Saturday, July 1, 2017

தூக்கமின்மை, மன அழுத்தம் தீர இயற்கை மருந்து

மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் யாருடனும் சரியாகப் பேசமாட்டார்கள். உம்மென்றே இருப்பார்கள். சோகமாகவோ அல்லது கோபத்துடனோ காணப்படுவார்கள். நிகழ்வுகள் எதிலும் சகஜமாக பங்கெடுத்துக் கொள்ளமாட்டார்கள். எதையோ பறிகொடுத்த மாதிரியே இருப்பார்கள்.

இதைச் சரிசெய்ய துளசி, புதினா, பன்னீர் ஆகியவற்றை அரைத்து சம அளவு கலந்து எடுத்து வடிகட்டி தினமும் காலை, மாலை இருவேளையோ அல்லது மூன்று வேளையோ உணவுக்கு முன்பு குடித்து வர மன அழுத்தம் படிப்படியாகக் குறையும்.

பொருட்கள்:
துளசி இலைச் சாறு 50 மிலி.
புதினா இலைச் சாறு 50 மிலி
பன்னீர்                 20 கிராம்.

புதினா, துளசி இரண்டையும் சம அளவு சேர்த்து அரைத்தும் சாறு எடுக்கலாம்.

இந்தச் சாற்றை கெட்டியாக தண்ணீர் விடாமல் அரைத்து அந்த விழுதை கண்களை மூடி கண்கள் மேல் வைத்து அரை மணிநேரம் அமைதியாகப் படுத்திருந்தால் அல்லது இரவு உறங்கும் போது கண்களின் மேல் வைத்து தூங்கினால் கண்களைச் சுற்றி உருவாகும் கருவளையம் சரியாகும்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.