Thursday, March 7, 2013

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மான நாடகம் - இந்தியா தயக்கத்துடன் ஆதரித்தது



ஐ.நா.வில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் 24 ஆதரவு ஓட்டுக்களும், 15 எதிர் ஓட்டுக்களும் பெற்று வெற்றி பெற்றது (உடனே சந்தோஷப்பட்டுக்காதீங்க). 8 நாடுகள் எங்களுக்கு ஓட்டுப் போட இஷ்டமில்லைன்னுட்டு கழன்று கொண்டன. தீர்மானத்துக்கு ஆதரவாக(இலங்கைக்கு எதிராக) ஓட்டுப் போட்ட
அமெரிக்கா, இத்தாலி, மெக்ஸிகோ, ஆஸ்திரியா, நார்வே, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ரோமானியா, உள்ளிட்ட 24 நாடுகளுடன் கடைசிவரை இங்கிட்டா அங்கிட்டா என்று எந்தப் பக்கம் தாவுவது என்று பயங்கரமாக யோசித்து கடைசி வினாடியில் இந்தியாவும் சேர்ந்து கொண்டது. தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளில் சீனா, ரஷ்யா, கியூபா (இதுதான்டா கம்யூனிசம்), பங்களாதேஷ், தாய்லாந்து, சவூதி அரேபியா, க்வைத், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகள் அடக்கம்.

அப்பாடா இலங்கைக்கு எதிரான தீர்மானம் வந்தாச்சீ (சிங்கம் களமிறங்கிடுச்சீ..) இனி ராஜபக்சேல இருந்து கோத்தாபய(முன்னாடி 'ங்' சேக்கலைங்க) ராஜபக்சே வரை எல்லாருக்கும் தூக்குத் தண்டனை நிச்சயம்னு  நாம் நீதி கிடைச்ச சந்தோஷத்துல துள்ளிக் குதிக்க ஏதுமில்லை என்பது தான் உண்மை. இதைப் புரிஞ்சிக்கணும்னா கொஞ்சம் போனவருஷத்துக் கதையை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கனும்.

ஈழத்துல போர் நடந்தப்பவே அமெரிக்காவுல இருந்து சீனாவுல இருந்து இந்தியா வரைக்கும் எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை என்னான்னா "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்ற சொல்லாடல்ல கதை கட்டி இந்த உலகமயமாக்கல் காலத்துலயும் தனித்து திறமையா போராட முடிஞ்ச உலகின் சக்தி வாய்ந்த புரட்சி இயக்கமாக (அதாவது தீவிரவாத இயக்கமா) மாறிட்டு இருந்த விடுதலைப் புலிகளை 'கதம் கதம்' பண்றது தான் எல்லா அரசுகளும் ஒன்று சேர்ந்த மையப் புள்ளி என்பது.  போராளிகளின் கதையை பூண்டோடு முடித்த  இலங்கை வெறும் அம்பு மட்டுமே. வில் சீனாவாக, அமெரிக்காவாக, இந்தியாவாகத் தானிருந்தது.

2009ல் மே மாதம் 17ம் தேதி போர் முடிஞ்சதும் ஐ.நா. பத்து நாட்கள் கழித்து 27ம் தேதியில் கொண்டு வந்த ஒரு தீர்மானம் விடுதலைப் புலிகளை ஒழித்ததற்காக இலங்கை அரசை பாராட்டியும், விடுதலைப் புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தது போன்று மகாக் கொடிய பாபங்களைச்(?) செய்ததால் அவர்களை கண்டித்தும் ஓரு தீர்மானம் நிறைவேற்றியது.  மனித உரிமை மீறல்கள் பற்றி அந்த மனித உரிமைகள் கமிஷன் கண்டுக்கவேயில்லை. தீர்மானத்தை(இலங்கையை) 29 நாடுகள் ஆதரித்தன. 12 நாடுகள் எதிர்த்தன.

ஜூன் 2010ல் பான்-கி-மூன், இலங்கைல என்னதான் நடந்துச்சுன்னு ஆராய்ஞ்சு ஒரு ரிப்போர்ட் தாங்க பாக்கலாம்னு ஒரு மூன்று பேரை நியமிக்கிறார். அவங்களும் கிளம்பி இலங்கைக்கு வந்து நல்லா ராஜபக்சே வீட்ல விருந்தெல்லாம் சாப்டுட்டு திரும்பப் போய் நிறைய மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கிறது வாஸ்தவம் தான். ஆனால் அதுல விடுதலைப் புலிகளுக்கும் பங்குன்னுட்டு போய்ட்டாங்க. இப்படி இலங்கையை ரொம்ப காட்டிக்கொடுக்காத அந்த ரிப்போர்ட்டே கதிகலங்க வைக்கிற உண்மைகளோட இருந்துச்சா, உடனே பான்-பராக்-மூன் ... சாரி... பான்-கி-மூன் அந்த அறிக்கையை தூக்கி குப்பைத் தொட்டில போட்டுட்டார் செல்லாது செல்லாதுன்னுட்டு.

அதுக்கப்புறமா போனாப் போவுதுன்னு இலங்கைக்கு எதிரான விஷயங்களை இன்னும் குறைச்சிட்டு 2011ல் அந்த அறிக்கையை வெளியிட்டாங்க. அதுல ஐ.நா.க்காரங்க சொன்ன தீர்வு தான் ரொம்ப வினோதமானது. "கொன்னது நீங்களே(இலங்கை).. எனவே நீங்களே ஒரு கமிஷன் 'கத்துக்கிட்ட பாடங்களும்' மறுசீரமைப்பும்ன்ற பேர்ல (LLRC - பேர்ல இருந்தே தெரியுது ஐ.நா. விடுதலைப்புலிகளைக் கொன்னது சரிதான்னு நினைக்கிறது..) ஆரம்பிச்சி விசாரிச்சி நீங்களே தீர்ப்பும் குடுத்துக்கோங்க.."ன்னுட்டாங்க, அதாவது கையும் களவுமா பிடிபட்ட திருடன் கிட்ட போலீஸ்காரன் திருட்டுப் பயலே உன்னைப் பிடிச்சிட்டேன், அதனாலே இப்போ உன்னை நீயே தண்டிச்சுக்கோன்னு சொல்லிட்டு போனா மாதிரி... ஏன்னா ஐ.நா.க்காரவுக ரொம்ப ஸ்ட்ரிக்டாம் அடுத்த நாட்டோட 'இறையாண்மை'ல நுழைய மாட்டாங்களாம். அமெரிக்கா ஈராக்கிலும், இந்தியா காஷ்மீரிலும், சீனா பர்மாவிலும் என்னா பண்றாங்களாம் ?

இதுக்கே ஏதோ பதிவிரதையோட விரல் நகத்தை அன்னிய ஆடவன் தொட்டுட்ட மாதிரி குய்யோ முறையோன்னு ராஜபக்சேக்கள் கத்தி எங்களைத் தொடாதே.. தொட்டா என்ன ஆகும் தெரியுமான்னு சவால்லாம் விட்டு, அதை இந்தியா போய் தாஜா பண்ணின்னு காமெடியா நடந்திருக்கு. அத்தோட இன்னொரு காமெடியா இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதும். இந்தத் தீர்மான வெற்றியானதால் என்ன நடக்கும் ?

ஒன்னும் நடக்காது. இலங்கை தான் நியமிச்ச LLRCயின் செயல்பாடுகளையும், பரிந்துரைகளையும் உடனே  செயல்படுத்த வேண்டும். இது தான் இந்தத் தீர்மானத்தின் வெற்றி வலியுறுத்துவது. (எனக்குத் தெரிஞ்சு LLRCயோட பரிந்துரையெல்லாம், மொத்தமா கொன்னா ஒழுங்கா புதைக்கனும்.. பெரிய தலைங்கலைக் கொன்னா, ரேப் பண்ணி கொன்னா உடனே தடயமில்லாம எரிக்கனும்... அப்படின்ற ரேஞ்சுக்கு தான் இருந்தது).

இதுக்கு ஒரு ஓட்டுப் போடச் சொன்னா ஒருத்தர் "இலங்கை நமக்கு எதிரி நாடில்லை மாறாக நட்பு நாடு"ன்னு பார்லிமண்ட்ல இழுக்கிறார். இன்னொருத்தர் பறந்து போய் ராஜபக்சாவைப் பார்க்கிறார் "பதறாதீங்க ராஜபக்ஷே நாங்க இருக்கோம் சப்போர்ட்டுன்னு காதில ஓதிட்டு வர்றார்". இன்னொருத்தார் 'அவங்க நாட்டு உள்விவகாரத்துல நாம தலையிட முடியாது(திருட்டுத் தனமா எட்டி மட்டும் பார்ப்பாங்க போல)' ன்னு மக்களுக்கு புத்திமதி சொல்ல ஆரம்பிக்க, கடைசியில் பாலச்சந்திரனின் கொலையான வீடியோவைப் பார்த்து தமிழகம் கொதிக்க, இன்று கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி என்கிற 50 வயதானவர் 'ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வலியுறுத்தி'தீக்குளித்துவிட்டார். இந்தியா-சோனியா அந்த அளவுக்கு ராஜபக்சேவுக்கு ஸ்ட்ராங் சப்போர்ட்டு.

தமிழகம் நன்றாக தூக்கத்திலும், தொலைக்காட்சி மயக்கத்திலும் இன்னும் வாழ்ந்து வருகிறது.  பாலச்சந்திரன் மரணத்தில் திடீரென்று அது கொதித்து எழுந்ததைக் கண்டு பதறி தமிழர்களை கூல் பண்ணுவதற்காக போடப்பட்ட சந்தர்ப்பவாத ஓட்டே  இந்த இந்தியாவின் ஆதரவு ஓட்டு.

இப்போது சொல்லுங்கள் தீர்மானம் ஐ.நாவில் வெற்றி பெற்றதால் யாருடைய வாழ்வாவது திரும்பக் கிடைக்குமா என்று, இல்லை. ஒருபோதும் இல்லை.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.