சித்த வைத்திய குறிப்புக்கள்..

சிருங்கி பற்பம் - Sirungi Parpam
Scientific Name: Cevus Equines
Processed in : Agathi Ilai Saaru

Treated for:
அம்மை (Small pox, measles and its varieties), கணைச் சூடு (rickets), பித்த நோய்கள் (diseases of bilious origin), சுவாச காசம் (எலும்புருக்கி நோய் - tuberculosis, emaciation), நெஞ்சுவலி chest pain.

தினமும் இருமுறை உணவுக்கு முன் சிறிதளவு சாப்பிடவும். உப்பு, புளிப்பு, ஆல்கஹால், புகையிலை, அகத்தி, அசைவம் தவிர்த்தால் நன்கு பலனளிக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அரிப்பு, சொறி, சிரங்கு, கரப்பான் - தோல் நோய்கள் 
crotch itch, crotch rot, Dhobie itch, Candida Albicans, Ring worm
அரிப்பு, சொறி சிரங்கு வகைகள் பல வகைப்படும். பெரும்பாலான அரிப்புக்கள் பூஞ்சை எனப்படும் காளான் நுண்ணியிரிகளால் ஏற்படுகிறது.  கெட்டுப்போன ரொட்டியின் மேல் வெள்ளையாய் படர்ந்திருக்கும் காளான் இவ்வகையைச் சேர்ந்தது.

இந்த வகைக் காளான்கள் உடலின் ஈரப்பதம் எப்போதும் இருக்கிற அக்குள் பகுதி, பிறப்புறுப்புப் பகுதி, முழங்கால் மடங்கும் பகுதி, முன் கை மடங்கும் பகுதி போன்ற இடங்களில் பற்றிப் பரவி வளரத் தொடங்கும். கேண்டிடா ஆல்பிகான் - Candidat Albicans போன்ற பூஞ்சைகள் இந்த வகை அரிப்புகளுக்கு பொதுவான காரணம். மிக ஆரம்ப நிலையில் இதை Azole அஸோல் வகையான மருந்துகளின் மூலம் எளிதில் குணப்படுத்தி விடும்.

நாளாக ஆக இந்தக் காளான் உடலின் புண், வேறு ஒரு பாக்டீரியா, பூஞ்சை உள்ளே நுழையும் போது அத்துடன் சேர்ந்து வருவது போன்ற வேறு வழிகளில் நமது ரத்தத்தினுள் நுழைந்து விடுகிறது. ரத்தத்தினுள் இது வளர ஆரம்பிக்கும் போது இதை (Systemic Infections) (இரத்த)மண்டலத் தொற்று என்று கூறுவார்கள். இது இந்நிலையில் மிகவும் ஆபத்தானது. உயிருக்குக் கூட உலை வைத்துவிடும்.

ரத்தத்தில் இது பல்கிப் பெருகுவதால் உடலின் பல இடங்களிலும் அரிப்பு தோன்றும். என்ன மருந்துகள் மேல்பூச்சாக தடவினாலும் பயனளிக்காது. ஏனெனில் இது ரத்தத்திலிருந்து வளர்ந்துகொண்டேயிருப்பதால் வெளிப்புறமாக என்ன மருந்துகள் தடவினாலும் பயனளிக்காது.

இதற்கு அல்லோபதி மருத்துவத்தில் நிறைய ஆன்ட்டிபயோடிக்குகளைக் கொடுத்து மாதக்கணக்கில் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டி வரும். சித்த மருத்துவத்திலும் அதே போல மாதக் கணக்கில் மருந்துகள் சாப்பிடவேண்டி வரும். மேல்பூச்சாக தடவும் அஸோல்(Azole) மருந்துகளுடன் சித்த மருந்தில் ரத்தம் சுத்திகரிப்புச் செய்யும் மருந்துகளையும் சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

சித்த மருத்துவத்தில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் மூலிகைகளாக பரங்கிப்பட்டை, நெல்லிக்காய், வில்வம், வல்லாரை, வெங்காயம், அருகம்புல் (எல்லாமே சித்த மருந்துக் கடைகளில் பொடியாக கிடைக்கும்) போன்ற இயற்கை மூலிகைகள் பயன்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையோ காலை மாலை வேளைகளில் உணவுக்கு சற்று முன் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு தண்ணீருடனோ, வென்னீரிலோ கலந்து வாயில் போட்டு ஒரு நிமிடம் வைத்திருந்து பின் விழுங்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு விடும். அதில் வளரும் கிருமிகள் அழிக்கப்பட்டிருக்கும்.

இதில் அருகம்புல்லும், வில்வமும், குப்பை மேனியும் சாதாரண அரிப்பையும், படர்தாமரை(Ring Worm) எனப்படும் தோல் வியாதியையும் உடனே போக்கி மிக விரைவில் பலன் தரும். வில்வம் பித்தத்திற்கும் மிகச் சிறந்த மருந்து. காசநோய்(T.B. - tuberculosis) மற்றும் இளைப்பு வியாதிக்கும்(Asthma) கூட வில்வத்தை பயன்படுத்துவார்கள்.

இவ்வாறான மூலிகைகளைக் உள்ளே உட்கொண்டு ரத்த சுத்திகரிப்பு செய்து கொண்டே வெளிப்பூச்சு மருந்துகளை அரிப்பு / சிரங்கு ஏற்படும் இடங்களில் தடவி வந்தால் விரைவில் அரிப்பு குணமாவதோடு, நிரந்தரமாகவும் அரிப்பு நோய் தீரும். இதை சரியாக கடைபிடித்தால் 3 முதல் ஆறு மாதங்களில் அரிப்பு நோயை குணமாக்கமுடியும். உள்ளே சாப்பிடும் மருந்துடன் வெளிப்பூச்சு மருந்தும் உபயோகித்தால் நோயை விரைவில் குணப்படுத்த முடியும்.

இதில் பரங்கிப்பட்டை சித்தமருத்துவத்தில் மேகம்,  பாலியல் நோய்கள் எனப்படும் வி.டி போன்ற நோய்கள், மற்றும் தொழுநோய் போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.


அருகம்புல் :
அருகம்புல் முழு செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சிறுநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர், லிவர் ஃபெயிலியர், சிறுநீரகக் கற்கள், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், அக்கி என்னும் தோல் நோய், உள் மூலம், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர்.
 அருகம்புல்லையும், மஞ்சளையும் அரைத்து எக்ஸிமா, ரிங்வார்ம், படைகள், வண்டுக்கடி போன்ற தோல் நோய்கள் மீது களிம்பாகப் பூசுவார்கள். பொதுவாக 10 முதல் 20 மில்லி வரை அருகம்புல் சாற்றை மருந்தாக குடிக்கச் செய்வார்கள். அருகம்புல்லை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து பார்த்ததில் நச்சுக் கிருமிகளைக் கொல்லும் மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
 நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.

வேம்பு:
 வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.
நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால்  குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

சோற்றுக்கற்றாழை!கற்றாழையின் சோற்றை எடுத்து புதிதாக தினமும் மேலே பூசிவர வெண்படை குணமாகும். இது ரத்தத்தை சுத்திகரித்து தோல் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்க வல்லது.

கரப்பான் எனப்படும் தோல் அரிப்பு நோய் கால்களில் துவங்கி உடலெங்கிலும் பரவக்கூடியது. கருப்பு நிறத்தில் ஆங்காங்கே தோலில் தழும்புகள் போல் காணப்படும். ஏதாவது ஒவ்வாமையான பொருளை உட்கொண்டாலோ அல்லது அலர்ஜி எனப்படும் தன்மையான சூழலில் நாம் இருக்க நேர்ந்தாலோ இது அரிக்க ஆரம்பித்துவிடும். அதை சொரிந்தால் அதிலிருந்து நீர் பரவி மேலும் கை விரல்கள், தோள் பட்டை, காது என எல்லா இடங்களுக்கும் பரவும். சின்ன சிவப்பு கொப்புளங்கள் தோன்றி அரிப்பை உண்டு பண்ணும். 

கரப்பான் வியாதியால் ஏற்படும் அரிப்பை போக்க வேப்பிலை, அருகம்புல், மஞ்சள் கலவை பயன்படுகிறது. இவற்றை வெளிப்பூச்சாக கலந்து பூசி பின் 2 மணி நேரத்தில் வெந்நீரால் கழுவ வேண்டும். இவற்றை உள்ளே மருந்தாகவும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர தோல் வியாதிகள் தீரும்.

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. எனக்கு பால்வினை நோய் இருக்கின்றது அதனால் இப்போது உடல் அரிப்பு உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும்

    ReplyDelete
  3. மண்டை கரப்பான் தீர வழி என்ன?

    ReplyDelete
  4. தமிழ் மருந்து தமிழர்களின் சொத்து!

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.