 196. பொதுமக்கள் அல்லது பொது மக்கள் இலக்குகளைத் தாக்குவதை சர் வதேச மனிதாபிமான சட்டம் தடை செய்கிறது.

இராணுவ இலக்குகள் மற்றும் போராளி களுக்கு எதிராக மாத்திரம் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் (விதி 7, ஐசிஆர்சி ஆய்வு). "மரபு ரீதியிலான சர்வதேச சட்டத்தில், பொதுமக்களை இலக்குப் பார்ப்பது நிபந்தனையற்ற மற்றும் சந்தேகமற்ற விதத்தில' தடைசெய்யப்பட்டுள் ளது. மேலும், பகை நடவடிக்கைகள் காரணமாக காயமடைந்த, நோயுற்ற மற்றும் பொதுமக்கள் தங்குவததற்காக அமைக்கப் பட்ட வலயம் ஒன்றின் மீது தரப்பினர் தாக் குதலை மேற்கொள்ளக் கூடாது (விதி 35, ஐசிஆர்சி ஆய்வு).

யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்களுக்கு அண்மித்து எல்ஈ இருந்தது தொடர்பாக, ஐசிவை இனை உள்ளிட்ட சர்வதேச நீதி மன்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மீதான தடை சனத்தொகையைப் பாது காக்கும் விதத்தில் "அதிகமான பொதுமக்களைக் கொண்டது' என விளக்கமளித் துள்ளன, 197. இலங்கையைப் பொறுத்த வரை, தனியார் பொறுப்புச் சட்டத்தின் சூழ் நிலைப் பொருத்தத்தின் அடிப்படையில் இத்தடையின் மனோதத்துவ அடிப்படைக் கூறினை கவனத்துக்கெடுத்துக் கொள்வது அசியமாகும்.


ஐ.சி.ஆர்.சி.க்கு கடுமையான தடைகள் ஏற்படுத்தப்பட்டன: ஐ. நா. நிபுணர்குழு அறிக்கை (பாகம்) - 11

(69)

198.
வேண்டுமென்றே அல்லது கண்மூடித்தனமாக, பொதுமக்களைத் தாக்கு வதற்கான அத்தகைய நோக்கத்தை நிர்ணயிப்பது தொடர்பாக, "பொதுமக்களை இலக்குப் பார்ப்பதற்கான நோக்கத்தை நிரூபிக்க முடியும். நேரடி அல்லது மறைகமான சாட்சியங்களைக் கொண்டு குறிப்பிட்டதொரு தாக்கமடைவோர்களைத் தாக்குவதற்கான நோக்கத்துக்கான தேவை இல்லை என்பதோடு, மாறாக பொதுமக்கள் சனத்தொகையை அத்துடன் குறிப்பிட்ட பொதுமக்களை தாக்குதலின் நோக்காகக் கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது' என ஐ.சி..வை குறிப்பிட்டுள்ளது. தாக்குத லுக்காக மேற்கொள்ளப்பட்ட முறைகள், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்துள்ள தூரம் மற்றும் வெடியின் மூலம் அத்துடன் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தோற்றம் ஆகியவற்றை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்ட விடயம் சார்ந்த அடிப்படையில் பொதுமக்களுக்கு எதிராகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஊகித்தறியலாம்.

199.
இலங்கை இராணுவம் பொதுமக்களைத் தாக்குதலுக்கான தன் இலக்காகப் பாவிக்கவில்லை என்றும் எல்...ஈ.க்கு எதிராகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட் டது என்ற ஏதும் வாதம் தொடர்பாக, சட்ட ப்படியான இராணுவ இலக்கை நோக்கி அதே நேரத்தில் சட்டத்துக்குப் புறம்பாகப் பொதுமக்களையும் இலக்காகக்கொண்டிருந்தால், அத்தகையதொரு தாக்குதல் சட்டவிரோதமானதாகும்.

சட்டப்படி இலக்கினைத் தாக்குவதற்காக இலங்கை இராணுவத்திடம் குறிப்பாக ஆளில்லாத வேவு விமானம் போன்ற ஆயுதங்கள் இருந்ததோடு இலங்கை இராணுவம் பொது இலக்குகளை தாக்கும் போது வன்னிக் கட்டளைத் தளபதி மற்றும் ஏனைய அரசாங்க அதிகாகள் அதுபற்றிப் பலறை அறிவிக்கப்பட்டனர்.

மேலும், ஆஸ்பத்திகளைப் பொறுத்தவரை, சில ஆஸ்பத்திகளில் காயமடைந்த எல்...ஈ. யினர் இருந்திருக்கக் கூடுமென்றிருந்தாலும் அவ்வாஸ்பத்திகள் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக மாறாது என்பது தொடர்பில் சட்டம் தெளிவாகவேயுள்ளது.

அவை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்ட சிவிலியன் இடங்களாகவே இருக்கும்.

200.
இவ்வாறாக, இலங்கை இராணு வம், வேண்டுமென்றே அல்லது கண்மூடி த்தனமாக யுத்த சூன்ய வலயத்தில் பொது மக்களையும் உணவு விநியோக வசைகள் உள்ளிட்ட ஆஸ்பத்திகள் மற்றும் ஏனைய மனிதாபிமான இலக்குகளையும் கொண்ட பொதுமக்கள் இடங்களைத் தாக்குவது தொடர்பான தடையை மீறியுள்ளதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள் இருப்பது குழுவுக்குத் தெளிவாகிறது மேலும், அரசாங்கத்தின் உந்துதல் மீது பொதுமக்கள் சென்ற யுத்த சூன்ய வலயங்களுக்குக் குறுக்கே குறிப்பாக, செல்வீச்சுக்கள் மேற் கொள்ளப்பட்டதற்கான நம்பகமான குற்றச்சாட்டுக்கள், அத்தகைய தாக்குதல்களைத் தடை செய்யும் பொதுவான விதியை மீறி யதையும் குறிப்பதோடு, அதன் பிரதான நோக்கம் பொதுமக்களிடையே பயத்தை ஏற்படுத்துவதாகும். (விதி 2, ஐ.சி.ஆர்.சி ஆய்வு)

--தொடர்ச்சி அடுத்த பதிவுகளில் வரும்..

நன்றி:
வீரகேசரி இதழ்
http://tamilweb.do.am/news இணையதளத்தில் இருந்து எடுத்து இங்கு மறு பதிவிடப்பட்டுள்ளது.