Saturday, December 24, 2011

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் மோசடி.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் மோசடி.

என்னப்பா இது. மக்களுக்கு உணவு தருவதை உத்திரவாதப்படுத்த நம்ம பொருளாதாரப் புலி
அண்ணன் மன்மோகன் கொண்டு வந்த திட்டத்தை நீ பாட்டுக்கு மோசடின்னா இன்னா அர்த்தம்
என்று நினைப்பவர்கள் மட்டும் கீழே தொடர்ந்து படிக்கவும். சட்டம் வேற பார்லிமண்டுல நிறைவேறப்
போற நேரத்துல இப்படி சொல்லலாமா ?

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்னன்னு சொல்லிருக்காங்கன்னு முதல்ல பாத்துக்குவோம்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடைய வீட்டிலும் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லாது கிடைத்து
அவர்கள் எல்லோரும் மூன்று வேளை வயிறார, சத்தான உணவு சாப்பிட வழி செய்வதே உணவுப்
பாதுகாப்பு சட்டம் ஆகும்.

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா செயல்ல என்னவா இருக்கு ? அது தான் இங்க பிரச்சனையே.
இப்போ பார்லிமண்ட்டில் நிறைவேறப் போகிற உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி கிராமத்துல 95 சதவீதம்
பேரும், நகரத்துல 55 சதவீதம் பேரும் ரேஷன் அட்டை (Public Distribution system Card) தரப்போறாங்களாம்.
சரிதானேன்னு நீங்க நினைக்கலாம். இதுக்கு முன்னாடி நாட்டுல மொத்தத்துல 65 சதவீதம் பேருக்கு கொடுத்த
ரேஷன் கார்டுகளைப் புடுங்கி பாதியா கட்பண்ணிடுறதுக்கு இது குறுக்கு வழி. இன்னும் சரியா சொன்னா இப்போ
பதிஞ்சிருக்கிற 12 கோடி ரேஷன் கார்டுகளை 6 கோடியா கட் பண்றது தான் அது. என்ன காரணம் சொல்லுறாங்க
இதுக்குன்னா போலி ரேஷன் கார்டு அதிகமாயிடுச்சாம். உண்மைதானே. நாமெ எல்லாருமே ஆளுக்கு 4 ரேஷன்
கார்டு வைச்சுக்கிட்டு அதுல கார், பங்களா வீடெல்லாம் கட்டிட்டோம்ல. போலி ரேஷன் கார்டுகள் இருக்கிறது
உண்மைதான். ஆனா நாட்ல பாதிப்பேரு ப்ராடுன்னு சொல்றதுக்கு என்ன அர்த்தம் அந்த அலுவாலியாவுக்கே வெளிச்சம்.

சரியோ தப்போ நம்ம தமிழ்நாட்டுல இலவச அரசி, ரூபாய்க்கு 2கிலோ போன்ற திட்டங்கள் ஏதோ ஒரு விதத்துல
ஏழைகளை காப்பாத்தவே செய்யுது. அது தான் நம்ம அம்மா கூட இத்திட்டத்தை எதுத்து சத்தம் போடறாங்க.
அவங்க எதை மனசுல வச்சிக்கிட்டு எதுத்து சத்தம் போடுறாங்கன்றது வேற விஷயம். ஆனா மத்திய அரசு இதையெல்லாம்
கண்டுக்கவே கண்டுக்காதுன்றது தான் உண்மை. ஏனா மன்மோகன் அப்பன் உலக வங்கி (world bank) சொல்லிட்டான..
மகனே ஏழை மக்களுக்கு அரிசி கூட கொடுக்க தேவையில்லை.. காசா குடுத்துடு.. அவங்க வேணா அம்பானி
கிட்டயோ, ஸ்பென்சர்லயோ, அண்ணாச்சி கிட்டயோ போய் அந்தக் காசுல அரிசி வாங்கித் தின்னட்டும்னு. ரேஷன்
கடையெல்லாம் கூட ஊழல் இருக்கறதால அத மூடிடுன்னு சொல்லுது. ஆனா உடனே அந்த அளவுக்கு போறதுக்கு மோகன்
அண்ணன் யோசிக்கிறாரு. ஏதாவது பிரச்சனையாயிடுமில்லியா. எல்லோரும் பார்லிமண்ட் வாசலுக்கு வந்து
பார்லிமண்ட் கேன்ட்டீன்ல் 5 ரூபாய்க்கு கிடைக்கிற புல் மீல்ஸை லவட்டிட்டா என்ன பண்றது?

சரி இந்த திட்டப்படி கிராமத்துல 95 சதம் பேருக்கு ரேஷன்ல அரிசி கிடைக்குதேன்னு சந்தோஷப் படாதீ்ங்க.
இந்த 95ல 60 சதம் பேரை கண்டுபிடிச்சு அவுக உண்மையிலேயே ஏழையா இருந்தாத்தான் அரிசி குடுப்பாகளாம்.
அதே மாதிரி நகரத்துல 65 சதவீதம்ல 44 சதவீதம் (தலை சுத்துதா?) பேரை மட்டும் செலக்ட் பண்ணி அவுகளுக்குத்
தான் அரிசி குடுப்பாகளாம். மத்தவக எல்லாம் அவுக சித்தப்பா ரிலையன்ஸ் இருக்காரில்லை, அங்க போய்
வாங்கிக்க வேண்டியது தான். நல்ல அரிசியா கிடைக்குமாமே.

சரி இந்த சதவீதமெல்லாம் எப்புடிப்பா கணக்கு பண்றாங்க. ஒரு பிகர் கணக்குப் பண்றதுக்குள்ளே நமக்கு முழி
பிதுங்குதுன்னு நினைப்பவர்களுக்கு சொல்றேன். வறுமைக் கோடு, வறுமைக்கோடு அப்படின்னு ஒரு கோடு
இருக்கு. எங்க இருக்குன்னு கேக்காதீங்க. அது சும்மா மன்மோகன் அண்ணாச்சியும், அன்னை சோனியாவும்
ஏற்கனவே இருந்ததை அழிச்சுட்டு போட்ட புது கோடு. அந்தக் கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளவங்கள்ளாம்
நல்லா சம்பாரிச்சி, மூணு வேளை தின்னுட்டு பெருசா ஏப்பம் விடுறவங்க. கோட்டுக்கு இந்தப்பக்கம் உள்ளவங்க
சோறு சரியா திங்காத வெத்து வயிறு புரண்டு குர்ருன்னு ஏப்பம் விடுறவங்க.

இந்தக் கோட்டுக்கும் வறுமைக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் இன்னாபா சம்பந்தம்னு சண்டைக்கு வராதீங்க.
சொல்றேன். இந்த கோட்டுக்கு கீழே இருக்கிறவுகள குறி வைச்சுதான் உணவுப் பாதுகாப்பு சட்டம், ரேஷன்
கடை எல்லாம் அரிசி, பருப்பு எல்லாம் தரும். மத்தவுகளுக்கு கிடையாது. இதுல டெக்னிக் என்னன்னா
கோட்டை எங்கன போட்டா ஒரு ஊருக்கு நாலு பேரு கூட வறுமைக் கோட்டுக்கு கீழே வரமாட்டங்கன்னு பாத்து
அஙகன கோட்டைப் போட்டுட்டாரு நம்ம கில்லாடி அண்ணாச்சி மன்மோகன். அதுக்கு ஒரு துப்புக் கெட்ட.. சாரி
திட்டக் கமிஷன்.

இந்த திட்டக் கமிஷன் என்னா சொல்லுச்சுன்னா ஒரு நாளைக்கு 32 ரூபா நகரத்துல செலவழிக்க முடிஞ்சவங்களும்,
கிராமத்துல 20 ரூபா செலவழிக்க முடிஞ்சவங்களும் வறுமைக் கோட்டுக்கு மேல இருக்காங்கன்னு சொல்லிடுச்சு.
அதாவது தாம்பரத்துல 32 ரூபாயோட டவுன் பஸ்ல ஏறி சென்டரல் வந்துட்டு ஒரு டீ, வடை சாப்பிட்டுட்டு கைல
பைசா இல்லாம திரும்பி வீட்டுக்கு போனீகன்னா நீங்க வறுமைக் கோட்டுக்கு மேல. புரிஞ்சதா?
வீடு போறப்போ திருட்டு ரயில்ல போனா அந்தச் செலவு மிச்சம். அப்போ மிச்சப்படுற காசுனால நீ்ங்க அம்பானிக்கு
அடுத்த ஆளா ஆயிடுவீங்க. எப்படி புள்ளி விவரம் ?

சரி இப்படி திருட்டுத் தனமா மானிய விலை அரிசி வாங்குற ஆளுகளைக் குறைக்கறாங்கன்னா ஏதாவது காரணம்
இல்லாமயா? நாட்டு மக்கள் தொகை கூடிட்டே போகுதுல்ல.. அரிசி பத்தாக்குறை இருக்கும்ல.. என்று அக்கறைப்
படும் அம்பியா நீங்கள். உங்களுக்கு ஒரு விவரம். கடந்த பத்து வருஷத்துல நாட்டுல கவர்மெண்ட் குடோன்கள்ல
சரியா பராமரிக்காம, எலி திங்க விட்டு, சரியான ஏசி பண்ணாத குடோன்ல வச்சி புழுத்துப் போன அரிசி எவ்வளவு
தெரியுமா? ஏழு லட்சம் டன். சும்மா நான் சொல்லலை. நம்ம தேசிய உணவுக் கழகம்(Food Corporation of India)
ஷர்மான்னு ஒரு ஆள் RTI சட்டத்துல(தகவல் அறியும் சட்டம்) கேட்ட கேள்விக்கு சொன்ன புள்ளி விவரம் இது.
இப்போ புரியுதா ஏன்டா இந்த தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்தோம்னு காங்கிரஸூக்காரன் எல்லாம்
புலம்புறது ஏன்னு ? இந்த ஏழு லட்சம் டன் அரிசியை வைச்சு நாட்ல எல்லோருக்கும் சும்மாவே வருஷம் பூராச்
சோறு போடலாம் தெரியுமா.

அதுக்குத் தான் நம்ம தேசபக்த அம்பானி அண்ணாச்சி கவருமென்ட் கிட்ட உள்ள குடோன் எல்லாத்தியும் சீப்பா
வாடகைக்கு எடுத்து அவுரு தனியார் மார்க்கெட்டுல வுடுற அரிசியை நல்லா ஏசில வச்சி பாதுகாத்து கொடுத்து
கிட்டு இருக்காறே அவர் கடையில அரிசி வாங்கி திங்க வேண்டியது தான. என்ன நான் சொல்றது?

ஏ.. ஆளை விடப்பா எவன் எந்தக் கோட்ல நின்னா என்ன..எக்கேடோ கெட்டா என்ன.. பார்லிமண்டை ஒழுங்கா நடக்க
விடப்பா.. பார்லிமண்ட் ஸ்டால்ல டீ, வடையெல்லாம் டெய்லி விக்காம வீணாப் போகுதுன்னு நம்ம மன்மோகன்,
பாஜக இத்துவானி..சாரி அத்துவானி அப்புறம் லொள்ளு பிரசாத்து, மம்தாஜி, பிரகாஷ் காரத்து ஜி எல்லாரும் கூடிப் பேசி
பார்லிமண்டை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. இதென்ன ஸ்கூலா ? ஒரு நாளைக்கு நடக்காட்டியும் பாடம் போச்சேன்னு
பதற்றதுக்கு. நாளைக்கு ஏதாவது மாசோதா.. மசாலா இல்லை.. மசோதா.. எல்லோரும் வீட்ல டெய்லி ஒரு பாட்டில்
அக்காபீனா தண்ணிய வாங்கியே ஆகனும்னு நிறைவேறினால். அப்படியா.. தண்ணி நல்லா இருக்குமான்னு கேக்குற
கோஷ்டியாச்சே நாம எல்லாம். இதை என்னத்துக்கு கண்டுக்கணும்கிறேன்.


தேவைப் பட்டா கீழே இருக்கிற சுட்டியைக் கூட படிங்க..

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.